ஷிர்டி சாயி சத்சரிதம்
ஆத்மா நித்தியமானது; மாறுபாடு அடையாதது. தன்னையறிந்தவர் எதற்கும் சோகப்படமாட்டார். அவர் மகா தைரியசாலி; மகா புத்திமான்; பிறவிப் பிணியிலிருந்து விடுதலை பெற்றவர்.
பிரசங்கம் செய்யகூடிய சக்தியும் யுக்திகளும், புத்தகங்களைப் படித்து அர்த்தங்களை புரிந்து கொள்ளும் சக்தியும் இங்கே செல்லுபடியாகாது; வேதங்களில் இருந்தும் உபநிஷதங்களில் இருந்தும் அறிந்துகொண்டே ஆழ்ந்த ஞானமும் ஆத்மாவைப் பற்றி எதையும் விவரிக்க முடியாது.
ஆத்மா நித்தியமானது; மாறுபடாதது. சரீரம் அநித்தியமானது. ஒவ்வொரு கணமும் மாறுபட்டுக் கொண்டே இருப்பது. இதையறிந்து, தம்முடைய நன்மைக்காகப் பாடுபடும் எது விதிக்கப் படாதது, எது விதிக்கப்பட்டது என்பதை அறிந்து தம்முடைய செய்கைகளை செய்வார்.
ஆத்ம ஞானி சதா நிர்ப்பயமானவர். தன்னைத் தவிர வேறொன்றுமே இல்லை என்பதை நன்கறிந்தவர். துவைத பாவனை முழுமையாக அழிக்கப்படும்போது, சோகமும் நிச்சயமாக அழிந்துவிடும்.
ஆத்மாவை அறிந்து கொள்வது கஷ்டமான காரியமாக இருப்பினும், பிரசங்கங்களை கேட்டுப் புரிந்துகொள்ள முடியாததாயினும், கேவலம் மேதை இங்கு பிரயோஜனப் படாதாயினும், சுலபமாக அறிந்து கொள்ளும் உபாயங்களும் உண்டு.
எவர் எல்லா ஆசைகளையும் தவிர்த்துவிட்டு, ஆத்மஞானம் அடைய வேண்டும் என்னும் ஒரே விருப்பத்துடன் சதா ஆத்மாவை இறைஞ்சுகின்றாரோ, அவரே இம் மேன்மையான லாபத்தை அடைவார்.
'எனக்கும் இறைவனுக்கும் பேதமில்லை' என்னும் கருத்தை எந்நேரமும் மனத்தில் நிலை நாட்டியவருக்கு ஆத்மா அனுக்கிரஹம் செய்யும். கதாகீர்தனங்கள் கேட்கும்போதும் தியானம் செய்யும்போதும் 'நானும் இறைவனும் ஒன்று' என்று தமக்கு தாமே அவர் சொல்லிக் கொள்வார்.
பாவ காரியங்களில் இருந்து விடுபடாதவன், பந்தப் பட்டவன், சாந்தியில்லாதவன், தியான சக்தி இல்லாதவன் இந்த ஞானத்தை அடைய முடியாது.
சுருதிகளின்படியும் (வேதங்கள்) ஸ்மிருதிகளின்படியும் (வாழ்க்கை நெறி நூல்கள்) வாழ்க்கை நடத்தி, அவற்றால் செய்யக் கூடாது என்று விதிக்கப்பட்ட காரியங்களை விலக்கி, எந்நேரமும் தியானத்தில் மூழ்கியவருக்குள் ஆத்மா ஞானம் பொதிந்து கிடக்கிறது.
எவர் பாவச் செயல்களை விலக்கி விட்டவரோ, எவர் குருவின் பாதங்களில் வினயத்துடன் பணிந்து கிடக்கிறாரோ, எவர் செயல்களின் பலனைத் துறந்துவிட்டவரோ, அவருக்குதான் ஆத்மா ஞானம் கிடைக்கும்.
உலக பந்தங்களில் இருந்து விடுதலை அடையாமல், எல்லா விருத்திகளையும் (பிழைக்கும் வழிகளையும்) விட்டுவிடாமல், ஆத்ம ஞானம் அடைவது நடக்காத காரியம்.
ஆத்மா நித்தியமானது; மாறுபாடு அடையாதது. தன்னையறிந்தவர் எதற்கும் சோகப்படமாட்டார். அவர் மகா தைரியசாலி; மகா புத்திமான்; பிறவிப் பிணியிலிருந்து விடுதலை பெற்றவர்.
பிரசங்கம் செய்யகூடிய சக்தியும் யுக்திகளும், புத்தகங்களைப் படித்து அர்த்தங்களை புரிந்து கொள்ளும் சக்தியும் இங்கே செல்லுபடியாகாது; வேதங்களில் இருந்தும் உபநிஷதங்களில் இருந்தும் அறிந்துகொண்டே ஆழ்ந்த ஞானமும் ஆத்மாவைப் பற்றி எதையும் விவரிக்க முடியாது.
ஆத்மா நித்தியமானது; மாறுபடாதது. சரீரம் அநித்தியமானது. ஒவ்வொரு கணமும் மாறுபட்டுக் கொண்டே இருப்பது. இதையறிந்து, தம்முடைய நன்மைக்காகப் பாடுபடும் எது விதிக்கப் படாதது, எது விதிக்கப்பட்டது என்பதை அறிந்து தம்முடைய செய்கைகளை செய்வார்.
ஆத்ம ஞானி சதா நிர்ப்பயமானவர். தன்னைத் தவிர வேறொன்றுமே இல்லை என்பதை நன்கறிந்தவர். துவைத பாவனை முழுமையாக அழிக்கப்படும்போது, சோகமும் நிச்சயமாக அழிந்துவிடும்.
ஆத்மாவை அறிந்து கொள்வது கஷ்டமான காரியமாக இருப்பினும், பிரசங்கங்களை கேட்டுப் புரிந்துகொள்ள முடியாததாயினும், கேவலம் மேதை இங்கு பிரயோஜனப் படாதாயினும், சுலபமாக அறிந்து கொள்ளும் உபாயங்களும் உண்டு.
எவர் எல்லா ஆசைகளையும் தவிர்த்துவிட்டு, ஆத்மஞானம் அடைய வேண்டும் என்னும் ஒரே விருப்பத்துடன் சதா ஆத்மாவை இறைஞ்சுகின்றாரோ, அவரே இம் மேன்மையான லாபத்தை அடைவார்.
'எனக்கும் இறைவனுக்கும் பேதமில்லை' என்னும் கருத்தை எந்நேரமும் மனத்தில் நிலை நாட்டியவருக்கு ஆத்மா அனுக்கிரஹம் செய்யும். கதாகீர்தனங்கள் கேட்கும்போதும் தியானம் செய்யும்போதும் 'நானும் இறைவனும் ஒன்று' என்று தமக்கு தாமே அவர் சொல்லிக் கொள்வார்.
பாவ காரியங்களில் இருந்து விடுபடாதவன், பந்தப் பட்டவன், சாந்தியில்லாதவன், தியான சக்தி இல்லாதவன் இந்த ஞானத்தை அடைய முடியாது.
சுருதிகளின்படியும் (வேதங்கள்) ஸ்மிருதிகளின்படியும் (வாழ்க்கை நெறி நூல்கள்) வாழ்க்கை நடத்தி, அவற்றால் செய்யக் கூடாது என்று விதிக்கப்பட்ட காரியங்களை விலக்கி, எந்நேரமும் தியானத்தில் மூழ்கியவருக்குள் ஆத்மா ஞானம் பொதிந்து கிடக்கிறது.
எவர் பாவச் செயல்களை விலக்கி விட்டவரோ, எவர் குருவின் பாதங்களில் வினயத்துடன் பணிந்து கிடக்கிறாரோ, எவர் செயல்களின் பலனைத் துறந்துவிட்டவரோ, அவருக்குதான் ஆத்மா ஞானம் கிடைக்கும்.
உலக பந்தங்களில் இருந்து விடுதலை அடையாமல், எல்லா விருத்திகளையும் (பிழைக்கும் வழிகளையும்) விட்டுவிடாமல், ஆத்ம ஞானம் அடைவது நடக்காத காரியம்.
No comments:
Post a Comment