valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Friday 9 October 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

குருவின் திருவாய்மொழியிலும் சாஸ்திரங்களிலும் ஆழ்ந்த நம்பிக்கை வளர, வளர, மனதாலும் உடலாலும் செயல்புரியும் நாட்டம் குறைந்துகொண்டே போகிறது. ஆத்மாவை அறிவதற்காக செய்யும் முயற்சிகள் லாபமளிக்கின்றன.

அப்பொழுதுதான் 'ஒன்றாகக் காணும் காட்சி' கிடைக்கிறது. சடப்பொருள்களிலிருந்தும்  புலனின்பங்களில் இருந்தும் விடுதலை கிடைக்கிறது. ஹிருதயத்தின் அஞ்ஞான முடிச்சுகள் அவிழ்ந்து, சாதகர் தோன்றாநிலையில் இருக்கும் இறைவனுடன் கலந்துவிடுகிறார்.

ஒளிக்கீற்றிலிருக்கும் சூக்குமமான அணுவைவிட சூக்குமமானது ஆத்மா. இதுவே ஆத்மாவைப் பற்றிய அனுமானமும் நிர்தாரனம்மும்.

ஆத்மா மிகப் பெரியதை விட மிகப் பெரியதான பிரம்மாண்டத்தை விடப் பெரியது. ஆயினும் இதெல்லாம் உபமானப் பிரமாணங்களே; ஆத்மா அளவிடமுடியாதது.

சூக்கும தத்துவத்தில் ஆத்மா 'அணுவிற்கும் அணுவானது'. மஹத் தத்துவத்தில் ஆத்மா 'பெரியதினும் பெரியது'. நாமமும் ரூபமும், கேவலம் பேதபடுத்திப் பார்க்கும் அறிவு. ஆத்மாவோ பேதமே இல்லாதது. பரிபூரணமானது.

ஆத்மாவுக்கு ஜனனமில்லை; மரணமில்லை; மூலகாரணமில்லை. ஆத்மா பிறக்காதது. நித்தியமானது; சாசுவதமானது; புராதானமானது. ஆத்மாவை சுலபமாக நிர்த்தனம் செய்ய முடியாது.

பிரம்மத்தின் சின்னமாகிய ஓங்காரமே அத்மாவினுடைய பரம் சொரூபம். ஆகமங்களும் நிகமங்களுமே அதை சுலபமாக புரிந்துகொள்ளவில்லை; எல்லாரும் சுலபமாகப் புரிந்துகொள்ளகூடிய விஷயமா என்ன?

ஆத்மாவைப் புரிந்துகொள்ள முயன்ற வேதங்கள் சோர்ந்து போயின; தவசிகள் வனத்திற்கு போனார்கள்; உபநிஷதங்கள் கையை விரித்துவிட்டன. அதை இன்னதென்று கண்டுபிடிக்க யாராலும் முடியவில்லை.

ஆத்மாவின் சொரூபத்தை அறிந்துகொள்ள, முழுமுதற் பொருளும் ஆத்மாவும் ஒன்றே என்பதை தரிசனம் செய்த ஆசாரியர் (குரு) ஒருவர் தேவை. தர்க்க சாஸ்திர நிபுணர்களும் இங்கு நுழைய முடியாது என்னும் நிலையில், மற்றவர்களைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது?

கேவலம் தர்க்க சாஸ்திர பண்டிதர்களுக்கு இங்கு இடமே இல்லை; அவர்களுடைய குழம்பிய மனம் ஏற்படுத்தும் சூழலிலேயே மாட்டிக் கொண்டு சுற்றி சுற்றி வருவார்கள்.

நாமே கற்பனை செய்துகொள்ளும் எண்ணற்ற நக்ஷத்திரங்களும், நம்மை 84 லட்ச ஜனன மரணச் சுழல்களில் இருந்து விடுபட வைக்க முடியாது.  'ஆகமமும் ஆசாரியனும்' என்னும் ஒரு சந்திரனே போதும்; அஞ்ஞானம் லவலேசமும் இல்லாதது அழிந்துவிடும்.  


No comments:

Post a Comment