valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 12 November 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

வேதாந்தம் நன்கு அறிந்தவர்கள் பிரம்மத்தை சத்தியம், ஞானம், அனந்தம் (முடிவே இல்லாதது) என்ற லக்ஷனங்களால் வர்ணிக்கின்றனர். பிரம்மம் ஞானிகளுக்குoli வழங்கி, ஆத்மாவிலேயே மூழ்கச் செய்கிறது.

காட்டினுள்ளே நடந்து செல்லும் யாத்திரிகன், மங்கலான சந்திர ஒளியில், வெட்டப்பட்ட மரத்தின் அடிப்பாகத்தை பார்த்துக் கொள்ளைக்காரன் என்று நினைத்து மிரண்டு பயத்தால் எங்காவது ஒளிந்து கொள்கிறான்.

"நான் தனியாக நடந்து செல்கிறேன்; பணமும் வைத்திருக்கிறேன்; வழிப்பறிக் கொள்ளைக்காரன் மறைந்து கொண்டிருக்கிறான்; யோசிப்பதற்கு என்ன இருக்கிறது? உயிருக்கே ஆபத்தாக இருக்கும்போலிருக்கிறதே!" என்று தனக்குள்ளேயே பேசிக் கொள்கிறான்.

திடீரென்று தூரத்தில் இருந்து ஒரு தீபம் வருகிறது; வெட்டப் பட்ட மரத்தின் அடிப்பாகம் தெரிகிறது; யாத்திரிகனுடைய பயம் தெளிந்து விடுகிறது. கொள்ளைக் காரன் என்று நினைத்தது மனதின் பிரமையே என்று அறிந்துகொள்கிறான்.

கதை கேட்பவர்களுக்கு ஞானத் தேடலில் ஏற்படக் கூடிய தடங்கல்களை பற்றி எல்லாம் விவரித்து விட்டேன். அடுத்த அத்தியாயத்தில் பிரம்ம ஆனந்தத்தை தேடுபவர்களுக்கு அதனுடைய ஒளி மிகுந்த நிஜ ரூபம் தரிசனமாகும்.

ஹெமாத் சாயியின் பொற்கமலப் பாதங்களில் புரளுகிறான். வாயில் வந்ததை உளறுகிறான். சாயியினுடைய கிருபையினால் எதெது வெளிவருகிறதோ அததைஎல்லாம் விசுவாசமுள்ள எளிமையான பக்தர்கள் கேட்டு மகிழட்டும்.

எல்லாருக்கும் ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹெமாத் பந்தால் இயற்றப்பட்ட, "ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்" என்னும் காவியத்தில், 'பிரம்ம ஞான உபதேசம்' என்னும்  பதினாறாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீ சத்குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்!

சுபம் உண்டாகட்டும்.

No comments:

Post a Comment