valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 2 February 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

உயிர் வாழும் பிராணிகளில் வேற்றுமை உண்டு. ஆயினும் அவற்றுள் உறையும் ஆத்மா வேறுபாடற்ற ஒன்றே, ஆத்மா செயல்புரிவதில்லை; பலனை அனுபவிப்பதும் இல்லை. ஆத்மா என்றும் அசுத்தமாவதில்லை; பாவபுண்ணியங்களுக்கு அப்பாற்பட்டது. ஆத்மா செயல் புரிய பந்தப்பட்டது அன்று.   'நான் உயர்ந்த ஜாதி பிராமணன்; மற்றவர்கள் நீசமான ஜாதியை சேர்ந்தவர்கள் என்ற பேதப்படுத்திப் பார்க்கும் உணர்வு இருக்கும்வரையில் கருமபந்தங்களில் உழல்வது அவசியமாகிறது'.

'நான் உருவமற்றவன்; அனைத்தும் ஒன்றே; என்னைத் தவிர வேறெதுவமே இல்லை; நான் எல்லாவற்றிலும் வியாபித்திருக்கிறேன்' - இதுவே தன்னைப்பற்றிய உண்மையான ஞானம்.

பூரணமான ப்ரம்மத்தோடு ஒன்றிய ஜீவாத்மா அதிலிருந்து பிரிந்துவிட்டது. மறுபடியும் முன்போலவே பிரம்மத்துடன் ஐக்கியமாகிவிட வேண்டும் என்பதே ஜீவாத்மாவின் நிச்சயமான குறிக்கோள்.

சுருதிகளும் (வேதங்கள்) ஸ்ம்ருதிகளும் (வாழ்க்கை நெறி நூல்கள்) வேதாந்தமும் (தத்துவ நூல்கள்) உரைக்கும் சித்தாந்தம் இதுவே. 'எது நழுவிப் போய்விட்டதோ, அது மறுபடியும் வந்து, பிரம்மத்துடன் ஐக்கியமாகிவிடவேண்டும்.'

எல்லா உயிரினங்களுக்குள்ளும் இறைவன் சமமாக உறைந்திருக்கின்றான் என்கிற மனோபாவம் நம்மிடம் வாராதவரையில், எல்லா உயிர்களுக்குள்ளும் உறையும் இறைவனாற் கூட ஞானதீபத்தை ஏற்ற முடியாது!

சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட கர்மாக்களை சித்தசுத்தியுடன் செய்துகொண்டு வந்தால், மனம் பரிசுத்தமாகி, படிப்படியாக பேதம் பாராத நிலை உருவாகும். சோகம், மயக்கம், சபலங்கள் இவற்றை ஒதுக்கி தள்ளும் சுத்தமான ஞானம் தன்னைத்தானே வெளிப்படுத்திக்கொள்ளும்.

மூவுலகங்களிலும் உள்ள சராசரங்களில் (நகரும் நகராப்பொருள்களில்) வியாபித்திருக்கும் இறைவனாகிய பரமேச்வரன், செயல்புரியாதவன்; மாற்றமில்லாதவன்; தூய்மை ஆனவன்; அப்பாலுக்கும் அப்பாற்பட்டவன்; உருவமில்லாதவன்; என்றும் நிலைத்திருக்கும் சத்தியம்.

பெயர்களும் உருவங்களும் நிறைந்த இந்த சிருஷ்டியில், உள்ளும் புறமும் நிறைந்திருக்கும் இறைவன் நானே. விசேஷமான லக்ஷணங்கள் ஏதுமில்லாது அனைத்தையும் வியாபித்திருக்கும் அவனே நான்; நான் மாத்திரமே.

உண்மையில் உருவமே இல்லாதது, மாயையால் உருவமுள்ளது பொல்லாத தோன்றுகிறது; விருப்பங்களாலும் ஆசைகளாலும் நிறைக்கப்பட்டவனுக்கே இந்த சம்சாரம். அவற்றை வென்றுவிட்டவனுக்கு இது சாரமில்லாத உலகம்.

ஒரு விஷயம் சந்தேகமில்லாமல் நிர்த்தனமாக அறியப்பட வேண்டும். பஞ்ச பூதங்களாலும் உயிருள்ள ஜந்துக்களாலும் உயிரில்லாத ஜடப்பொருள்களாலும்  நிறைந்த இவ்வுலகம், இரண்டற்ற ஒன்றேயான பரம்பொருளே. 


No comments:

Post a Comment