valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 7 April 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

பாபா ஒரு புராணி கரைபோலப் (ஆன்மீக சொற்பொழிவாளரைப் போலப்) புத்தகத்தை படித்து விளக்கம் கூறினார். சாடே ஒரு கதைகேட்பவரைப் போல அமைதியாகவும் மரியாதையுடனும் குருகதையைக் கேட்டார். (கனவுக் காட்சி).

'அட இதென்ன தலைகீழான ஆள்மாறாட்டம்?" என்று சாடே  நினைத்தார். மிக ஆச்சரியமடைந்து அவருக்குப் பிரேமையால் தொண்டை அடைத்தது.

"அஞ்ஞான மென்னும் தலையணையின்மேல்  தலையை வைத்துகொண்டு புலனின்பங்களின் மேல் சாய்ந்து கொண்டு குறட்டை விட்டுக்கொண்டு தூங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்பிவிடு தயாள ரே!-

"இதே நிலையில் இருந்த என்னை ஒரு தட்டுத் தட்டி எழுப்பி, குருசரித்திரம்  என்னும் அமுதத்தை ஊட்டினீர்; கிருபாநிதியே!"

இந்தக் காட்சியைக் கண்டுகொண்டிருந்தபோதே சாடே தூக்கத்திலிருந்து எழுந்துவிட்டார். தாம் கனவில் கண்ட காட்சியை விவரமாகக் காகா  சாகேப் தீக்ஷிதரிடம் சொன்னார்.

மேலும் அவர் கூறினார், "காகா, இக் காட்சியினுடைய அர்த்தம் என்னவென்று எனக்கு புரியவில்லை. பாபாவுக்குதான்  அந்த சாமர்த்தியம் உண்டு. அவருடைய மனதில் என்ன நினைக்கிறார் என்று தெரியவில்லை. இதைப்பற்றி நீங்கள் கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன்.-

"நான் ஏற்கெனவே ஒரு சுற்று படித்தது  போதுமா; அல்லது இன்னுமொரு சுற்று ஆரம்பித்துப் படிக்க வேண்டுமா? நான் என்ன செய்யவேண்டுமென்று  பாபா விரும்பிகிறார் என்று கேளுங்கள். அப்பொழுதுதான் என் மனம் அமைதியடையும். "

நல்ல வாய்ப்பு  ஒன்றை பயன்படுத்திக்கொண்டு, தீக்ஷிதர்  பாபாவுக்கு சாடேயின் கனவை விவரித்தார். "பாபா, இந்தக் கனவின் மூலம் சாடேவுக்கு  என்ன சொல்ல வேண்டும் என்று விரும்பினீர்?-

"இன்னுமொருமுறை சப்தாஹம் படிக்க வேண்டுமா அல்லது படித்தது போதுமென்று நிறுத்திவிடலாமா? இக் கனவுக்காட்சியின் முக்கியத்துவம் என்னெவென்று நீங்களே விவரித்து அவருக்கு பாதையை தெளிவாகக் காட்டுங்கள்!-

"இதுதான் என்னுடைய ஒரே வேண்டுகோள். சாடே  ஒரு கபடமற்ற, நேர்மையான அடியவர். அவர்மீது கிருபை கூர்ந்து அவருடைய விருப்பதை நிறைவேற்றுங்கள்."

பாபா திருவாய் மலர்ந்து ஆணையிட்டார், "இன்னும் ஒரு ஆவிருத்தி (சுற்று) படிக்கப்படட்டும். குருவினுடைய இந்தப் புனிதமான சரித்திரத்தை படிப்பதால் பக்தர்கள் நிர்மலமாக ஆகிவிடுகின்றனர்.-

"இந்தப் போதியைப் (பாராயண  நூல்) படிப்பதால் பக்தர்களுக்கு மங்களம் உண்டாகும்; இறைவன் பிரீதியடைவான்; உலக பந்தங்களில் இருந்து விடுதலை கிடைக்கும்."

பாபா இதைத் திருவாய் மொழிந்து கொண்டிருந்தபோது நான் அவருடைய பாதங்களைப் பிடித்து விட்டுக் கொண்டிருந்தேன். இவ்வார்த்தைகளைக் கேட்டு நான் எனக்குள்ளே வியப்படைந்தேன். என்னுடைய மனதுள் ஓர் எண்ணம் எழுந்தது.

"பாபா என்ன இவ்வாறு செய்கிறார்! சாடேவின்  சிறிய முயற்சி ஏழு நாள்களிலேயே பலன் அளித்து விட்டது; நானோ வருஷக் கணக்காகக் கழித்துவிட்டேன்!-  


No comments:

Post a Comment