valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 29 October 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

சாதகரின் கடுமையான தவத்தைக் கண்டு, ஆத்மாவுக்குக் கருணை ஏற்பட்டுத் தன்னுடைய நிஜஸ்வரூபத்தை வெளிப்படுத்தும். ஆனால், குரு இல்லாமல் இது நடக்காது.

ஆகவே, தம்முடைய உண்மயான சொரூபத்தை அறிய விரும்புவர். சிரவணமும் (நற் கேள்வியும்) மனனமும் (அதைப் பற்றிய தியானமும்) செய்ய வேண்டும். சதா அபேத பாவத்தை செயல்முறைக்கு கொண்டுவர வேண்டும். இதுவே ஆத்ம லாபம் அடையும் வழி.

பிரபஞ்சமே அஞ்ஞானத்தில் மூழ்கி இருக்கிறது. அதனுடைய வியாபகமே (இருப்பே) அஞ்ஞான மூலம். ஞானம் இல்லாது மோக்ஷம் கிடைக்காது என்பதை நன்கு அறிக.

சாஸ்திரங்களில் இருந்து அனுபவ ஞானம் பெறுவதற்கு, அனுமான சக்தியும் யுக்தி சக்தியும் தேவைப்படுகிறது. ஆனால், சாதகரை பொறுத்தவரை, பிரபஞ்சம் நாசமானதால்தான் ஞானம் உதயமாகும்; வேறு எவ்விதமாகவும் நடக்காது.

'மகாத்மாவும் பாவாத்மாவும் எல்லா ஜீவன்களும் பரமாத்மாவே' என்று அறிந்து வாழ்பவரே உயர்ந்த மனிதராவார். அவருக்கு இறைவனும் இறைவனின் சிருஷ்டியும் ஒன்றே.

இறைவனும் தானும் ஒன்று என்று அறிவதே எல்லா ஞானங்களின் உச்சியாகும். ஆத்ம ஞானம் பிறந்துவிட்டால், எல்லா விதமான அஞானங்களும் அழிந்துவிடும்.

ஆத்மா ஞானம் கிடைத்து விட்டால், அறிந்து கொள்ள வேண்டியது வேறெதுவும் இல்லை. மற்றப் பொருள்களைப் பற்றி ஞானம் உள்ளங்கை நெல்லிக் கனி போல் தானாகவே விளங்கிவிடும்.

சாதகர் ஆத்ம ஞானத்தின் பலனாக உலக பந்தங்களில் இருந்து முழுமையாக விடுதலி அடைந்து விடுகிறார். இவ்வுலகில் வாழும்போதே பரமானந்தத்தை அனுபவிக்கிறார். சரியான சமயத்தில் மோட்சத்தையும் அடைகிறார்.

ஆத்மா எங்கும் நிறைந்திருக்கிறது என்பதை புத்தியின் வழிகளால் புரிந்து கொள்வதற்காகவே, சிறியதினும் சிறியது, பெரியதினும் பெரியது என்றெல்லாம் விவரிக்கப்படுகிறது.

சுயமாக ஆத்மா பெரியதுமன்று; சிறியதுமன்று; அளவைப் பற்றிய பேச்செல்லாம் இங்கே கற்பனையே. நான்முகனில் இருந்து புல் பூண்டு வரை, சிருஷ்டி அனைத்திலும் ஆத்மா வியாபித்திருக்கிறது.

வார்த்தைகளால் விவரிக்க முடியாததை, எல்லையே இல்லாததை, வார்த்தைகளால் ஓர் எல்லைக்குள் கொண்டு வருவது புத்திக்கு எட்ட வைப்பதற்காகத்தான்.

ஆத்மாவின் மர்மம், கேவலம் புத்தி சக்தியால் அறியப்பட மாட்டாது. சாதுவோ, ஞானியோ, சத்குருவோ அருள் செய்தால்தான் கிடைக்கும். அவ்விதமான அருளைப் பெறுவதற்கு, மிகுந்த ஈடுபாட்டுடனும் பக்தியுடனும் அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும்.  


No comments:

Post a Comment