valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 7 January 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

"இதை கவனமாகச் செவிமடுத்தால் உங்களுக்கு மங்களம் உண்டாகும். புனிதமான இம்மசூதியில் உட்கார்ந்துகொண்டு நான் ஒரு போதும் சத்தியம் இல்லாததை பேசமாட்டேன். "

இதயத்தில் முழுநம்பிக்கையுடன் ஞானிகளின் திருவாய்மொழி என்னும் அமிருதம் பெருகும் ஆற்றில் நீராடினால், எல்லா மலங்களும் கழுவித் துடைக்கப் பட்டு உள்ளும் புறமும் தூய்மை அடையும்".

இதுவே சாயினாதரின் மகிமை; வர்ணிக்க முடியாதது. ஒப்பு நோக்க முடியாத விஷயத்திற்கு எதை உதாரணமாக கூறுவேன்? தூய்மையான பிரேமையினால்தான் அதை அடைய முடியும்.

எல்லாருக்கும் அன்னையாகிய ஆர், துக்கத்தாலும் வலியாலும் அவதிப்படுவர்களுக்கும் வாழ்க்கையில் இன்னல்படுபவர்களுக்கும் அடைக்கலம் ஆவார். தீனர்களுக்கும் பலஹீனர்களுக்கும், குளிர் நிழலும் அடைக்கலமும் தரும் கற்பகத் தருவாவார்.

ஒருவர் ஆன்மீக முன்னேற்றம் கருதி, உலக வாழ்வைத் துறந்து ஏகாந்தமாக தியானம் செய்ய மலைகளுக்கோ பள்ளத்தாக்குகளுக்கோ செல்லலாம்.

அவ்வாறு சுயநலமாக ஆன்மீக லாபம் அடைந்து வெற்றி கண்ட ஞானியர் எத்தனையோ பேர்; ஆனால், அவர்களால் மற்றவர்களுக்கு என்ன பிரயோஜனம்?

சாயி பாபா அத்தகைய மகான் அல்லர். நண்பர்கள், உற்றார், உறவினர், வீடு, மனைவி, மக்கள், குடும்பம் ஆகியன ஏதுமில்லாமல் இருந்தும் அவர் ஜனங்களிடையே வாழ்ந்தார்.

ஐந்து இல்லங்களின் வாயிற் படிகளில் நின்று கையேந்தி பிச்சை எடுத்த உணவை உட்கொண்டு, தம்முடைய உடைமையான ஒரு சில பொருள்களைத் தம்மைச் சுற்றிலும் வைத்துகொண்டு, உலகத்தாருக்கு வாழும் நெறியைப் பயிற்றுவிக்கும் வகையில் எந்நேரமும் ஒரு மரத்தடியில் வாழ்ந்தார்.

தாம் பிரம்ம ஐக்கிய நிலையில் இருந்த  போதிலும், உலக மக்களின் க்ஷேமதிற்காகவும் மங்களத்திற்காகவும் அநேக சிரமங்களை ஏற்கும் பேருள்ளமும் மன்னிக்கும் பெருந்தன்மையும் உடைய இதுபோன்ற சாதுக்களை காண்பதரிது.

இந்த நிர்மலமான ரத்தினத்தை வயிற்றில் சுமந்த அன்னை மஹா புண்ணியசாலி; தூய்மையான பெற்றோர்கள் புண்ணியசாலிகள்; பிறந்த  குலம் புண்ணியம் செய்தது; பிறந்த தேசம் புண்ணிய பூமி.

எம் முயற்சியும் செய்யாமலேயே இந்தத் 'தொட்டதைப் பொன்னாக்கும் ரத்தினம்' அவர்களுக்கு கிடைத்தது; ஆனால், அவர்களோ இதை ஒரு சாதாரனமான கல் என்று தவறாக எண்ணித் தூக்கி எறிந்துவிட்டனர். வெகு காலத்திற்கு ஷிர்டி மக்களுக்கு இப் பரமபாகவதரின் அருமை தெரியாது போய்விட்டது.

சாணக்குவியலில் கிடந்த ஒரு விலைமதிப்பற்ற மாணிக்கத்தைச் சிறுவர்கள் எடுத்து, ஒரு சாதாரணக் கல்லைப்போல் எறிந்து உதைத்து ஏறிநின்று விளையாடுவதை போன்று, ஷிர்டி மக்கள் இம்மாணிக்கத்தின் அருமை தெரியாது இருந்துவிட்டனர். 


No comments:

Post a Comment