valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 19 January 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

அந்தச் சிறுமியின் வறுமை இறைவனின் ஓர் அம்சம்; நைந்துபோன புடவையிலும் அந்த அம்சம் இருந்தது. தானம் கொடுத்தவர், தானம் கொடுத்த பொருள், தானம் கொடுத்த செய்கை - இவை அனைத்திலும் ஊடுருவி இருப்பதும் அந்த ஒன்றான பரம்பொருளே.

"நான்", "என்னுடையது" என்னும் உணர்வுகளை அறவே ஒழித்துவிட்டு பற்றற்ற செய்கைகளை செய்துகொண்டு வாழ்வாயாக. இறைவன் அளிப்பதை தியாக பூர்வமான உணர்வுடன் ஏற்றுக்கொள். எவருடைய உடைமைக்கோ சொத்துக்கோ ஆசைப்படாதே."

இதுவே பாபாவின் அமோகமான திருவாய்மொழி; இதனுடைய பிரமாணம் பலரால் உணரப்பட்டது. வாழ்நாள் முழுவுதும் ஷிர்டியை விட்டு எங்கும் செல்லாமலேயே, பக்தர்களுக்கு அவர் எங்கும், எதிலும் - ஜனக்கூட்டம் நிறைந்த இடங்களிலும் ஜனநடமாட்டமே இல்லாத வனங்களிலும்-  காட்சி அளித்தார்.

நினைத்த மாத்திரத்தில், அவர் சிலருக்கு மச்சித்தர்க்கட்டிலும் பலருக்கு கோல்ஹாபூர், சோலாப்பூர், இராமேச்வரம் போன்ற நகரங்களிலும் காட்சியளித்தார்.

சிலருக்கு தாம் எப்பொழுதும் இருக்கும் உருவத்திலும் உடையிலும் காட்சியளித்தார். மற்றவர்களுக்கு பகலிலோ, இரவிலோ, விழித்திருக்கும்போதோ, கனவிலோ, அவர்களைத் திருப்தி செய்யும் வகையில் தரிசனம் அளித்தார்.

இம்மாதிரியான அனுபவங்கள் ஒன்றில்லை, இரண்டில்லை! ஓ, நான் எத்தனையைச் சொல்லி வர்ணிப்பேன்? பாபா ஷிர்டியில் வசித்தாலும் எவரும் அறியாதவாறு எங்கெங்கோ சென்றுவந்தார்.

இந்த வேடிக்கையைப் பாருங்கள்! யார் இந்தச் சிறுமி? யாருக்கு உறவு? அவள் ஓர் ஏழை வேலைக்கார பெண். ஆரஞ்சு நிறப்புடைவையைப் பற்றி பாட்டு அவளுடைய வாயிலிருந்து எவ்வளவு சகஜமாக வெளிவந்தது!

பாபாவிடம் சந்தேகம் எழுப்பப் படவேண்டும், வீடு வேலை செய்யும் சிறுமி விடையளிக்க வேண்டுமா? அதுவும் காகாவின் வீட்டில் இருந்துகொண்டு! ஈதனைத்தும் மாயையின் விளையாட்டன்றோ?

முதலாவதாக, அச் சிறுமி அங்கிருப்பாள் என்பது பாபாவுக்கு எப்படித் தெரிந்திருந்தது? குறிப்பிட்ட காலத்தில் அவள் எப்படி உபநிஷத விளக்கமளிக்கும் பாட்டைப் பாடினாள்?


No comments:

Post a Comment