valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 25 August 2016

ஷீர்டி சாயி சத்சரிதம்

பிறகு  நான் பாபாவை நமஸ்காரம் செய்துவிட்டு, அவருடைய அருளை வேண்டினேன். நான் சொன்னேன், "உங்களுடைய இந்தக் கிருபைதானமே எனக்குப் போதுமானது! என்னை மன்னித்துவிடுங்கள்."

பாபா கூறினார், "கதையைக் கேட்டுக்கொள்ளும்; அதைபற்றிச் சிந்தனை செய்யும். பிறகு அதையே மறுபடியும் தியானம் செய்யும். அவ்வாறு ஞாபகப்படுத்திக் கொண்டு சிந்தனை செய்தால், மிகுந்த ஆனந்தம் விளையும்.-

"இம்முறையில் உம்முடைய காதுகளால் கேட்டதை நீர் இதயத்தில் சேமித்து வைத்தால், உம்முடைய மங்களம் என்னும் சுரங்கத்தை நீரே திறந்து வைத்தவராவீர். உம்முடைய பாவங்களும் அழிந்துவிடும்.-

"புயற்காற்று அடிக்கும்போது, சமுத்திரத்தின் தண்ணீர் பேரலைகளாக எழும்பிக் கரையை அடைந்து மோதிக் கணக்கற்ற நீர்த்திவலைகளாக பிரிந்து நுரை போன்று தோன்றுகிறது.-

"அலை, நீர்க்குமிழி, நுரை, சுழல்கள், இவையனைத்தும் தண்ணீரின் பல உருவங்களே; நம் கண்ணுக்குத் தெரியும் பிரமைகளே. காற்று தணிந்துவிட்டால், இவையனைத்தும் மறைந்துவிடும்.-

"நீருக்குப் பலவிதமான உருவங்கள் இருந்தன, பிறகு அவை அழிக்கப்பட்டன என்று சொல்லமுடியுமா? அவற்றின் இருப்பும் அழிவும் மாயையினுடைய கைவண்ணம் என்று தெரிந்து கொண்டு அவ்வாறே கருதவேண்டும்.-

"சிருஷ்டியின் மற்ற இயக்கங்களும் இவ்வாறே. விவேகிகள் ஈதனைத்தையும் பொருட்படுத்துவதில்லை. நசித்துப் போகக்கூடிய பொருள்களின்மீது அவர்கள் நாட்டம் வைப்பதில்லை. அதனால், நித்தியமான வஸ்துவை (பொருளை) அடைகிறார்கள். -

"ஞானத்தை விட தியானமே பெரிது; ஆனால், எதை தியானம் செய்யவேண்டும் என்ற தெளிவு இருக்கவேண்டும். இவ்விதமாக, பிரம்மத்தை பற்றி (முழுமுதற் பொருள்) முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் பயனுள்ள தியானம் செய்ய இயலாது.-

"அனுபவத்தால் ஆத்மாவைச் சரியாகப் புரிந்துகொள்வதே தியானத்தின் ஆதாரம். எல்லா விஞ்ஞானங்களுக்கும் மூலம் தியானமே. தனிமனிதனுடைய ஆத்ம அனுஷ்டானம் (தன்னையறியும் வழிமுறை) தியானமே. ஆனால், சிறப்பான குணாதிசியங்கள் ஏதுமில்லாத ஒரு பொருளை எப்படி மனதிற்குள் கொணர்ந்து அதன்மீது தியானம் செய்ய முடியும்?

"இறைவன் சுலபமாக அகப்படுவதில்லை. ஆகவே ஆத்மாவே இறைவன்; யார் இறைவனோ அவரே குரு; இம்மூன்றிற்குள் அணுவளவு பேதமும் இல்லை.-

"திரும்பத் திரும்ப செய்யப்படும் தியானம் பரிபூரணமாகி , தியானத்திற்கும் தியானம் செய்பவருக்கும் இடையே உள்ள வேறுபாடு மறைந்துவிடுகிறது. காற்றடிக்காத இரவில் எரியும் விளைக்கைப் போல மனம் அமைதியாகவும் நிலைபெற்றதாகவும் ஆகிவிடுகிறது. இதுவே சமாதி நிலை.-

"ஆசைகளில் இருந்து விடுபட்டு, எல்லா உயிர்களிலும் இறைவன் உறைகின்றான் என்பதும் இவ்வுலகத்தில் தன்னைத் தவிர வேறெதுவுமே இல்லை என்பதும் தெளிவானபிறகு, பயமென்பதே இல்லாத நிலையை அடையும்போது, தியானத்தின் மூலமாக தன்னைத்தானே ஆத்மா வெளிப்படுத்திக் காட்டுகிறது.-

No comments:

Post a Comment