ஷிர்டி சாயி சத்சரிதம்
சத்குருவின் பாதங்களை உறுதியாகப் பிடித்துக் கொள்பவர், மற்றவர்கள் பலவிதமாக சிரமப்பட்டும் அடையமுடியாததை சொற்பமான முயற்சியாலேயே அடைந்துவிடுவார்.
அஞ்ஞானம் அழிக்கப்பட்டு சச்சிதானந்த சொரூபத்தில் நிலைத்துவிட்டால், தன்னை அறியும் நிலை உதயமாகிறது. இந்த நிலைக்கு மோக்ஷம் என்பது மற்றொரு பெயர்.
இதுவே ஜீவனின் அத்தியந்தமான லட்சியம். இதை அடைவதற்காகவே பிரம்ம யோகிகள் பலவிதமான இன்னல்களை கடந்து வந்து தம்மிலேயே மூழ்கியிருக்கின்றனர்.
ஆத்மாவிலிருந்து விலகிச் செல்பவர் உலகவிஷயங்களின் சுழலில் மாட்டிக் கொள்கிறார். ஆத்மாவிலேயே நிரந்தரமாகவும் நிச்சலமாகவும் மூழ்கியவருடைய புலனின்ப நாட்டம் நசித்துப் போகிறது.
தம்முடைய உண்மையான சொரூபத்திற்கு முகத்தை திருப்பிக்கொண்டு செல்பவருக்கு உலகவிவகாரங்கள் இன்முகம் காட்டுகின்றன. ஆறே உண்மையான சொரூபத்திற்கு இன்முகம் காட்டினால் உலகவிவகாரங்கள் அவரிடமிருந்து ஓடி விடுகின்றன.
மோக்ஷத்தை தவிர வேறெதையும் மனதில் கொள்ளாதவரே, இவ்வுலகத்திலோ பரவுலகத்திலோ வேறெதையும் விரும்பாதவரே, மோக்ஷம் அடைவதற்கு அதிகாரியாவார்.
இந்த லக்ஷணங்களில் ஒன்றே ஒன்று குறைபட இருப்பினும், அவர் உண்மையான இறைநாட்டம் உடையவர் அல்லர் என்பதைத் தெளிவாக அறியவும். ஒற்றை கண்ணுடைய பார்வை போன்று அவர் இறைநாட்டம் உடையவர் போல் பாசாங்கு செய்கிறார்.
அஹங்காரம் அடியோடு அழியாதவரையில், பேராசை நிர்மூலமாக்கப் படாதவரையில் மனத்தினுடைய வாசனைகள் ஒழிந்து போகாதவரையில், பிரம்ம ஞானம் பதியாது.
தேஹந்தான் நான் என்று நினைப்பது ஒரு பிராந்தி (மயக்கம்). எவ்விதமான விருப்பமும் ஒரு பந்தமே. உலக விஷய கற்பனைகளையும் ஞாபகத்தையும் விட்டு விட்டால் பிரம்ம ஞானம் பெறலாம்.
குணங்களும் உருவமுமற்ற பிரம்மத்தை காண்பதரிது. ஆகவே, உருவமெடுத்த, குணமுள்ள பிரம்மத்தின் முக்கியத்துவத்தை அறிந்து அதை வழிபடுவதையே அறிவாளிகள் தருமநெரியாகக் கருதுகிறார்கள்.
ஆத்மா எல்லா உயிர்களிலும் மர்மமாகவும் சூக்குமமாகவும் உறைகிறது என்று வேதாந்திகள் அறிவர். எல்லாருமே உள்ளுணர்வாக அறியும் இவ்வுண்மைக்கு மறுக்க முடியாத நிரூபணம் கேட்டால் எங்கிருக்கிறது?
முதலாவதாக, சித்தம் சுத்தமடைய வேண்டும்; அதற்கும் மேலாக, புத்தி தர்ப்பையின் நுனி பொண்டு சூக்குமமாக கூர்மையாக வேண்டும். அப்பொழுதுதான் மூற்று நிலைகளிலும் தூயதான ஆத்மா கிருபைகொண்டு தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொள்ளும்;
சத்குருவின் பாதங்களை உறுதியாகப் பிடித்துக் கொள்பவர், மற்றவர்கள் பலவிதமாக சிரமப்பட்டும் அடையமுடியாததை சொற்பமான முயற்சியாலேயே அடைந்துவிடுவார்.
அஞ்ஞானம் அழிக்கப்பட்டு சச்சிதானந்த சொரூபத்தில் நிலைத்துவிட்டால், தன்னை அறியும் நிலை உதயமாகிறது. இந்த நிலைக்கு மோக்ஷம் என்பது மற்றொரு பெயர்.
இதுவே ஜீவனின் அத்தியந்தமான லட்சியம். இதை அடைவதற்காகவே பிரம்ம யோகிகள் பலவிதமான இன்னல்களை கடந்து வந்து தம்மிலேயே மூழ்கியிருக்கின்றனர்.
ஆத்மாவிலிருந்து விலகிச் செல்பவர் உலகவிஷயங்களின் சுழலில் மாட்டிக் கொள்கிறார். ஆத்மாவிலேயே நிரந்தரமாகவும் நிச்சலமாகவும் மூழ்கியவருடைய புலனின்ப நாட்டம் நசித்துப் போகிறது.
தம்முடைய உண்மையான சொரூபத்திற்கு முகத்தை திருப்பிக்கொண்டு செல்பவருக்கு உலகவிவகாரங்கள் இன்முகம் காட்டுகின்றன. ஆறே உண்மையான சொரூபத்திற்கு இன்முகம் காட்டினால் உலகவிவகாரங்கள் அவரிடமிருந்து ஓடி விடுகின்றன.
மோக்ஷத்தை தவிர வேறெதையும் மனதில் கொள்ளாதவரே, இவ்வுலகத்திலோ பரவுலகத்திலோ வேறெதையும் விரும்பாதவரே, மோக்ஷம் அடைவதற்கு அதிகாரியாவார்.
இந்த லக்ஷணங்களில் ஒன்றே ஒன்று குறைபட இருப்பினும், அவர் உண்மையான இறைநாட்டம் உடையவர் அல்லர் என்பதைத் தெளிவாக அறியவும். ஒற்றை கண்ணுடைய பார்வை போன்று அவர் இறைநாட்டம் உடையவர் போல் பாசாங்கு செய்கிறார்.
அஹங்காரம் அடியோடு அழியாதவரையில், பேராசை நிர்மூலமாக்கப் படாதவரையில் மனத்தினுடைய வாசனைகள் ஒழிந்து போகாதவரையில், பிரம்ம ஞானம் பதியாது.
தேஹந்தான் நான் என்று நினைப்பது ஒரு பிராந்தி (மயக்கம்). எவ்விதமான விருப்பமும் ஒரு பந்தமே. உலக விஷய கற்பனைகளையும் ஞாபகத்தையும் விட்டு விட்டால் பிரம்ம ஞானம் பெறலாம்.
குணங்களும் உருவமுமற்ற பிரம்மத்தை காண்பதரிது. ஆகவே, உருவமெடுத்த, குணமுள்ள பிரம்மத்தின் முக்கியத்துவத்தை அறிந்து அதை வழிபடுவதையே அறிவாளிகள் தருமநெரியாகக் கருதுகிறார்கள்.
ஆத்மா எல்லா உயிர்களிலும் மர்மமாகவும் சூக்குமமாகவும் உறைகிறது என்று வேதாந்திகள் அறிவர். எல்லாருமே உள்ளுணர்வாக அறியும் இவ்வுண்மைக்கு மறுக்க முடியாத நிரூபணம் கேட்டால் எங்கிருக்கிறது?
முதலாவதாக, சித்தம் சுத்தமடைய வேண்டும்; அதற்கும் மேலாக, புத்தி தர்ப்பையின் நுனி பொண்டு சூக்குமமாக கூர்மையாக வேண்டும். அப்பொழுதுதான் மூற்று நிலைகளிலும் தூயதான ஆத்மா கிருபைகொண்டு தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொள்ளும்;
No comments:
Post a Comment