ஷிர்டி சாயி சத்சரிதம்
17. பிரம்ம ஞான உபதேசம் (பகுதி 2)
ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குரு மகாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்த்ரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயினாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
இந்த அத்தியாயத்தில் ஆன்மீக ஈடுபாடு மற்றும் உலகியல் ஈடுபாடு இவற்றின் லட்சிணங்கள் விவரிக்கப்படும் என்று கடந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டது. இப்பொழுது அதுபற்றி கவனமாக கேளுங்கள்.
ஒளியும் அந்தகாரமும் அன்னியோன்னியமாக சம்பந்தப்படிருப்பது போல் தோன்றினாலும் அவை ஒன்றுகொன்று எதிர்மறையானவை. அவ்வாறே ஆன்மீக ஈடுபாடும் உலகியல் ஈடுபாடும்.
எவருடைய மனம் உலகியல் ஈடுபாட்டின் பின்னால் ஓடுகிறதோ, அவர் தம்முடைய சுயநலத்தாலேயே வீழ்ந்து விட சபிக்கப் பட்டவர். ஆன்மீக ஈடுபாடு விவேக ரூபமானது; உலகியல் ஈடுபாடு விவேகரூபமற்றது.
ஆன்மீக ஈடுபாட்டின் இலட்சியம் சுத்த ஞானம்; உலகியல் ஈடுபாடு அளிப்பது முழுமையான அஞ்ஞானம். ஞானமுள்ளவர்கள் உலகியல் விவகாரங்களை நாடுவதில்லை; அஞ்ஞானிகள் ஆன்மீக விவகாரங்களை நாடுவதில்லை.
பெண்ணாசையும் பொன்னாசையும் இருக்கும்வரை, புலன்கள் இன்ப நாட்டத்தில்தான் உழலும். விவேகமும் வைராக்கியமும் எய்தும்வரை, உலகியல் ஈடுபாடுகளின் மீதுதான் பிரியம் செலுத்தப்படும்.
ஆன்மீக ஈடுபாட்டையும் உலகியல் ஈடுபாட்டையும் கலப்பது பாலையும் தண்ணீரையும் கலப்பது போலாகும். இந்தக் கலவையில் இருந்து மானச சரோவர் ஏரியின் அன்னங்கள் பாலைப் பிரித்து அருந்துவது போலவே, -
தீரமும் சிறந்த அறிவும் விவேகமும் நிறைந்த பாக்கியசாலிகள் ஆன்மீக ஈடுபாட்டில் ஒட்டிக் கொள்வர்; உலகியல் ஈடுபாட்டிற்கு முகம் திருப்பி விடுவர்.
இந்த மந்த புத்திகாரர்களைப் பாருங்கள்! உலகியல் ஈடுபாட்டிலேயே மூழ்கிப் போய், புலனின்பம், புத்திரன், தனம், ஆடுமாடுகள், கௌரவம் ஆகியவற்றையே தேடுகிறார்கள். அவற்றையே அடைகிறார்கள்;
சுதந்திரமான புருஷன் தனக்கு ஆன்மிகம் தேவையா, உலகியல் தேவையா என்று அவை இரண்டையும் அலசி, ஆராய்ந்து, அவ்விரண்டில் இருந்து தனக்கேற்றதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும்.
17. பிரம்ம ஞான உபதேசம் (பகுதி 2)
ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குரு மகாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்த்ரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயினாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
இந்த அத்தியாயத்தில் ஆன்மீக ஈடுபாடு மற்றும் உலகியல் ஈடுபாடு இவற்றின் லட்சிணங்கள் விவரிக்கப்படும் என்று கடந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டது. இப்பொழுது அதுபற்றி கவனமாக கேளுங்கள்.
ஒளியும் அந்தகாரமும் அன்னியோன்னியமாக சம்பந்தப்படிருப்பது போல் தோன்றினாலும் அவை ஒன்றுகொன்று எதிர்மறையானவை. அவ்வாறே ஆன்மீக ஈடுபாடும் உலகியல் ஈடுபாடும்.
எவருடைய மனம் உலகியல் ஈடுபாட்டின் பின்னால் ஓடுகிறதோ, அவர் தம்முடைய சுயநலத்தாலேயே வீழ்ந்து விட சபிக்கப் பட்டவர். ஆன்மீக ஈடுபாடு விவேக ரூபமானது; உலகியல் ஈடுபாடு விவேகரூபமற்றது.
ஆன்மீக ஈடுபாட்டின் இலட்சியம் சுத்த ஞானம்; உலகியல் ஈடுபாடு அளிப்பது முழுமையான அஞ்ஞானம். ஞானமுள்ளவர்கள் உலகியல் விவகாரங்களை நாடுவதில்லை; அஞ்ஞானிகள் ஆன்மீக விவகாரங்களை நாடுவதில்லை.
பெண்ணாசையும் பொன்னாசையும் இருக்கும்வரை, புலன்கள் இன்ப நாட்டத்தில்தான் உழலும். விவேகமும் வைராக்கியமும் எய்தும்வரை, உலகியல் ஈடுபாடுகளின் மீதுதான் பிரியம் செலுத்தப்படும்.
ஆன்மீக ஈடுபாட்டையும் உலகியல் ஈடுபாட்டையும் கலப்பது பாலையும் தண்ணீரையும் கலப்பது போலாகும். இந்தக் கலவையில் இருந்து மானச சரோவர் ஏரியின் அன்னங்கள் பாலைப் பிரித்து அருந்துவது போலவே, -
தீரமும் சிறந்த அறிவும் விவேகமும் நிறைந்த பாக்கியசாலிகள் ஆன்மீக ஈடுபாட்டில் ஒட்டிக் கொள்வர்; உலகியல் ஈடுபாட்டிற்கு முகம் திருப்பி விடுவர்.
இந்த மந்த புத்திகாரர்களைப் பாருங்கள்! உலகியல் ஈடுபாட்டிலேயே மூழ்கிப் போய், புலனின்பம், புத்திரன், தனம், ஆடுமாடுகள், கௌரவம் ஆகியவற்றையே தேடுகிறார்கள். அவற்றையே அடைகிறார்கள்;
சுதந்திரமான புருஷன் தனக்கு ஆன்மிகம் தேவையா, உலகியல் தேவையா என்று அவை இரண்டையும் அலசி, ஆராய்ந்து, அவ்விரண்டில் இருந்து தனக்கேற்றதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும்.
No comments:
Post a Comment