ஷீர்டி சாய் சத்சரிதம்
ராமநாமம் ஒழுக்கம் தவறியவர்களையும் கரையேற்றுகிறது. ராமநாமம் அபரிதமான நன்மைகளை அளிக்கிறது. ராமநாமம் பேதமில்லாத வழிபாடு, ராமநாமம் பிரம்மத்தையடையும் வழி.
ராமநாமத்தை இடைவிடாது ஜபிப்பதால், ஜனனமரணச் சூழலில் இருந்து விடுதலை கிடைக்கிறது. ராமநாமத்தை அடிக்கடி உச்சரித்துவந்தால், கோடிவகையில் நன்மை ஏற்படுகிறது.
ராமநாமத்தை கர்ஜனை செய்தால், மஹாவிஷ்ணுவின் சுதர்சனச் சக்கரம் தோன்றி, கோடி விக்கினங்களை அழிக்கிறது. இதுவே தீனர்களை சம்ரக்ஷணம் (நன்கு ரட்சித்தல்) செய்யும் நாமம்.
போதனை செய்வதற்கு சாயிநாதருக்குக் குறிப்பிட்ட இடமோ காலமோ தேவைப்படவில்லை. அமர்ந்திருக்கும்போதும் நடக்கும்போதும் உபதேசங்கள் சஹஜமாகவே வெளிவந்தன.
செவிமடுப்பவர்களே! இது சம்பந்தமாக ஒரு சுவாரஸ்யமான காதையைக் கவனத்துடன் கேளுங்கள். இக் காதை, சாயி எங்கும் நிறைந்திருப்பதையும் அவருடைய தயையும் வெளிக்காட்டும்.
ஒருமுறை, சிரேஷ்டமான (சிறந்த) பக்தரொருவர் வேறொரு மனிதரைப் பற்றி பேசும்போது குதர்க்கமான எண்ணங்களால் கவரப்பட்டு, அவரைக் கடுமையாக விமரிசித்து நிந்தை செய்தார்.
மூன்றாமவருடைய நற்குணங்கள் மறந்து போயின; நிந்தையே பிரவாகமாக பக்தருடைய வாயிலிருந்து வெளிவந்தது. சம்பாஷணையின் முக்கிய விஷயம் அழிந்துபோய், வசையும் நிந்தையுமே கொந்தளித்தன.
தக்க காரணத்தால் ஒருவருடைய நடத்தை இழிவானதாக கருதப்பட்டால், அவரைப் பார்த்து பரிதாபப்பட வேண்டியதே நியாயம்; திருந்துவதற்கான அறிவுரை நேரடியாகவும் அவருடைய முகத்துக்கு எதிராகவும் அளிக்கப்பட வேண்டும். புறங்கூறல் செய்யலாகாது.
'எவரையும் நிந்தனை செய்யக்கூடாது' என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயமே. ஆயினும் அந்த மனப்போக்கை முளையிலேயே கிள்ளாவிடின் அதை உள்ளடக்கி வைக்கமுடியாது.
உள்ளேயிருந்து தொண்டைக்கு வந்து, அங்கிருந்து மெதுவாக நாக்கின் நுனிக்கு வரும். அங்கிருந்து சந்தோஷமாக உதடுகள் வழியாகப் பெருகும்.
மூவலகங்களிலும் தேடினாலும் நம்மை நிந்தை செய்பவனைப் போல ஓர் உபகாரியைக் காணமுடியாது. நிந்தை செய்யப்படுவனுக்கு அவன் பரம மங்களத்தை செய்கிறான்.
சிலர் அழுக்கை நீக்குவதற்கு புங்க கொட்டையை உபயோகிக்கின்றனர். சிலர் சவர்க்காரம் (சோப்பு) போன்ற பொருள்களை உபயோகிக்கின்றனர். நிந்தை செய்பவன் தன்னுடைய நாக்கை உபயோகிக்கிறான். !
ராமநாமம் ஒழுக்கம் தவறியவர்களையும் கரையேற்றுகிறது. ராமநாமம் அபரிதமான நன்மைகளை அளிக்கிறது. ராமநாமம் பேதமில்லாத வழிபாடு, ராமநாமம் பிரம்மத்தையடையும் வழி.
ராமநாமத்தை இடைவிடாது ஜபிப்பதால், ஜனனமரணச் சூழலில் இருந்து விடுதலை கிடைக்கிறது. ராமநாமத்தை அடிக்கடி உச்சரித்துவந்தால், கோடிவகையில் நன்மை ஏற்படுகிறது.
ராமநாமத்தை கர்ஜனை செய்தால், மஹாவிஷ்ணுவின் சுதர்சனச் சக்கரம் தோன்றி, கோடி விக்கினங்களை அழிக்கிறது. இதுவே தீனர்களை சம்ரக்ஷணம் (நன்கு ரட்சித்தல்) செய்யும் நாமம்.
போதனை செய்வதற்கு சாயிநாதருக்குக் குறிப்பிட்ட இடமோ காலமோ தேவைப்படவில்லை. அமர்ந்திருக்கும்போதும் நடக்கும்போதும் உபதேசங்கள் சஹஜமாகவே வெளிவந்தன.
செவிமடுப்பவர்களே! இது சம்பந்தமாக ஒரு சுவாரஸ்யமான காதையைக் கவனத்துடன் கேளுங்கள். இக் காதை, சாயி எங்கும் நிறைந்திருப்பதையும் அவருடைய தயையும் வெளிக்காட்டும்.
ஒருமுறை, சிரேஷ்டமான (சிறந்த) பக்தரொருவர் வேறொரு மனிதரைப் பற்றி பேசும்போது குதர்க்கமான எண்ணங்களால் கவரப்பட்டு, அவரைக் கடுமையாக விமரிசித்து நிந்தை செய்தார்.
மூன்றாமவருடைய நற்குணங்கள் மறந்து போயின; நிந்தையே பிரவாகமாக பக்தருடைய வாயிலிருந்து வெளிவந்தது. சம்பாஷணையின் முக்கிய விஷயம் அழிந்துபோய், வசையும் நிந்தையுமே கொந்தளித்தன.
தக்க காரணத்தால் ஒருவருடைய நடத்தை இழிவானதாக கருதப்பட்டால், அவரைப் பார்த்து பரிதாபப்பட வேண்டியதே நியாயம்; திருந்துவதற்கான அறிவுரை நேரடியாகவும் அவருடைய முகத்துக்கு எதிராகவும் அளிக்கப்பட வேண்டும். புறங்கூறல் செய்யலாகாது.
'எவரையும் நிந்தனை செய்யக்கூடாது' என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயமே. ஆயினும் அந்த மனப்போக்கை முளையிலேயே கிள்ளாவிடின் அதை உள்ளடக்கி வைக்கமுடியாது.
உள்ளேயிருந்து தொண்டைக்கு வந்து, அங்கிருந்து மெதுவாக நாக்கின் நுனிக்கு வரும். அங்கிருந்து சந்தோஷமாக உதடுகள் வழியாகப் பெருகும்.
மூவலகங்களிலும் தேடினாலும் நம்மை நிந்தை செய்பவனைப் போல ஓர் உபகாரியைக் காணமுடியாது. நிந்தை செய்யப்படுவனுக்கு அவன் பரம மங்களத்தை செய்கிறான்.
சிலர் அழுக்கை நீக்குவதற்கு புங்க கொட்டையை உபயோகிக்கின்றனர். சிலர் சவர்க்காரம் (சோப்பு) போன்ற பொருள்களை உபயோகிக்கின்றனர். நிந்தை செய்பவன் தன்னுடைய நாக்கை உபயோகிக்கிறான். !
No comments:
Post a Comment