ஷீர்டி சாயி சத் சரிதம்
"வெறும் கல் , மணி இவை இரண்டுமே மெருகேற்றுவதற்காக தேய்க்கப் படலாம். எவ்வளவு தேய்ந்தாலும், கல் கல்லாகத்தான் இருக்கும். மணியோ ஒளிவிடும்.-
"இரண்டுமே மெருகேற்றுவதற்காக ஒரே செய்முறையில் தேய்க்கப்படலாம். ஆயினும், வெறும் கல், மணி போன்று ஒளிவிட முடியுமா என்ன?
"ஆகவே நான் பன்னிரண்டு வருடங்கள் குருபாதங்களில் இருந்தேன். நான் வளரும் வரை அவர் என்னை ஒரு குழந்தைபோல் பாவித்தார். உணவுக்கும் உடைக்கும் எவ்விதமான பற்றாற்குறையும் இல்லை. அவருடைய இதயம் என்மீது அன்பால் பொங்கி வழிந்தது. -
"அவர் பக்தியும் பிரேமையுமே உருவானவர். சிஷ்யனிடம் நிஜமான அன்பு கொண்டவர். என் குருவைப்போல குரு கிடைப்பதரிது. அவருடைய சங்கத்தில் நான் அனுபவித்த சந்தோஷத்தை விவரிக்க முடியாது. -
"ஓ, அந்த அன்பை என்னால் எவ்வாறு விவரிக்க முடியும்! அவருடைய முகத்தைப் பார்த்தவுடனே என்னுடைய கண்கள் தியானத்தில் மூழ்கி விடும். இருவருமே ஆனந்த மயமாகி விடுவோம். வேறெதையும் எனக்குப் பார்க்காத தோன்றாது. -
"இரவுபகலாக அவருடைய முகத்தை உற்றுநோக்கவே விரும்பினேன். எனக்குப் பசியோ தாகமோ தெரியவில்லை. அவர் இல்லாவிட்டால், மனம் அவஸ்தைப்பட்டது.-
"அவரைத் தவிர வேறெதென் மேலும் என்னால் தியானம் செய்யமுடியவில்லை. அவரைத் தவிர எனக்கு லட்சியம் ஏதும் இல்லை. அவரே நான் எப்பொழுதும் கடைப்பிடிக்க வேண்டிய குறிக்கோள். குருவினுடைய திறமை அதியற்புதமானது.-
"என் குருவும் இதையே எதிர்பார்த்தார். இதற்குமேல் எதையும் எதிர்பார்க்கவில்லை. அவர் என்னை எப்பொழுதும் அலட்சியம் செய்ததில்லை; கவனிக்காமல் விட்டதுமில்லை; சங்கடங்களில் இருந்து என்னை எப்பொழுதும் ரக்ஷித்தார்.-
"சில சமயங்களில் நான் அவருடைய காலடிகளில் இருக்க அனுமதிக்கப்பட்டேன். சில சமயங்களில் கடல் கடந்து இருந்தேன்". ஆயினும் எப்பொழுதும் அவருடைய சங்கம கூடுகை சுகத்தை அனுபவித்தேன். அவர் என்னைக் கிருபையுடன் கவனித்துக் கொண்டார்.-
"தாய் ஆமை தன் குட்டிகளுக்கு எப்படி அன்பான பார்வையாலேயே உணவூட்டுகிறேன். அவ்வழிதான் என் குருவினுடையதும், அன்பான பார்வையாலேயே தம் குழந்தைகளை பாதுகாத்தார்.-
"தாயே, இம்மசூதியில் உட்கார்ந்துகொண்டு நான் சொல்வதை பிரமாணமாக எடுத்துக் கொள்ளுங்கள். குரு என்னுடைய காதுகளில் மந்திரம் ஏதும் ஓதவில்லை. அப்படியிருக்க, நான் எப்படி உங்களுடைய காதுகளில் எதையும் ஓதமுடியும்?-
"தாய் ஆமையின் அன்பான கடைக்கண் பார்வையே குட்டி ஆமைகளுக்கு திருப்தியும் சந்தோஷமும் கொடுக்கும். அம்மா! ஏன் உங்களை நீங்களே வருத்திக் கொள்கிறீர்கள்? எனக்கு வாஸ்தவமாகவே வேறெந்த உபதேசமும் செய்யத் தெறியாது.-
"வெறும் கல் , மணி இவை இரண்டுமே மெருகேற்றுவதற்காக தேய்க்கப் படலாம். எவ்வளவு தேய்ந்தாலும், கல் கல்லாகத்தான் இருக்கும். மணியோ ஒளிவிடும்.-
"இரண்டுமே மெருகேற்றுவதற்காக ஒரே செய்முறையில் தேய்க்கப்படலாம். ஆயினும், வெறும் கல், மணி போன்று ஒளிவிட முடியுமா என்ன?
"ஆகவே நான் பன்னிரண்டு வருடங்கள் குருபாதங்களில் இருந்தேன். நான் வளரும் வரை அவர் என்னை ஒரு குழந்தைபோல் பாவித்தார். உணவுக்கும் உடைக்கும் எவ்விதமான பற்றாற்குறையும் இல்லை. அவருடைய இதயம் என்மீது அன்பால் பொங்கி வழிந்தது. -
"அவர் பக்தியும் பிரேமையுமே உருவானவர். சிஷ்யனிடம் நிஜமான அன்பு கொண்டவர். என் குருவைப்போல குரு கிடைப்பதரிது. அவருடைய சங்கத்தில் நான் அனுபவித்த சந்தோஷத்தை விவரிக்க முடியாது. -
"ஓ, அந்த அன்பை என்னால் எவ்வாறு விவரிக்க முடியும்! அவருடைய முகத்தைப் பார்த்தவுடனே என்னுடைய கண்கள் தியானத்தில் மூழ்கி விடும். இருவருமே ஆனந்த மயமாகி விடுவோம். வேறெதையும் எனக்குப் பார்க்காத தோன்றாது. -
"இரவுபகலாக அவருடைய முகத்தை உற்றுநோக்கவே விரும்பினேன். எனக்குப் பசியோ தாகமோ தெரியவில்லை. அவர் இல்லாவிட்டால், மனம் அவஸ்தைப்பட்டது.-
"அவரைத் தவிர வேறெதென் மேலும் என்னால் தியானம் செய்யமுடியவில்லை. அவரைத் தவிர எனக்கு லட்சியம் ஏதும் இல்லை. அவரே நான் எப்பொழுதும் கடைப்பிடிக்க வேண்டிய குறிக்கோள். குருவினுடைய திறமை அதியற்புதமானது.-
"என் குருவும் இதையே எதிர்பார்த்தார். இதற்குமேல் எதையும் எதிர்பார்க்கவில்லை. அவர் என்னை எப்பொழுதும் அலட்சியம் செய்ததில்லை; கவனிக்காமல் விட்டதுமில்லை; சங்கடங்களில் இருந்து என்னை எப்பொழுதும் ரக்ஷித்தார்.-
"சில சமயங்களில் நான் அவருடைய காலடிகளில் இருக்க அனுமதிக்கப்பட்டேன். சில சமயங்களில் கடல் கடந்து இருந்தேன்". ஆயினும் எப்பொழுதும் அவருடைய சங்கம கூடுகை சுகத்தை அனுபவித்தேன். அவர் என்னைக் கிருபையுடன் கவனித்துக் கொண்டார்.-
"தாய் ஆமை தன் குட்டிகளுக்கு எப்படி அன்பான பார்வையாலேயே உணவூட்டுகிறேன். அவ்வழிதான் என் குருவினுடையதும், அன்பான பார்வையாலேயே தம் குழந்தைகளை பாதுகாத்தார்.-
"தாயே, இம்மசூதியில் உட்கார்ந்துகொண்டு நான் சொல்வதை பிரமாணமாக எடுத்துக் கொள்ளுங்கள். குரு என்னுடைய காதுகளில் மந்திரம் ஏதும் ஓதவில்லை. அப்படியிருக்க, நான் எப்படி உங்களுடைய காதுகளில் எதையும் ஓதமுடியும்?-
"தாய் ஆமையின் அன்பான கடைக்கண் பார்வையே குட்டி ஆமைகளுக்கு திருப்தியும் சந்தோஷமும் கொடுக்கும். அம்மா! ஏன் உங்களை நீங்களே வருத்திக் கொள்கிறீர்கள்? எனக்கு வாஸ்தவமாகவே வேறெந்த உபதேசமும் செய்யத் தெறியாது.-
No comments:
Post a Comment