ஷீர்டி சாயி சரித்திரம்
இப்பொழுது, பாபா அவ்வப்பொழுது திருவாய் மொழிந்ததைக் கேளுங்கள். சர்வ சாதாரணமாகத் தோன்றினும் அவை விலைமதிப்பற்றவை. இவ்விஷயங்களை மனதில் எப்பொழுதும் வைத்திருந்தால், உங்களுக்கு நன்மையையும் நற்பலன்களையும் அளிக்கும்.
"முன்ஜன்ம சம்பந்தில்லாமல் எவரும் எங்கும் போவதில்லை. ஆகவே, மனிதராயினும், மிருகமாயினும், பறவையாயினும், அவமதிப்பு செய்து விரட்டி விடாதே.-
"யார் உன்னிடம் வந்தாலும் தகுந்த மரியாதை கொடு. தாகத்தால் தவிப்பவர்களுக்கு நீரும், பசியால் வாடியவர்களுக்கு உணவும், ஆடையில்லாதவர்களுக்கு துணியும், திக்கற்றவர்களுக்கு இருப்பிடமும் அளிப்பாயாக. இவ்வாறு செய்தால் ஸ்ரீ ஹரி சந்தோஷமடைவார்.-
"யாராவது உன்னிடம் பைசா கேட்டால், உனக்கு கொடுப்பதற்கு இஷ்டமில்லை என்றால் கொடுக்க வேண்டா. ஆனால், பைசா கேட்ட நபர் மீது நாயைப் போல குரைக்கவும் வேண்டா.-
"மற்றவர்கள் உன்னை எதனை வழிகளில் வசைபாடினாலும் கண்டனம் செய்தாலும் நீ எதிர்த்து கசப்பாகவோ மனம் புண்படும்படியாகவோ பேசாதே. அதை பொறுமையுடன் சகித்துக் கொள்வாயாக; அதனால், உனக்கு அபாரமான சுகம் கிடைக்கும். -
"இந்த உலகமே தலைகீழாக மாறலாம். ஆயினும், நாம் வழிதவறி விடக் கூடாது. நம்முடைய நிலையிலேயே உறுதியாக நின்றுகொண்டு அமைதியாக இவ்வுலகை வேடிக்கை பார்க்கவேண்டும்.-
"உனக்கும் எனக்கும் நடுவேயுள்ள மதிற்சுவரை உடைத்து, முழுக்க நாசம் செய்வாயாக. அப்பொழுது நமக்குத் போகவும் வரவும் பயமில்லாத ஒரு பிரசத்தமான(மங்களமான) பாதை கிடைத்துவிடும்.
"குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே உள்ள தடுப்பு சுவர், 'நீங்கள், நான்' என்னும் மனோபாவமே. அதை உடைத்தெறியாவிட்டால் இருவரும் ஒன்றே என்னும் நிலையை அடைய முடியாது.-
"அல்லாவே யஜமானார்; அல்லாவே யஜமானார்! அவரைத் தவிர ரட்சகர் வேறு எவரும் இல்லை. அவருடைய செய்கைகள் உலகியலுக்கு அப்பாற்பட்டவை; விலைமதிப்பற்றவை; கற்பனை செய்து பார்க்கமுடியாதவை!-
"அவர் நினைப்பதே நடக்கும்; அவரே வழியைக் காட்டுவார். நம்முடைய மனதின் இனிய விருப்பங்கள் ஒரு கணமும் தாமதமின்றி நிறைவேறும் நேரம் வரும்.-
"பூர்வஜென்மங்களின் சம்பந்தத்தினால் நாம் ஒருவரையொருவர் சந்திக்கும் பாக்கியம் பெற்றோம். இதயத்தின் அடித்தளத்தில் இருந்து பொங்கும் அனுப்புடன் நாம் ஒருவரையொருவர் தழுவுவோம். சுகத்தையும் சந்துஷ்டியையும் (பூரணமான திருப்தியையும்)அனுபவிப்போம். -
இப்பொழுது, பாபா அவ்வப்பொழுது திருவாய் மொழிந்ததைக் கேளுங்கள். சர்வ சாதாரணமாகத் தோன்றினும் அவை விலைமதிப்பற்றவை. இவ்விஷயங்களை மனதில் எப்பொழுதும் வைத்திருந்தால், உங்களுக்கு நன்மையையும் நற்பலன்களையும் அளிக்கும்.
"முன்ஜன்ம சம்பந்தில்லாமல் எவரும் எங்கும் போவதில்லை. ஆகவே, மனிதராயினும், மிருகமாயினும், பறவையாயினும், அவமதிப்பு செய்து விரட்டி விடாதே.-
"யார் உன்னிடம் வந்தாலும் தகுந்த மரியாதை கொடு. தாகத்தால் தவிப்பவர்களுக்கு நீரும், பசியால் வாடியவர்களுக்கு உணவும், ஆடையில்லாதவர்களுக்கு துணியும், திக்கற்றவர்களுக்கு இருப்பிடமும் அளிப்பாயாக. இவ்வாறு செய்தால் ஸ்ரீ ஹரி சந்தோஷமடைவார்.-
"யாராவது உன்னிடம் பைசா கேட்டால், உனக்கு கொடுப்பதற்கு இஷ்டமில்லை என்றால் கொடுக்க வேண்டா. ஆனால், பைசா கேட்ட நபர் மீது நாயைப் போல குரைக்கவும் வேண்டா.-
"மற்றவர்கள் உன்னை எதனை வழிகளில் வசைபாடினாலும் கண்டனம் செய்தாலும் நீ எதிர்த்து கசப்பாகவோ மனம் புண்படும்படியாகவோ பேசாதே. அதை பொறுமையுடன் சகித்துக் கொள்வாயாக; அதனால், உனக்கு அபாரமான சுகம் கிடைக்கும். -
"இந்த உலகமே தலைகீழாக மாறலாம். ஆயினும், நாம் வழிதவறி விடக் கூடாது. நம்முடைய நிலையிலேயே உறுதியாக நின்றுகொண்டு அமைதியாக இவ்வுலகை வேடிக்கை பார்க்கவேண்டும்.-
"உனக்கும் எனக்கும் நடுவேயுள்ள மதிற்சுவரை உடைத்து, முழுக்க நாசம் செய்வாயாக. அப்பொழுது நமக்குத் போகவும் வரவும் பயமில்லாத ஒரு பிரசத்தமான(மங்களமான) பாதை கிடைத்துவிடும்.
"குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே உள்ள தடுப்பு சுவர், 'நீங்கள், நான்' என்னும் மனோபாவமே. அதை உடைத்தெறியாவிட்டால் இருவரும் ஒன்றே என்னும் நிலையை அடைய முடியாது.-
"அல்லாவே யஜமானார்; அல்லாவே யஜமானார்! அவரைத் தவிர ரட்சகர் வேறு எவரும் இல்லை. அவருடைய செய்கைகள் உலகியலுக்கு அப்பாற்பட்டவை; விலைமதிப்பற்றவை; கற்பனை செய்து பார்க்கமுடியாதவை!-
"அவர் நினைப்பதே நடக்கும்; அவரே வழியைக் காட்டுவார். நம்முடைய மனதின் இனிய விருப்பங்கள் ஒரு கணமும் தாமதமின்றி நிறைவேறும் நேரம் வரும்.-
"பூர்வஜென்மங்களின் சம்பந்தத்தினால் நாம் ஒருவரையொருவர் சந்திக்கும் பாக்கியம் பெற்றோம். இதயத்தின் அடித்தளத்தில் இருந்து பொங்கும் அனுப்புடன் நாம் ஒருவரையொருவர் தழுவுவோம். சுகத்தையும் சந்துஷ்டியையும் (பூரணமான திருப்தியையும்)அனுபவிப்போம். -
No comments:
Post a Comment