valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 17 December 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

இவ்வாறு தூய்மை எய்திய மனத்தில் விவாகமும் வைராக்கியமும் பிறக்கின்றன. பிரம்ம ஞானம் அடைவதற்குத் தேவையான சாதனை சம்பதுக்களான சமம், தமம், ஆகியவையும் பிறகு தோன்றும். இவ்வாறாக, உடலில் உயிர் இருக்கும்போதே முக்திநிலையும் கைக்கு எட்டுகிறது.

செயல்களின் பலனைத் துறந்துவிட்டவர், சங்கல்பத்தையும் தியாகம் செய்துவிட்டவர், ஒருமுனைச் சித்தம் எய்தியவர், குருவிடம் சரணமடைந்து விட்டவர், சத்குருவினுடைய முழுப்பாதுகாப்பை அனுபவிக்கிறார்.

புறவுலகச் செயல்பாடுகள் அனைத்தையும் சூனியமாக்கிவிட்டு, வேறெதிலும் நாட்டமில்லாத பக்தர் ஆத்மா ஞானத்தை பெறுவார். வேறெந்த உபாயமும் அங்கே பிரயோஜனப்படுவதில்லை.

அவ்விதமாக ஞானம் பெற்ற பிறகும் அவர் அதர்மாமன மார்க்கத்தில் இறங்கினால் அவர் பூமியிலும் இல்லாமல் சுவர்க்கத்திலும்  இல்லாமல் திரிசங்கு போல் மாட்டிக் கொள்வார்.

ஜீவனுடைய அஞ்ஞானமே அவனை சம்சாரப் பிரவிருத்தியில் இழுக்கிறது. ஆத்ம ஞானம் கிடைத்துவிட்டால் சம்சாரத்தில் இருந்து நிவிர்த்தி ஏற்பட்டு விடும். அவர் இந்த உலகத்தில்தான் வாழ்கிறார். ஆனால், இவ்வுலத்தைச் சார்ந்தவரல்லர்.

ஆத்ம ஞானம் அடைந்தவர் எந்நேரத்திலும் அஹம்பாவத்திற்கு இடங்கொடுக்க மாட்டார். அவருக்கு, தர்மம் / அதர்மம் - சுபம் / அசுபம் - எதுவமே கிடையாது. அப்படிப்பட்ட ஒருவருக்கு ஹிதமானது எது, ஹிதமில்லாதது எது?

தேஹம் பற்றிய அஹங்காரம் நசித்துவிட்டால், பற்றற்ற மனோபாவம் விரைவில் வந்திறங்கி விடுகிறது. இதுவே இறைவனுடன் ஒன்றிய நிலை என்பதை நிச்சயமாக அறிக.

நண்பனும் பகைவனும் பிரவிருத்தி மார்க்கத்தில்தான் (செயல் நிறைந்த உலக வாழ்க்கை) உண்டு. நிவிர்த்தி மார்க்கமோ விசித்திரமானது. தன்னையே எல்லாவற்றிலும் எப்பொழுதிலும் பார்க்க ஆரம்பித்துவிட்டபோது, நட்பேது, பகையேது?

இந்த மகா சுகத்தின் முன்னர் உடலின் கடுமையான உபாதிகளும் ஒன்றுமில்லாமல் போய்விடும். இந்த சுகம் கிடைத்த பிறகு நிலையில்லாத உலக சுகங்களுக்காக கண்ணீர் விடுபவர் யார்? 


No comments:

Post a Comment