valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 12 January 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

பரிதாபகரமான வறுமையில் வாழ்ந்தும், உல்லாசமாகவும் குஷியாகவும் அவள் இருந்ததை பார்த்த தாசகணுவின் மனம் இரக்கத்தால் உருகி, அவர் மோரேச்வரிடம் சொன்னார்.

"உடம்பை சரியாக மறைக்காத அவளுடைய நலிந்த ஆடைகளை பாருங்கள். தயவுசெய்து, அவசியம் அவளுக்கு ஒரு புடவை வாங்கிக்கொடுங்கள். இறைவன் ஆனந்தமடைவான்; உங்களுக்கும் புண்ணியம் சேரும்."

மோரேச்வர் பிரதான் சுபாவமாகவே கருணையுள்ள மனிதர். தாசகணு விநயமாகக் கேட்டு கொண்டவுடனே ஓர் அழகான புடவையை வாங்கிகொண்டுவந்து அச் சிறுமியிடம் அன்பளிப்பாக கொடுத்தார்.

அச் சிறுமி புடவையைக் கண்டவுடன், சோளத்தையும் கம்பையும் கேழ்வரகையும் தினமும் உண்பவனுக்குப் பஞ்சபக்ஷ பாரமான விருந்து கிடைத்தாற்போல் மகிழ்ச்சியடைந்தாள்!

அடுத்த நாள் அச்சிறுமி புதுப்புடவையை அணிந்துகொண்டு வந்தாள். சந்தோஷத்தால் துள்ளிக் குதித்தாள்; நடமாடினால். தன்னுடைய குதூகலத்தை வெளிப்படுத்த, மற்றப் பெண்களுடன் சேர்ந்துகொண்டு தட்டா மாலை ஆதிச்ச சுற்றி சுற்றி வந்தாள். புதுப்புடவை உடுத்திக்கொண்டதால் மற்றப் பெண்களைவிட கம்பீரமாக காட்சியளித்தாள்.  அப்புடைவையின் மீது அவள் மையல் கொண்டாள்!

ஆனால், அடுத்த நாளே தன்னுடைய புதுப்படவையை மடித்துச் சிறப்பான ஆடைகள் அடங்கிய மூட்டையில் கட்டிவைத்துவிட்டு, பழைய கந்தலாடையையே சுற்றிக்கொண்டு வந்தாள். ஆயினும் எவ்விதத்திலும் உற்சாகம் இழந்தவளாக காணப்படவில்லை!

புதுப்புடவையைக் காட்டிக்கொள்ளாமல் மடித்து வைத்துவிட்டு வந்திருந்தபோதிலும், தாசகணுவின் புதுக் கண்ணோட்டத்தில் அவளுடைய பழைய வறுமை காணாமற்போய்விட்டது.

புதுப் புடவையை வீட்டில் வைத்துவிட்டுப் பழைய கந்தலையே கட்டிக்கொண்டு வந்தாலும், அவளுடைய மனதில் வருத்தமென்பதே இல்லை. புதுப்புடவைதான் கிடைத்துவிட்டதே!

வறுமையின் காரணத்தால் கந்தலைக் கட்டிக்கொள்வதும் வசதி ஏற்பட்டபோதும் அதையே செய்வதும் - இதுதான் வறுமையை பெருந்தன்மையுடன் கழிக்கும் யுக்தி போலும். சுகமும் துக்கமும் மனதின் உணர்வுகள்தானே!

தாசகணுவின் புதிர் இவ்வாறு சிக்கறுக்கப்பட்டு, ஈசாவாஸ்ய உபநிஷத சந்தேகங்களை தீர்க்கும் விடைக்கு வழிகாட்டியது; அர்த்தபோதனை கிடைத்துவிட்டது.

இப்பிரமாண்டம் அனைத்திலும் இறைவன் நிறைந்திருக்கும்போது, இறைவன் இல்லாத இடத்தை யாரால் நினைத்துப் பார்க்க முடியும்?

அது பூர்ணம்; இதுவும் பூர்ணம். பூரணத்தில் இருந்து பூர்ணம் உதயமாகியுள்ளது. பூர்ணத்தினின்று பூரணத்தை எடுத்தும், பூரணமே எஞ்சி நிற்கின்றது. 


No comments:

Post a Comment