ஷிர்டி சாயி சத்சரிதம்
எனக்கு அனுக்ரஹம் (பகுதி 1)
ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
பரம நித்தியமான சத்குருவே ஜய ஜய! பிரம்ம சத்தியமான சத்குருவே ஜய ஜய! இவ்வுலகின் பொய் தோற்றமான மாயையை ஆள்பவரே ஜய ஜய!
ஆதியும் அந்தமும் இல்லாவதரே ஜய ஜய! இரட்டையராகிய மாயைக்கு அப்பாற்பட்டவரே ஜய ஜய! நிர்விகாரராகிய (மாற்றமே இல்லாதவராகிய ) உம்மால் மட்டுமே அடியவர்களின் நிஜமான ரூபத்தை அவர்களுக்கு போதிக்கமுடியும்.
உப்பால் செய்யப்பட்ட பொம்மை சமுத்திரத்தில் ஸ்நானம் செய்வதற்கு மூழ்கினால் திரும்பி வர இயலுமா? இது எக்காலத்துக்கும் நடக்காது; நீங்களும் அவ்வாறே! (பக்தன் உப்புப் பொம்மை; பாபா சமுத்திரம்)
வேதங்களும் உபநிஷதங்களும் இரவுபகலாக எதைப்பற்றி விவாதம் செய்து கொண்டு இருக்கின்றனவோ அப் பரம்பொருளை உம்முடைய பக்தர்களுக்குப் பிரயாசை (முயற்சி) எதுமில்லாமேலேயே விரலால் சுட்டிக்காடுகிறீர்.
சந்தர்ப்பவசத்தால் ஏற்படும் நிகழ்ச்சியாக எவராவது உம்முடைய அரவணைப்பில் அகப்பட்டால், அவர்க்கு 'என்னுடையது' என்பதும் 'மற்றொருவருடையது' என்பதுமான குதர்க்க சிந்தனைகளுக்கே இடமில்லாமல் போகிறது.
கடந்த அத்தியாயத்தில் தூய்மை அளிக்கும் ஒரு சிறுகதையின் மூலம், மர்மம் நிறைந்த பிரம்ம மூட்டை அவிழ்க்கப்பட்டு விரிக்கப்பட்டது. பிரம்ம ஞானம் தேடிவந்த மனிதரின் பேராசை எவ்வாறு அவரைத் தடுக்கி விட்டு விட்டது என்பது விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டது.
செவி மடுப்பவர்களே! பாபாவிடமிருந்து எவ்வாறு நான் அனுக்கிரஹம் பெற்றேன் என்ற காதையைச் சொல்கிறேன்; கவனமாக் கேளுங்கள். பாபாவினுடைய வழிகாட்டும் முறைகளை அது வெளிக்கொணரும்.
இதுவும் ஒரு சுவை மிகுந்த கதை. எவ்விதமாக நடந்ததோ அவ்விதமாகவே சொல்கின்றேன். கேட்பவர்கள் அவர்களுடைய நன்மை கருதி இதை அமைதியான மனதுடன் கேட்க வேண்டும்.
கேட்பவர்கள் சுவாரசியமாக கேட்டால் கதை சொல்பவர்க்கும் உற்சாகம் பிறக்கிறது. இருவருடைய இதயத்திலும் பிரேமை பொழிந்து அவர்களை ஆனந்தத்தால் நிரப்புகிறது.
எனக்கு அனுக்ரஹம் (பகுதி 1)
ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
பரம நித்தியமான சத்குருவே ஜய ஜய! பிரம்ம சத்தியமான சத்குருவே ஜய ஜய! இவ்வுலகின் பொய் தோற்றமான மாயையை ஆள்பவரே ஜய ஜய!
ஆதியும் அந்தமும் இல்லாவதரே ஜய ஜய! இரட்டையராகிய மாயைக்கு அப்பாற்பட்டவரே ஜய ஜய! நிர்விகாரராகிய (மாற்றமே இல்லாதவராகிய ) உம்மால் மட்டுமே அடியவர்களின் நிஜமான ரூபத்தை அவர்களுக்கு போதிக்கமுடியும்.
உப்பால் செய்யப்பட்ட பொம்மை சமுத்திரத்தில் ஸ்நானம் செய்வதற்கு மூழ்கினால் திரும்பி வர இயலுமா? இது எக்காலத்துக்கும் நடக்காது; நீங்களும் அவ்வாறே! (பக்தன் உப்புப் பொம்மை; பாபா சமுத்திரம்)
வேதங்களும் உபநிஷதங்களும் இரவுபகலாக எதைப்பற்றி விவாதம் செய்து கொண்டு இருக்கின்றனவோ அப் பரம்பொருளை உம்முடைய பக்தர்களுக்குப் பிரயாசை (முயற்சி) எதுமில்லாமேலேயே விரலால் சுட்டிக்காடுகிறீர்.
சந்தர்ப்பவசத்தால் ஏற்படும் நிகழ்ச்சியாக எவராவது உம்முடைய அரவணைப்பில் அகப்பட்டால், அவர்க்கு 'என்னுடையது' என்பதும் 'மற்றொருவருடையது' என்பதுமான குதர்க்க சிந்தனைகளுக்கே இடமில்லாமல் போகிறது.
கடந்த அத்தியாயத்தில் தூய்மை அளிக்கும் ஒரு சிறுகதையின் மூலம், மர்மம் நிறைந்த பிரம்ம மூட்டை அவிழ்க்கப்பட்டு விரிக்கப்பட்டது. பிரம்ம ஞானம் தேடிவந்த மனிதரின் பேராசை எவ்வாறு அவரைத் தடுக்கி விட்டு விட்டது என்பது விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டது.
செவி மடுப்பவர்களே! பாபாவிடமிருந்து எவ்வாறு நான் அனுக்கிரஹம் பெற்றேன் என்ற காதையைச் சொல்கிறேன்; கவனமாக் கேளுங்கள். பாபாவினுடைய வழிகாட்டும் முறைகளை அது வெளிக்கொணரும்.
இதுவும் ஒரு சுவை மிகுந்த கதை. எவ்விதமாக நடந்ததோ அவ்விதமாகவே சொல்கின்றேன். கேட்பவர்கள் அவர்களுடைய நன்மை கருதி இதை அமைதியான மனதுடன் கேட்க வேண்டும்.
கேட்பவர்கள் சுவாரசியமாக கேட்டால் கதை சொல்பவர்க்கும் உற்சாகம் பிறக்கிறது. இருவருடைய இதயத்திலும் பிரேமை பொழிந்து அவர்களை ஆனந்தத்தால் நிரப்புகிறது.
No comments:
Post a Comment