ஷீர்டி சாயி சத்சரிதம்
சாயி ஏதோ பரிஹாசமாக பேசினார் என்று மக்கள் நினைத்தாலும், அவ்வார்த்தைகளால் விளையக் கூடிய லீலையை ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர்!
வார்த்தைகள் கேலியாகச் சொல்லப்பட்டாலும், அவ்வாறு இல்லாவிட்டாலும் பாபா கூறிய வார்த்தைகள் வீண் போகா.
பாபாவின் திருவாய் மொழி வெறும் சொற்களல்ல; அவை பிரம்ம லிபியாகும். (பிரம்மாவால் ஜீவனின் தலையில் எழுதப்படும் விதி). அதில் ஒரு சொல்லும் வீண் போகாது; தக்க சமயத்தில் நடந்தேறிவிடும்.
இது தாஸ்கணுவின் திடமான நம்பிக்கை; மற்றவர்களுக்கு எப்படியாயினும் சரி. நம்பிக்கை எப்படியோ அப்படியே பலனும் விளையும்.
விசுவாசம் எப்படியோ அப்படியே அதனுடைய பலம். நம்பிக்கை எப்படியோ அப்படியே அதனுடைய பலன். உள்மனதில் எவ்வளவு பிரேமையோ அவ்வளவு தூய்மையான ஞானம் கிடைக்கும்.
ஞானிகளின் சிரோமணியாகிய சாயியின் வார்த்தைகள் எக்காலத்தும் பயனில்லாமல் போகா. 'பக்கதர்களுடைய விருப்பங்களை பூர்த்தி செய்வேன்' என்பது அவருடைய உறுதிமொழி.
குருவினுடைய வார்த்தைகள் என்னும் வீண்போகா. இக்காதையை மனா ஈடுபாட்டுடன் கேளுங்கள். பிறவிப்பிணிகள் அனைத்தும் ஒழியும்; ஆன்மீக சாதனை மார்க்கத்தில் முன்னேறுவீர்கள்.
தாசகணு விலேபார்லேவில் இருந்த காகா சாஹேப் தீக்ஷிதரின் வீட்டிற்குத் திரும்பினார். காகா வின் வீட்டு வேலைக்காரி எவ்வாறு காரியத்தை நிறைவேற்றப் போகிறாள் என்ற ஆர்வத்துடன் இருந்தார்.
அடுத்த நாள் விடியற்காலையில், தாசகணு ஆனந்தமான அரைத்தூக்க நிலையை அனுபவித்துக்கொண்டு படுக்கையில் படுத்திருந்தபோதே ஓர் அற்புதம் நிகழ்ந்தது.
ஒரு குணபிச் சிறுமி (விவசாயம் செய்யும் இனம்) , காதுக்கினிய குரலில் பாடுவதைக் கேட்டார். பாட்டின் இனிமை தாசகணுவின் இதயத்தை கவர்ந்தது.
அந்தப் பாட்டின் நீண்ட ஆலாபனையும் சாஹித்யத்தின் (கவிதையின்) சொற்கட்டும் தாசகணுவின் இதயத்தை சுண்டியிழுத்தன. மனதை பறிகொடுத்து அப்பாட்டை கவனமாகக் கேட்டார்.
அப்பாட்டினுடைய அர்த்தம் அவருடைய மனதை ஈர்த்ததால், படுக்கையிலிருந்து சட்டென்று எழுந்துவிட்டார். ஒருமுகமான மனதுடன் அப்பாட்டைக் கேட்டபின் அவருள் மகிழ்ச்சி பொங்கியது.
"யார் மகள் இவள்? நல்ல ஸ்வரத்துடனும் கம்பீரமாகவும் பாடும் இந்தச் சிறுமி யார்? ஈசாவாஸ்யத்தின் புதிரை வாஸ்தவமாகவே விடுவித்துவிட்டாளே! இவள் யார்?" என்று தம்மைத்தாமே கேட்டுக்கொண்டார்.
சாயி ஏதோ பரிஹாசமாக பேசினார் என்று மக்கள் நினைத்தாலும், அவ்வார்த்தைகளால் விளையக் கூடிய லீலையை ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர்!
வார்த்தைகள் கேலியாகச் சொல்லப்பட்டாலும், அவ்வாறு இல்லாவிட்டாலும் பாபா கூறிய வார்த்தைகள் வீண் போகா.
பாபாவின் திருவாய் மொழி வெறும் சொற்களல்ல; அவை பிரம்ம லிபியாகும். (பிரம்மாவால் ஜீவனின் தலையில் எழுதப்படும் விதி). அதில் ஒரு சொல்லும் வீண் போகாது; தக்க சமயத்தில் நடந்தேறிவிடும்.
இது தாஸ்கணுவின் திடமான நம்பிக்கை; மற்றவர்களுக்கு எப்படியாயினும் சரி. நம்பிக்கை எப்படியோ அப்படியே பலனும் விளையும்.
விசுவாசம் எப்படியோ அப்படியே அதனுடைய பலம். நம்பிக்கை எப்படியோ அப்படியே அதனுடைய பலன். உள்மனதில் எவ்வளவு பிரேமையோ அவ்வளவு தூய்மையான ஞானம் கிடைக்கும்.
ஞானிகளின் சிரோமணியாகிய சாயியின் வார்த்தைகள் எக்காலத்தும் பயனில்லாமல் போகா. 'பக்கதர்களுடைய விருப்பங்களை பூர்த்தி செய்வேன்' என்பது அவருடைய உறுதிமொழி.
குருவினுடைய வார்த்தைகள் என்னும் வீண்போகா. இக்காதையை மனா ஈடுபாட்டுடன் கேளுங்கள். பிறவிப்பிணிகள் அனைத்தும் ஒழியும்; ஆன்மீக சாதனை மார்க்கத்தில் முன்னேறுவீர்கள்.
தாசகணு விலேபார்லேவில் இருந்த காகா சாஹேப் தீக்ஷிதரின் வீட்டிற்குத் திரும்பினார். காகா வின் வீட்டு வேலைக்காரி எவ்வாறு காரியத்தை நிறைவேற்றப் போகிறாள் என்ற ஆர்வத்துடன் இருந்தார்.
அடுத்த நாள் விடியற்காலையில், தாசகணு ஆனந்தமான அரைத்தூக்க நிலையை அனுபவித்துக்கொண்டு படுக்கையில் படுத்திருந்தபோதே ஓர் அற்புதம் நிகழ்ந்தது.
ஒரு குணபிச் சிறுமி (விவசாயம் செய்யும் இனம்) , காதுக்கினிய குரலில் பாடுவதைக் கேட்டார். பாட்டின் இனிமை தாசகணுவின் இதயத்தை கவர்ந்தது.
அந்தப் பாட்டின் நீண்ட ஆலாபனையும் சாஹித்யத்தின் (கவிதையின்) சொற்கட்டும் தாசகணுவின் இதயத்தை சுண்டியிழுத்தன. மனதை பறிகொடுத்து அப்பாட்டை கவனமாகக் கேட்டார்.
அப்பாட்டினுடைய அர்த்தம் அவருடைய மனதை ஈர்த்ததால், படுக்கையிலிருந்து சட்டென்று எழுந்துவிட்டார். ஒருமுகமான மனதுடன் அப்பாட்டைக் கேட்டபின் அவருள் மகிழ்ச்சி பொங்கியது.
"யார் மகள் இவள்? நல்ல ஸ்வரத்துடனும் கம்பீரமாகவும் பாடும் இந்தச் சிறுமி யார்? ஈசாவாஸ்யத்தின் புதிரை வாஸ்தவமாகவே விடுவித்துவிட்டாளே! இவள் யார்?" என்று தம்மைத்தாமே கேட்டுக்கொண்டார்.
No comments:
Post a Comment