ஷீர்டி சாயி சத்சரிதம்
"தாய் ஆமை ஆற்றின் ஒரு கரையில் இருக்கிறது. குட்டிகளோ மறுகரையில் மணற்பரப்பில் இருக்கின்றன; அவை பார்வையாலேயே போஷிக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன. ஆகவே நான் கேட்கிறேன், மந்திரத்துக்காக வியர்த்தமாக எதற்குப் பிடிவாதம் பிடிக்கவேண்டும்?-
"நீங்கள் இப்பொழுது போய் ஏதாவது ஆகாரம் சாப்பிடுங்கள். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி கொள்ளாதீர்கள். என்னிடம் உறுதியான விசுவாசம் வைத்தால் ஆன்மீக முன்னேற்றம் தானே கைக்கு எட்டும்.-
"நீங்கள் என்னிடம் அனன்னியமான (வேறொன்றிலும் நாட்டமில்லாத) அன்பு செலுத்துங்கள். நானும் உங்களை அவ்வாறே பாதுகாக்கிறேன். என் குரு எனக்கு வேறெதையும் கற்றுத்தரவில்லை.-
"யோக சாதனைகள் ஏதும் தேவையில்லை; ஆறு சாஸ்திரங்களை அறியவேண்டிய அவசியமும் இல்லை. காப்பவரும் அழிப்பவரும் குருவே என்னும் ஒரே உறுதியான நம்பிக்கையும் விசுவாசமும் இருந்தால் போதும்.-
"இதுவே குருவின் மகத்தான பெருமை. அவரே பிரம்மாவும் விஷ்ணுவும் மஹேச்வரனும் ஆவார். குருவின் முக்கியமான ஸ்தானத்தை உணர்ந்து கொண்டவன் மூவுலகங்களிலும் தண்ணியவன் ஆவான். (பேரு பெற்றவன் ஆவான்.)
இவ்வாறாக, அம் மூதாட்டி போதனை அளிக்கப்பட்டார்; அறிவுறுத்தப்பட்டார்; இக்கதை அவருடைய மனதில் ஆழமாகப் பதிக்கப்பட்டது. தம்முடைய தலையை சாயி பாதங்களில் தாழ்த்தி விட்டு, மூதாட்டி உண்ணா விரதத்தை முடித்துக்கொண்டார்.
இக்கதையை ஆரம்பித்தில் இருந்து கேட்டு, என்னுடைய அன்றைய நிலைமைக்கு அது எவ்வளவு பொருத்தமாக இருந்தது என்பதையும் தெளிவாக அறிந்துகொண்ட பின், என்னுடைய மனம் ஆச்சரியத்தாலும் மகிழ்ச்சியாலும் பொங்கி வழிந்தது. ஓ, எவ்வளவு பொருத்தமான கதை!
பாபாவினுடைய லீலையைக் கண்டு ஆனந்தத்தால் என் தொண்டை அடைத்தது. அபரிமிதமான உணர்ச்சிப் பெருக்கால் நான் திணறிப் போனேன். உன்னதமான இப் படிப்பினை என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.
நான் உணர்ச்சிவசப்பட்டு திக்குமுக்காடிப் போனதை கண்ட மாதவராவ் என்னிடம் கேட்டார். "அண்ணா சாஹேப்! ஏன் இவ்வாறு உணர்ச்சிவசப்படுகிறீர்? ஏன் திடீரென்று மௌனமாகிவிட்டீர்?-
"இம்மாதிரியான பாபாவின் லீலைக் கதைகள் எண்ணற்றவை. நான் எதனை கதைகளைத்தான் சொல்லமுடியும்?" மாதவராவ் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த போதே மணியோசை கேட்டது.
தினந்தோறும் மதிய உணவிற்கு முன்பு, பக்தர்கள் மசூதிக்குச் சென்று அமர்வர். பாபாவினுடைய கைகளையும் பாதங்களையும் அலம்பி, சந்தானம் இட்டு, அக்ஷதையை தூவி, சடங்கு பூர்வமானதும் விஸ்தாரமானதுமான பூஜையை செய்வர்.
பிறகு பாபு சாஹேப் ஜோக் பக்தியுடனும் பிரேமையுடனும் பஞ்சாரதி (ஐந்து தீபங்கள் கொண்ட ஆரத்தி) எடுப்பார். பக்தர்கள் எல்லாரும் சேர்ந்து ஆரதிப் பாட்டைப் பாடுவர்.
"தாய் ஆமை ஆற்றின் ஒரு கரையில் இருக்கிறது. குட்டிகளோ மறுகரையில் மணற்பரப்பில் இருக்கின்றன; அவை பார்வையாலேயே போஷிக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன. ஆகவே நான் கேட்கிறேன், மந்திரத்துக்காக வியர்த்தமாக எதற்குப் பிடிவாதம் பிடிக்கவேண்டும்?-
"நீங்கள் இப்பொழுது போய் ஏதாவது ஆகாரம் சாப்பிடுங்கள். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி கொள்ளாதீர்கள். என்னிடம் உறுதியான விசுவாசம் வைத்தால் ஆன்மீக முன்னேற்றம் தானே கைக்கு எட்டும்.-
"நீங்கள் என்னிடம் அனன்னியமான (வேறொன்றிலும் நாட்டமில்லாத) அன்பு செலுத்துங்கள். நானும் உங்களை அவ்வாறே பாதுகாக்கிறேன். என் குரு எனக்கு வேறெதையும் கற்றுத்தரவில்லை.-
"யோக சாதனைகள் ஏதும் தேவையில்லை; ஆறு சாஸ்திரங்களை அறியவேண்டிய அவசியமும் இல்லை. காப்பவரும் அழிப்பவரும் குருவே என்னும் ஒரே உறுதியான நம்பிக்கையும் விசுவாசமும் இருந்தால் போதும்.-
"இதுவே குருவின் மகத்தான பெருமை. அவரே பிரம்மாவும் விஷ்ணுவும் மஹேச்வரனும் ஆவார். குருவின் முக்கியமான ஸ்தானத்தை உணர்ந்து கொண்டவன் மூவுலகங்களிலும் தண்ணியவன் ஆவான். (பேரு பெற்றவன் ஆவான்.)
இவ்வாறாக, அம் மூதாட்டி போதனை அளிக்கப்பட்டார்; அறிவுறுத்தப்பட்டார்; இக்கதை அவருடைய மனதில் ஆழமாகப் பதிக்கப்பட்டது. தம்முடைய தலையை சாயி பாதங்களில் தாழ்த்தி விட்டு, மூதாட்டி உண்ணா விரதத்தை முடித்துக்கொண்டார்.
இக்கதையை ஆரம்பித்தில் இருந்து கேட்டு, என்னுடைய அன்றைய நிலைமைக்கு அது எவ்வளவு பொருத்தமாக இருந்தது என்பதையும் தெளிவாக அறிந்துகொண்ட பின், என்னுடைய மனம் ஆச்சரியத்தாலும் மகிழ்ச்சியாலும் பொங்கி வழிந்தது. ஓ, எவ்வளவு பொருத்தமான கதை!
பாபாவினுடைய லீலையைக் கண்டு ஆனந்தத்தால் என் தொண்டை அடைத்தது. அபரிமிதமான உணர்ச்சிப் பெருக்கால் நான் திணறிப் போனேன். உன்னதமான இப் படிப்பினை என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.
நான் உணர்ச்சிவசப்பட்டு திக்குமுக்காடிப் போனதை கண்ட மாதவராவ் என்னிடம் கேட்டார். "அண்ணா சாஹேப்! ஏன் இவ்வாறு உணர்ச்சிவசப்படுகிறீர்? ஏன் திடீரென்று மௌனமாகிவிட்டீர்?-
"இம்மாதிரியான பாபாவின் லீலைக் கதைகள் எண்ணற்றவை. நான் எதனை கதைகளைத்தான் சொல்லமுடியும்?" மாதவராவ் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த போதே மணியோசை கேட்டது.
தினந்தோறும் மதிய உணவிற்கு முன்பு, பக்தர்கள் மசூதிக்குச் சென்று அமர்வர். பாபாவினுடைய கைகளையும் பாதங்களையும் அலம்பி, சந்தானம் இட்டு, அக்ஷதையை தூவி, சடங்கு பூர்வமானதும் விஸ்தாரமானதுமான பூஜையை செய்வர்.
பிறகு பாபு சாஹேப் ஜோக் பக்தியுடனும் பிரேமையுடனும் பஞ்சாரதி (ஐந்து தீபங்கள் கொண்ட ஆரத்தி) எடுப்பார். பக்தர்கள் எல்லாரும் சேர்ந்து ஆரதிப் பாட்டைப் பாடுவர்.
No comments:
Post a Comment