ஷிர்டி சாயி சத்சரிதம்
சாஸ்திரங்கள் திரும்பத் திரும்ப, "இதமான வார்த்தைகளைப் பேசுங்கள்; பரோபகாரம் செய்யுங்கள்" என்று உபதேசம் செய்கின்றன. பாபாவும் சாஸ்திர விதிகளின்படியே நடந்தார்.
'இது பொருத்தமா, பொருத்தமில்லாததா?' என்பதெல்லாம் ஒருவருக்கொருவர் வேறுபடும் அபிப்பிராயங்கள். இக்காவியமோ சாமானிய மக்களுக்கு பிரீதியையும் நன்மையையுமே குறிக்கோளாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.
அதுதான் இங்கே பிரயோஜனம். பாபாவுக்கு காரண காரிய சம்பந்தம் நன்கு தெரியும். பாபாவின் மனதில் என்ன தோன்றுகிறதோ, அது நடந்து விடும் என்பதை உறுதியாக அறியவும்.
குருவினுடைய திருவாய் மொழியாக வெளிவரும் கதைகளைக் கேட்க வேண்டும். ஆராய்சிக்கு அப்பாற்பட்ட அவருடைய லீலைகளை அனுபவிக்க வேண்டும். எத்தனை லீலைகளைச் சேகரிக்க முடியுமோ அத்தனையையும் சேகரித்து மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
சாயியின் அற்புதமான சரித்திரம் பக்தியுடன் கேட்கப்பட்டால், எடுத்துச் சொல்பவர், கேட்பவர்கள், இவர்களுடைய இன்னல்களும் துயரங்களும் ஒழிந்து போகும்; இவர்களுடைய கெட்டகாலம் ஒரு முடிவுக்கு வந்து விடும்.
பாபாவினுடைய அற்புதமான லீலைகளைக் கேட்டு ஆச்சரியப்படாதவரோ, அவருடைய தரிசனத்தால் மன அமைதி பெற்று, அவருடைய பாத கமலங்களில் பணிவுடன் சரணடையாத அபாக்கியசாலியோ எவரும் உண்டோ?
புனிதமானதும் தூய்மையானதுமான சாயியின் சரித்திரம் திறந்த மனதுடன் கேட்கப்பட வேண்டும். அவ்வகை சந்தோஷமான நல்வாய்ப்புக் கிடைக்கும்போது யார் அதை நழுவ விடுவார்?
புத்திரன், மித்திரன் (நண்பன்), மனைவி இவர்களெல்லாம் சம்சாரக் கடலின் சுழல்கள். இக்கடலில் காமம், குரோதம், போன்ற முதலைகள் அநேகம். இக்கடலின் அலைகள் பலவிதமான நோய்கள் என்னும் திமிங்கலங்களாலும் எதிர்பார்ப்புகளாலும் ஆசைகளாலும் உயரமாக எழுப்பப்பட்டு ஆர்ப்பரிக்கின்றன.
சில சமயங்களில் மனிதன் சலிப்பிலும் துயரத்திலும் மாட்டிகொண்டு தவிக்கிறான், இரட்டைச் சுழல்கள் (இன்பம் / துன்பம் - குளிர் / வெப்பம்) வாழ்க்கையில் அடிப்படை சந்தேகங்களை எழுப்பகின்றன. ஆயினும் மனிதனால் பற்றறுக்கும் நிலைக்கு உயர முடிவதில்லை.
'நான் சுத்தமான பிரம்மம்; ஒரு மனித உடலில் மாட்டிக் கொண்டிருக்கிறேன்; கூண்டுக்குள் இருக்கும் குறுக்குத் தண்டைக் கெட்டியாக கால்களால் பிடித்துக் கொண்டு தலை கீழாக தொங்கும் கிளி நான்' என்னும் கருத்தை அடிக்கடி உங்களுக்கே ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.
மாயையின் மோகத்தில் நீங்கள் வழி தவறி விட்டீர்கள்; அதன் காரணமாக உங்களுக்கு எது சாசுவதமான நன்மை என்பதை மறந்து விட்டீர்கள். சுய முயற்சியாலேயே விழித்தெழுந்து, உஷாராக ஆகி, உங்களுடைய உண்மையான சொரூபத்தை நாடுங்கள்.
சாஸ்திரங்கள் திரும்பத் திரும்ப, "இதமான வார்த்தைகளைப் பேசுங்கள்; பரோபகாரம் செய்யுங்கள்" என்று உபதேசம் செய்கின்றன. பாபாவும் சாஸ்திர விதிகளின்படியே நடந்தார்.
'இது பொருத்தமா, பொருத்தமில்லாததா?' என்பதெல்லாம் ஒருவருக்கொருவர் வேறுபடும் அபிப்பிராயங்கள். இக்காவியமோ சாமானிய மக்களுக்கு பிரீதியையும் நன்மையையுமே குறிக்கோளாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.
அதுதான் இங்கே பிரயோஜனம். பாபாவுக்கு காரண காரிய சம்பந்தம் நன்கு தெரியும். பாபாவின் மனதில் என்ன தோன்றுகிறதோ, அது நடந்து விடும் என்பதை உறுதியாக அறியவும்.
குருவினுடைய திருவாய் மொழியாக வெளிவரும் கதைகளைக் கேட்க வேண்டும். ஆராய்சிக்கு அப்பாற்பட்ட அவருடைய லீலைகளை அனுபவிக்க வேண்டும். எத்தனை லீலைகளைச் சேகரிக்க முடியுமோ அத்தனையையும் சேகரித்து மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
சாயியின் அற்புதமான சரித்திரம் பக்தியுடன் கேட்கப்பட்டால், எடுத்துச் சொல்பவர், கேட்பவர்கள், இவர்களுடைய இன்னல்களும் துயரங்களும் ஒழிந்து போகும்; இவர்களுடைய கெட்டகாலம் ஒரு முடிவுக்கு வந்து விடும்.
பாபாவினுடைய அற்புதமான லீலைகளைக் கேட்டு ஆச்சரியப்படாதவரோ, அவருடைய தரிசனத்தால் மன அமைதி பெற்று, அவருடைய பாத கமலங்களில் பணிவுடன் சரணடையாத அபாக்கியசாலியோ எவரும் உண்டோ?
புனிதமானதும் தூய்மையானதுமான சாயியின் சரித்திரம் திறந்த மனதுடன் கேட்கப்பட வேண்டும். அவ்வகை சந்தோஷமான நல்வாய்ப்புக் கிடைக்கும்போது யார் அதை நழுவ விடுவார்?
புத்திரன், மித்திரன் (நண்பன்), மனைவி இவர்களெல்லாம் சம்சாரக் கடலின் சுழல்கள். இக்கடலில் காமம், குரோதம், போன்ற முதலைகள் அநேகம். இக்கடலின் அலைகள் பலவிதமான நோய்கள் என்னும் திமிங்கலங்களாலும் எதிர்பார்ப்புகளாலும் ஆசைகளாலும் உயரமாக எழுப்பப்பட்டு ஆர்ப்பரிக்கின்றன.
சில சமயங்களில் மனிதன் சலிப்பிலும் துயரத்திலும் மாட்டிகொண்டு தவிக்கிறான், இரட்டைச் சுழல்கள் (இன்பம் / துன்பம் - குளிர் / வெப்பம்) வாழ்க்கையில் அடிப்படை சந்தேகங்களை எழுப்பகின்றன. ஆயினும் மனிதனால் பற்றறுக்கும் நிலைக்கு உயர முடிவதில்லை.
'நான் சுத்தமான பிரம்மம்; ஒரு மனித உடலில் மாட்டிக் கொண்டிருக்கிறேன்; கூண்டுக்குள் இருக்கும் குறுக்குத் தண்டைக் கெட்டியாக கால்களால் பிடித்துக் கொண்டு தலை கீழாக தொங்கும் கிளி நான்' என்னும் கருத்தை அடிக்கடி உங்களுக்கே ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.
மாயையின் மோகத்தில் நீங்கள் வழி தவறி விட்டீர்கள்; அதன் காரணமாக உங்களுக்கு எது சாசுவதமான நன்மை என்பதை மறந்து விட்டீர்கள். சுய முயற்சியாலேயே விழித்தெழுந்து, உஷாராக ஆகி, உங்களுடைய உண்மையான சொரூபத்தை நாடுங்கள்.
No comments:
Post a Comment