valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Wednesday 25 January 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

ஆனால், இவ்வாறு நடந்தது என்பதென்னவோ உண்மை. தாசகணு ஆச்சரியமடைந்தார். அவருடைய சந்தேகம் தெளிந்து, ஈசாவாஸ்யத்தின் அர்த்தம் புரிந்துவிட்டது.

இந்தத் திட்டங்களும் யுக்திகளும் எதற்காக? அங்கேயே, அப்பொழுதே, பாபாவே இந்த சந்தேகத்தை நிவிர்த்தி செய்திருக்கலாமே என்று கதை கேட்பவர்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம்.

அவரே, அங்கேயே அதைச் செய்திருக்க முடியும். ஆனால், இந்த சம்பவத்தின் மஹிமை எவருக்கும் கிடைத்திருக்காது. ஏழை வேலைக்காரச் சிறுமியினுள்ளும் இறைவன் உறைகின்றான் என்பதையே பாபா நிதரிசனமாகாச் செய்து காண்பித்தார்.

ஆத்மாவைப்பற்றிய ஞானத்தை அளிப்பதே எல்லா உபநிஷதங்களின் சீரிய நோக்கமாகும். அதுவே மோக்ஷதர்மத்தின் சாரம்; அதுவே ஸ்ரீமத் பகவத் கீதையின் உபதேசமுமாகும். 


No comments:

Post a Comment