valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 24 September 2015


ஷிர்டி சாயி சத்சரிதம் 

துவைத பாவமே இல்லையென்றால் யார் கட்டுகிறார், யார் விடுதலை அடைகிறார்? துவைத பாவனை அத்வைத பாவனையால் மறைந்துவிடும்போது, அங்கு எவரும் கட்டுண்டில்லை; எவரும் விடுதலை செய்யப்படுவதும் இல்லை.

பகலும் இரவும் சூரியனால் உற்பத்தி செய்யப்படுபவையா என்ன? அது நம் பார்வையின் தோஷத்தினால் ஏற்படும் விவகாரம். சூரியன் எங்கோ இருக்கிறது; நம்முடைய பார்வையால் பாதிக்கப்படுவதில்லை.

சுவர்க்கத்தின் இன்பங்களும் நரகத்தின் இன்னல்களும் 'நானே கர்த்தா, நானே போக்தா (அனுபவிப்பவன்) என்ற உணர்வோடு அனுபவிக்கப்படும்போது ஆசைகளின் மீதுள்ள பிடிப்பு அதிகமாகிறது;

ஆத்மா நித்தியமானது; புராதனாமானது; அழிவே இல்லாதது; ஆத்மாவிற்கு ஜனனமரணங்கள் கிடையாது. ஓங்காரமே அதனுடைய சின்னம். அது ஆரம்பமும் முடிவுமில்லாதது. எப்பொழுதும் நிலைத்திருப்பது.

எவர் சரீரத்தையே ஆத்மாவென்று நினைக்கிறாரோ, தாம் வேறு, இந்தப் பிரபஞ்சம் வேறு என்று நினைக்கிறாரோ, அவருக்கு எவ்வளவு முயன்றாலும் ஆத்ம அனுபவத்தால் கிடைக்கும் ஞானம் என்றும் கிடைக்காது.

பேச்சு மற்றும் எல்லா இந்திரியங்களையும் வென்று விடு; மனதில் உறுதியை ஏற்றுகொள்; மனதின் அனிச்சை செயல்களை அழித்துவிடு; புத்தியை உறுதியாக பற்றிகொள்.

புத்தி ஒளிமயமான ஞானத்தை அளிக்கிறது. அதன்மேல் தான் மனம் ஒருமுகப்படுத்தப்பட வேண்டும். ஏனெனில், மனம் உட்பட எல்லா இந்திரியங்களும் புத்தியினுடைய ச்வாதீனதில்தான் இருக்கின்றன.

குடத்திற்கு ஆதிகாரணம் களிமண்ணே; அதே ரீதியில்தான் இந்திரியங்களுக்கு புத்தியும். புத்தியே இந்திரியங்களின் சாசுவதமான நிலையாகும். புத்தியினுடைய வியாபகம் அவ்வளவு பெரியது.

எங்கும் வியாபித்திருக்கும் சக்தியால், அது, மனம் உட்பட்ட எல்லா இந்திரியங்களையும் வியாபித்துவிடுகிறது. ஆகவே, புத்தியை மஹத் தத்துவத்தில் (எங்கும் வியாபித்திருக்கும் பிரபஞ்ச உணர்வு) கொண்டு போய்ச் சேர்த்துவிடு; மஹத் தத்துவத்தை ஆத்மாவில் சமர்ப்பணம் செய்துவிடு.

இவ்வாறு அனைத்தையும் ஒன்று சேர்த்துவிட்டால், ஆத்மஸ்வரூபம் நிர்த்தாரணம் ஆகிறது (உன்னையே நீ அறிகிறாய்). அதன்பிறகு, கிளிஞ்சலில் காணப்படும் வெள்ளியும், பாலைவனத்து மணலில் தெரியும் கானல் நீரும், கயிற்றில் இருக்கும் பாம்பும் நம்முடையை பார்வையிலுள்ள கோளாறே என்பது தெரிந்தவிடும்.

ஜனன மரணம் இல்லாததும் விசேஷங்கள் ஏதும் இல்லாததும் முழுமையானதுமான ஆத்மாவை, நம்முடைய நன்மைக்காக நாம் அறிந்துகொள்ள வேண்டுமென்று சாதுக்கள் கூறுகின்றனர்.

எல்லா விளைவுகளுக்கும் ஒரு காரணம் இவ்வுலகில் உண்டு; ஆனால், ஆத்மா காரணமற்றது; சுயம்பு (தான்தோன்றி). ஆத்மா புராதான மானதாயினும் புதியது; கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் என்று ஏதுமில்லாதது; சுபாவத்தினால் புத்தியற்றது;-


No comments:

Post a Comment