valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 24 December 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்
ஆத்மா ஞானம் தரும் தீரமாகிய மலையை, உலக வாழ்வின் இன்னல்கள் மற்றும் துக்கங்களாகிய கற்கள், எத்தனை உருண்டு வந்து தாக்கினாலும் ஓர் இம்மியும் நகர்த்த முடியாது.

இறைவன் எவர் மீது சந்தோசம் கொள்கிறாரோ, அவருக்குப் பற்றறுக்கும் மனோபாவத்தை அளிக்கிறார். விவேகத்துடன் சீர்தூக்கிப் பார்க்கும் திறமையேனும் சக்தியையும் ஊட்டுகிறார். சம்சாரக்கடலை பத்திரமாக தாண்ட வைக்கிறார்.

எவருடைய ஆத்ம தரிசன நாட்டம் கண்ணாடியில் தெரியும் முகம் போலத் தெளிவாக இருக்கிறதோ, அவர் ஒன்று பூலோகத்தில்  வாழ்வார்; அல்லது பிரம்ம லோகத்தில் இருப்பார். மூன்றாவதான இடம் என்பது அவருக்கு இல்லை.

தேவர்களை திருப்தி செய்யும் யாகங்களையும் ஹோமங்களையும் செய்யின், பித்ருலோகம் கிடைக்கும். செய்பவர் கர்மபலன்களை நன்கு அனுபவிப்பார்; ஆனால், ஆத்மா ஞானம் கிடைக்காது.

கந்தர்வ லோகம், மகா லோகம், ஜன லோகம், தப லோகம், சத்யா லோகம் ஆகிய லோகங்களில் கிடைக்க கூடிய ஆத்ம ஞானம் தெளிவில்லாததும் மங்கலானதும் ஆகும். ஆகவே ஆத்ம ஞானம் பெற விரும்புபவர்கள் பூலோகத்திலேயே தாங்கள் விரும்பும் வரை வாழ வேண்டுமென்று நினைக்கிறார்கள்.

ஏனெனில் இங்கே சித்தம் சுத்தமடைந்து, புத்தி கண்ணாடியைப் போல் நிர்மலமாகி, உண்மையானதும் புனிதமானதுமான ஆத்மா சொரூபத்தை பிரதிபலிக்கிறது.

ஆத்ம தரிசனம் பிரம்ம லோகத்தின் இரண்டாவது நிலையிலும் கிடைக்கும். ஆனால், அங்கு அநேக ஆயாசமான, கஷ்டங்களை விளைவிக்க கூடிய பயிற்சிகள் தேவைப்படும்.

மாயை, ஒரு மலைப் பாம்பைப்போல் உடலைச் சுற்றிக் கொண்டு எல்லா அங்கங்களையும் அழுத்தி, உள்ளிருக்கும் குடலையும் வெளிப்புறத்தில் இருந்து கொடுக்கும் மரணத் தழுவலால் பிழிந்து விடுகிறது. அவளிடமிருந்து தப்புவதற்கு யாருக்கு சக்தியிருக்கிறது?

"நான் கேட்ட ஐந்து ரூபாயைப் போல ஐம்பது மடங்கு வைத்துக் கொண்டு, எதிலுமே சம்பந்தபடாதவர்போல் அங்கு உட்கார்ந்து இருக்கிறீர்! அதை இப்பொழுது வெளியே எடும்! அங்கு, உம்முடைய ஜோபியிலேயே பிரம்மம் இருக்கிறது!"

பாபா இவ்வாறு கூறியவுடன் அம்மனிதர் ஜோபியில் கையிட்டு, ஒரு கட்டு ரூபாய் நோட்டுகளை  எடுத்தார்; இருபத்தைந்து பாத்து ரூபாய் நோட்டுகளை எண்ணினார்.

மனதின் ஆழத்தில் வெட்கத்தால் அம்மனிதர் குன்றிபோனார். பாபாவின் அந்தர்ஞானத்தை அறிந்து வியப்படைந்தார். ஆசிகள் வேண்டி, உடனே சிரத்தை பாபாவின் பாதங்களில் வைத்தார்.

பாபா அப்பொழுது அவரிடம் கூறினார், "உம்முடைய பிரம்ம ஞானக் கட்டைச் சுருட்டிக் கொள்ளும். உம்முடைய பேராசை சுத்தமாக அழியாதவரை உமக்கு பிரம்ம ஞானம் கிடைக்காது.- 


No comments:

Post a Comment