ஷிர்டி சாயி சத்சரிதம்
இப் பிரபஞ்சம் என்னும் மாயை இதுவே . இதை மாயையென்றும் இறைவனின் விளையாட்டென்றும் முடிவில்லா பிரஞை(உணர்வு) என்றும் விவரிக்கலாம். இவ்வுலக வாழ்வே கனவில் தோன்றும் ஒரு காட்சி. இக் கனவுக்காகவா இதனை வீண் பிரயத்தனங்கள்?
விழிப்பேற்பட்டவுடன் கனவு கலைந்து விடுகிறது. ஆகவே, தன்னுடைய நிஜஸ்வரூபத்தை அறிந்துகொண்டவன் உலக விவகாரங்களை பற்றிச் சிந்தனை செய்வதில்லை.
ஆத்மாவின் விஞ்ஞானத்தை அனுபவத்தால் அறியாதவரையில், ஆத்மாவின் உண்மையான சொரூபத்தை அறியாதவரையில், சோகமும் மோகமுமாகிய பந்தங்களை அறுத்தெறிய வேண்டும் என்னும் விழிப்புணர்வைப் பெறுவதற்கு வழி ஏதுமில்லை.
ஞானத்தினுடைய பெருமையை பாபா இரவுபகலாக விளக்கம் செய்தாரெனினும், பொதுவாக அவர் பக்திமார்க்கத்தை அனுசரிக்கும்படியாகவே அடியவர்களுக்கு உபதேசித்தார்.
ஞானமார்கத்தினுடைய மஹிமையை விளக்குவதற்கு பாபா அதை ராமர் பழத்திற்கு சாப்பிடுவார். சுலபமாக கிடைக்கும் இனிய ரசமுள்ள சீதாப்பழத்திற்கு பக்தி மார்க்கத்திற்கு ஒப்பிடுவார்.
பக்திமார்க்கம், ஜொலிக்கும் சீத்தாப்பழம்; ஞானமார்க்கம், நன்கு பழுத்த ராமர்பழம். முன்னதை விட பின்னது ரசம் நிறைந்தது; மதுரமான வாசனையுடையது.
முற்றிய காயாகப் பறித்துச் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படும்போது, ராமர் பழத்தின் கதுப்பு, சுவைத்துச் சாப்பிட முடியாதவாறு பலமாக நெடியடிக்கிறது. மரத்திலேயே பழுக்கட்டும் என்று விட்டு விடும் மனிதனால்தான் அதனுடைய உண்மையான சுவையை அனுபவிக்கமுடியும்.
ராமர் பழம் மரத்திலேயே நன்கு பழுத்திவிட்டால், காம்புவரை தித்திக்கிறது. பூமியில் விழுந்துவிட்ட பழத்திற்கு நெடி அதிகம். மரத்திலேயே பழுத்த பலத்திற்கு சுவை அதிகம்.
மரத்திலேயே முழுமையாக பழுக்கவிடுபவன்தான் அதனுடைய சுவையை அனுபவிக்கமுடியும். ஆனால், சீதாப்பழத்திற்கு இம் முயற்சியெல்லாம் தேவையே இல்லை. ராமர்ப்பழத்திற்கு இணையான உன்னதங்கள் இல்லை எனினும், சீத்தாப்பழம் மிக்க மதிப்புள்ளது.
ராமர் பழம் கீழே விழுந்துவிடக்கூடிய அபாயம் உண்டு. ஞானிக்கும் தம்முடைய சித்திகளின் மேல் பூரணமான ஆளுமை இல்லையென்றால், வீழ்ச்சியடையும் அபாயம் உண்டு. அலட்சியத்திற்கு இங்கு இடமேயில்லை.
ஆகவே, தயை மிகுந்த சாயீ, தம் பக்தர்களுக்கு பக்தி மார்க்கத்தின் பெருமையையும் நாமஸ்மரணத்தின் மகிமையையும் விவரணம் செய்தார்.
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஞானத்தை விட தியானமே சிறந்தது என்று அர்ஜுனனுக்கு போதித்தார். சாயியும் தம் பக்தர்களுக்கு உலக பந்தங்களில் இருந்து விடுபடும் சாதனையாக அதை நியமித்தார்.
இப் பிரபஞ்சம் என்னும் மாயை இதுவே . இதை மாயையென்றும் இறைவனின் விளையாட்டென்றும் முடிவில்லா பிரஞை(உணர்வு) என்றும் விவரிக்கலாம். இவ்வுலக வாழ்வே கனவில் தோன்றும் ஒரு காட்சி. இக் கனவுக்காகவா இதனை வீண் பிரயத்தனங்கள்?
விழிப்பேற்பட்டவுடன் கனவு கலைந்து விடுகிறது. ஆகவே, தன்னுடைய நிஜஸ்வரூபத்தை அறிந்துகொண்டவன் உலக விவகாரங்களை பற்றிச் சிந்தனை செய்வதில்லை.
ஆத்மாவின் விஞ்ஞானத்தை அனுபவத்தால் அறியாதவரையில், ஆத்மாவின் உண்மையான சொரூபத்தை அறியாதவரையில், சோகமும் மோகமுமாகிய பந்தங்களை அறுத்தெறிய வேண்டும் என்னும் விழிப்புணர்வைப் பெறுவதற்கு வழி ஏதுமில்லை.
ஞானத்தினுடைய பெருமையை பாபா இரவுபகலாக விளக்கம் செய்தாரெனினும், பொதுவாக அவர் பக்திமார்க்கத்தை அனுசரிக்கும்படியாகவே அடியவர்களுக்கு உபதேசித்தார்.
ஞானமார்கத்தினுடைய மஹிமையை விளக்குவதற்கு பாபா அதை ராமர் பழத்திற்கு சாப்பிடுவார். சுலபமாக கிடைக்கும் இனிய ரசமுள்ள சீதாப்பழத்திற்கு பக்தி மார்க்கத்திற்கு ஒப்பிடுவார்.
பக்திமார்க்கம், ஜொலிக்கும் சீத்தாப்பழம்; ஞானமார்க்கம், நன்கு பழுத்த ராமர்பழம். முன்னதை விட பின்னது ரசம் நிறைந்தது; மதுரமான வாசனையுடையது.
முற்றிய காயாகப் பறித்துச் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படும்போது, ராமர் பழத்தின் கதுப்பு, சுவைத்துச் சாப்பிட முடியாதவாறு பலமாக நெடியடிக்கிறது. மரத்திலேயே பழுக்கட்டும் என்று விட்டு விடும் மனிதனால்தான் அதனுடைய உண்மையான சுவையை அனுபவிக்கமுடியும்.
ராமர் பழம் மரத்திலேயே நன்கு பழுத்திவிட்டால், காம்புவரை தித்திக்கிறது. பூமியில் விழுந்துவிட்ட பழத்திற்கு நெடி அதிகம். மரத்திலேயே பழுத்த பலத்திற்கு சுவை அதிகம்.
மரத்திலேயே முழுமையாக பழுக்கவிடுபவன்தான் அதனுடைய சுவையை அனுபவிக்கமுடியும். ஆனால், சீதாப்பழத்திற்கு இம் முயற்சியெல்லாம் தேவையே இல்லை. ராமர்ப்பழத்திற்கு இணையான உன்னதங்கள் இல்லை எனினும், சீத்தாப்பழம் மிக்க மதிப்புள்ளது.
ராமர் பழம் கீழே விழுந்துவிடக்கூடிய அபாயம் உண்டு. ஞானிக்கும் தம்முடைய சித்திகளின் மேல் பூரணமான ஆளுமை இல்லையென்றால், வீழ்ச்சியடையும் அபாயம் உண்டு. அலட்சியத்திற்கு இங்கு இடமேயில்லை.
ஆகவே, தயை மிகுந்த சாயீ, தம் பக்தர்களுக்கு பக்தி மார்க்கத்தின் பெருமையையும் நாமஸ்மரணத்தின் மகிமையையும் விவரணம் செய்தார்.
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஞானத்தை விட தியானமே சிறந்தது என்று அர்ஜுனனுக்கு போதித்தார். சாயியும் தம் பக்தர்களுக்கு உலக பந்தங்களில் இருந்து விடுபடும் சாதனையாக அதை நியமித்தார்.
No comments:
Post a Comment