valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 3 December 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

ஏற்கெனவே அனுபவித்த அல்லது அனுபவிக்காத புலனின்பங்களை நாடுவது எதிர்பார்ப்பது, ஏங்குவது, வேண்டுமென்று விரும்புவது - இவையனைத்தும் தடங்கல்களே. ஆகவே, அவற்றை முதலில் ஒழிக்கவும்.

எதை மிகப் பிரகாசமான சூரிய வெளிச்சத்திலும் பார்க்க முடியாதோ, எதில் ஆராய்ந்த பின் புத்தி, உட்புகமுடியாமல் திரும்பி விடுகிறதோ, எங்கு வேதங்களும் உபநிஷதங்களும் ஒரு காலைக் கூட வைத்து ஊன்ற முடியாமல் தடுமாறுகின்றனவோ, அதை குரு தம்முடைய கையால் சுட்டிக்காட்டுகிறார்.

ஞானம் பெறுவைதையும் நற்கேள்வியையும் தியானத்தையும் சமாதி நிலைமையையும் அடைய விடாமல் கண நேரத்தில் கெடுத்துவிடும் காமமும் குரோதமும் மனதின் வியாதிகள்.

கற்பூரமும் தீயும் அருகே கொண்டுவரப்படும்போது ஒன்றையொன்று முட்டி அப்பால் தள்ளி விடுமா? இரண்டும் சந்தித்த கணமே கற்பூரம் தீயுடன் ஒன்றாகி விடுகிறது.

விதிக்கப்பட்ட, விதிக்கப்படாத, செயல்களிடையே உள்ள வித்தியாசம் தெரியாமல் எப்பொழுதும் பாவசெயல்களிலேயே புரண்டு கொண்டிருப்பவன் எவ்வளவு புத்திசாலியாக இருப்பினும் என்ன நன்மையை அடைந்துவிட முடியும்?


அதுபோலவே, அலைபாயும் புலன்களால் குழப்பப்பட்ட மனதுடன், இதயத்தில் நிம்மதியின்றி எப்பொழுதும் சாந்தியற்ற நிலையில் இருப்பவன் ஞானத்தை எவ்விதம் அடைவான்?

சம்சாரத்தை நோக்கி நடப்பவனோ, மோக்ஷத்தை நோக்கி நடப்பவனோ, கடைசி இலக்கை சென்றடைய வேண்டுமெனில் சரீரமென்னும் தேருக்கு யஜமானனாகிவிட வேண்டும். கேவலம் வாய்பேச்சு சாமர்த்தியம் என்ன சாதித்து விட முடியும்?

ஆகையால், வார்த்தை ஜாலத்திற்கு இங்கு இடமே இல்லை; சாரம் அப்பியாசமே (பயிற்சியே) ! நாம் உறுதியாகவும் அமைதியாகவும் அமரும் தேராக உடல் ஆகட்டும்.

இந்த ரதத்திற்கு (மனித உடல்) உம்முடைய புத்தி தேரோட்டியாக ஆகட்டும். உம்மைப் பொறுத்தவரை அமைதியான மனதுடன் எஜமானனாக இந்த ரதத்தில் உட்காரும்.

வெற்றி பெறுவதற்குச் சிரமமானவையும், பரம்பரையாக வருவனமாகிய புலனின்ப நாட்டங்களை கடந்து செல்லத் தேரோட்டிகு வழி காட்டவும். பத்து இந்திரியங்களையும் முரட்டுக் குதிரைகளின் கடிவாளங்களை உம்முடைய மனம் கட்டுப்பாடு செய்யட்டும். (கர்மேந்திரியங்கள் 5 + ஞானேந்திரியங்கள் 5)

குதிரைகள் தாறுமாறாக ஓட முயன்றாலும் கடிவாளங்கள் அவற்றைக் கட்டுபாட்டுக்குள் வைக்கும். கடிவாளங்களை தேரோட்டியிடம்(புத்தியிடம்) ஒப்படைத்துவிட்டு நீர் அமைதியாக உட்கார்ந்துகொள்ளும்.

தேரோட்டி நிபுணவாகவும் சாமார்தியசாலியாகவும் இருந்தால்தான், குதிரைகள் வேகமாகவும் ஒழுங்காகவும் ஓடும். ஆனால், தேரோட்டியே (புத்தி) கடிவாளங்களின் (மனதின்) பிடியில் மாட்டிகொண்டால், குதிரைகள் பலவீனமாகிவிடும். 


No comments:

Post a Comment