ஷிர்டி சாயி சத்சரிதம்
குருவே அன்னை; குருவே தந்தை. குரு, தேவர்களின் கோபத்திலிருந்தும் நம்மைக் காப்பாற்றும் சக்தியுடையவராவார். குருவினுடைய கோபத்தில் இருந்து நம்மைக் காப்பாற்ற எவராலும் முடியாது என்பதை நன்கு அறிக.
உலக வாழ்கையின் வழிகாட்டி குரு, க்ஷேத்திராதனத்திற்கும் (புனிதப் பயணத்திற்கும்) விரதங்களுக்கும் தர்மம் எது, அதர்மம் எது, என்று அறிந்து கொள்வதற்கும் பற்றற்றருப்பதற்கும் குருவே வழிக் காட்டி. வேதங்களையும் உபநிஷதங்களையும் நமக்குப் பிரவசனம் செய்பவரும் அவரே.
புத்தியின் கண்ணைத் திறந்துவிட்டு, மனிதனை அவனுடைய நிஜ ரூபத்தைக் காணும்படி செய்கிறார். மகா காருண்ய மூர்த்தியான குரு, சிஷ்யனின் பக்தியால் விளைந்த ஆவல்களையும் ஏக்கங்களையும் நிறைவுறச் செய்கிறார்.
இதன் பிறகு புலனின்ப ஆசைகள் அழிவடைந்து, சிஷ்யன் தூக்கத்திலும் ஞானத்தைப் பற்றி பேசுகிறான்! குருவின் அருளால் விவேகம், வைராக்கியம் என்னும் இரட்டைப் பழங்கள் கைக்கு வந்து சேர்கின்றன.
ஞானிகள் அடியவர்களுக்கு கற்பகதரு ஆவர். அவர்களுடைய புனிதமான சந்நிதியில் இருந்துகொண்டு பிரேமையுடன் அவர்களுக்கு சேவை செய்தால், சிரமமான முயற்சிகள் எதுவும் தேவை இல்லாது செய்துவிடுவர்.
ஆகவே, எப்பொழுதும் ஞானிகளின் உறவை நாடுங்கள். அவர்கள் சொல்லும் கதைகளைக் கேளுங்கள். எல்லாப் பாவங்களும் ஒழிய அவர்களுடைய பாதங்களை வழிபடுங்கள்.
பிரபு ரே என்பவர் பம்பாய் மாகாணத்தின் கவர்னராக இருந்தபோது, முனிசிபாலிடி கமிஷனராக இருந்த திரு. கிராபோர்ட் என்பவருடைய நிர்வாகத்தின்மீது ஒரு விசாரணை நடத்தப்பட்டது. அந்த சமயத்தில் பிரசித்தியாகவும் கீர்தியுடனும் விளங்கிய ஒரு கனவான் பாபாவிடம் பக்தி கொண்டார்.
இக் கனவான் வியாபாரத்தில் பெரு நஷ்டம் அடைந்ததால், வாழ்க்கையில் சலிப்பும் வெறுப்பும் அடைந்தார். மூன்று விதமான தாபங்கள் நிறைந்த இவ்வுலக வாழ்க்கையே வியர்த்தும் என்பதை உணர்ந்தபின், கையில் ஒரு லோட்டாவை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டுக் கிளம்பிவிட்டார்.
மனம் நிலை கொள்ளாமல் தவித்ததால், தனிமையை நாடித் தூரமாக எங்காவது சென்றுவிட வேண்டுமென்று நினைத்தார். அந்த எண்ணத்தையே திடமாக்கிக் கொண்டார்.
மிக சங்கடமான நிலைமை வரும்போது தன்னுடைய கஷ்டத்தை தாங்க முடியாமல் மனிதனுக்கு இறைவனின் ஞாபகம் வருகிறது. முழுத் தீவிரத்துடன் பக்தி செய்து இறைவனை கூவி அழைக்கின்றான்.
கெடுசெயல்களை தங்கு தடையின்றி தொடரும் வரை, இறைவனுடைய நாமம் தொண்டைக்கு வருவதில்லை. ஆயினும், முதன்முறையாக இது நிகழ்ந்தவுடன் அவனை ஒரு ஞானியை சந்திக்கும்படி இறைவன் ஏற்பாடு செய்கிறான்.
குருவே அன்னை; குருவே தந்தை. குரு, தேவர்களின் கோபத்திலிருந்தும் நம்மைக் காப்பாற்றும் சக்தியுடையவராவார். குருவினுடைய கோபத்தில் இருந்து நம்மைக் காப்பாற்ற எவராலும் முடியாது என்பதை நன்கு அறிக.
உலக வாழ்கையின் வழிகாட்டி குரு, க்ஷேத்திராதனத்திற்கும் (புனிதப் பயணத்திற்கும்) விரதங்களுக்கும் தர்மம் எது, அதர்மம் எது, என்று அறிந்து கொள்வதற்கும் பற்றற்றருப்பதற்கும் குருவே வழிக் காட்டி. வேதங்களையும் உபநிஷதங்களையும் நமக்குப் பிரவசனம் செய்பவரும் அவரே.
புத்தியின் கண்ணைத் திறந்துவிட்டு, மனிதனை அவனுடைய நிஜ ரூபத்தைக் காணும்படி செய்கிறார். மகா காருண்ய மூர்த்தியான குரு, சிஷ்யனின் பக்தியால் விளைந்த ஆவல்களையும் ஏக்கங்களையும் நிறைவுறச் செய்கிறார்.
இதன் பிறகு புலனின்ப ஆசைகள் அழிவடைந்து, சிஷ்யன் தூக்கத்திலும் ஞானத்தைப் பற்றி பேசுகிறான்! குருவின் அருளால் விவேகம், வைராக்கியம் என்னும் இரட்டைப் பழங்கள் கைக்கு வந்து சேர்கின்றன.
ஞானிகள் அடியவர்களுக்கு கற்பகதரு ஆவர். அவர்களுடைய புனிதமான சந்நிதியில் இருந்துகொண்டு பிரேமையுடன் அவர்களுக்கு சேவை செய்தால், சிரமமான முயற்சிகள் எதுவும் தேவை இல்லாது செய்துவிடுவர்.
ஆகவே, எப்பொழுதும் ஞானிகளின் உறவை நாடுங்கள். அவர்கள் சொல்லும் கதைகளைக் கேளுங்கள். எல்லாப் பாவங்களும் ஒழிய அவர்களுடைய பாதங்களை வழிபடுங்கள்.
பிரபு ரே என்பவர் பம்பாய் மாகாணத்தின் கவர்னராக இருந்தபோது, முனிசிபாலிடி கமிஷனராக இருந்த திரு. கிராபோர்ட் என்பவருடைய நிர்வாகத்தின்மீது ஒரு விசாரணை நடத்தப்பட்டது. அந்த சமயத்தில் பிரசித்தியாகவும் கீர்தியுடனும் விளங்கிய ஒரு கனவான் பாபாவிடம் பக்தி கொண்டார்.
இக் கனவான் வியாபாரத்தில் பெரு நஷ்டம் அடைந்ததால், வாழ்க்கையில் சலிப்பும் வெறுப்பும் அடைந்தார். மூன்று விதமான தாபங்கள் நிறைந்த இவ்வுலக வாழ்க்கையே வியர்த்தும் என்பதை உணர்ந்தபின், கையில் ஒரு லோட்டாவை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டுக் கிளம்பிவிட்டார்.
மனம் நிலை கொள்ளாமல் தவித்ததால், தனிமையை நாடித் தூரமாக எங்காவது சென்றுவிட வேண்டுமென்று நினைத்தார். அந்த எண்ணத்தையே திடமாக்கிக் கொண்டார்.
மிக சங்கடமான நிலைமை வரும்போது தன்னுடைய கஷ்டத்தை தாங்க முடியாமல் மனிதனுக்கு இறைவனின் ஞாபகம் வருகிறது. முழுத் தீவிரத்துடன் பக்தி செய்து இறைவனை கூவி அழைக்கின்றான்.
கெடுசெயல்களை தங்கு தடையின்றி தொடரும் வரை, இறைவனுடைய நாமம் தொண்டைக்கு வருவதில்லை. ஆயினும், முதன்முறையாக இது நிகழ்ந்தவுடன் அவனை ஒரு ஞானியை சந்திக்கும்படி இறைவன் ஏற்பாடு செய்கிறான்.
No comments:
Post a Comment