valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 20 August 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

"அவ்வாறே கோடைக்காலம், வசந்த காலம், குளிர்காலம் போன்ற பருவ காலங்களும் சரியான முறைப்படி வந்து போகின்றன. இந்திராதி தேவர்களும் மக்களைக் காப்பதற்காக எட்டுத் திக்குகளிலும் நியமிக்கப்பட்ட அஷ்ட பாலகர்களும் தங்களுடைய கடமைகளை செவ்வனே செய்கிறார்கள். இவை அனைத்துக்கும் மூலம் பிரம்மமே!

"ஆகவே, இந்த சரீரத்தை விட்டுப் போகுமுன் ஞானம் பெற்றவன், மனித வாழ்வின் குறிக்கோள் ஆகிய பிரம்மத்தை அடைகிறான். இல்லையெனில், பிறப்பு - இறப்பு என்னும் சுழல் அவனை விடாது துரத்துகிறது.-

"பிரம்மத்தை அறியுமுன்னரே இந்த உடல் வீழ்ந்து விட்டால், சம்சார பந்தத்தின் மிச்சம் அவனைத் தொடர்ந்து செல்லும். மறுபடியும் பிறவிஎடுப்பது தவிர்க்க முடியாததாகி விடும். -

"நான் உமக்கு பிரம்மத்தை மட்டுமன்று, பிரம்மச் சுறுளையே காட்டுகின்றேன். நகத்திலிருந்து சிகை வரை உம்மை மூடிகொண்டிருக்கும் அச்சுருளை விரித்துப் பிரித்துக் காட்டுகிறேன்."

ஓ! தேவாமிருதம் போன்ற இனிமையான வார்த்தைகள்; சுத்த அத்வைத ஞானச் சுரங்கம்; சந்தேஹத்தால் ஊஞ்சலாடும் மனிதர்களையும் கூட தூக்கி விடும் சக்தியுடையுது.

பாபாவின் அமுத மொழிகளின் சக்தியால், நிலையில்லாத புலனின்பங்களின் பின்னால் இரவும் பகலுமாக ஓடுபவர்கள் கூட, சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள பாதையை உறுதியாக நாடுவர்.

விநாயகர் சந்தோசம் அடைந்தால் (நாம் செய்யும் வழிபாட்டால்) உலகியல் சுகங்கள் அனைத்தும் கிடைக்கும். இந்திரன் சந்தோசம் அடைந்தால் சுவர்கத்தின் சம்பத்துகள் கிடைக்கும்.

குரு இவர்களையெல்லாம் விடச் சிறப்பானவர். சந்தோசம் அடைந்துவிட்டால், கிடைக்காத பொருளாகிய பிரம்மத்தையே காட்டிக் கொடுக்கக்கூடிய வள்ளல், குருவைத் தவிர வேறெவரும் இல்லை.

இந்த இனிமையான காதையைக் கேட்டால், சம்சார துக்கங்கள் அனைத்தும் மறந்து போய்விடும். பிரம்ம நாட்டம் உடையவர்களுக்கு என்ன பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று பாபாவுக்கு தெரியாதா!

ஆகவே, பாபா அவரை உட்காரச் செய்துவிட்டு, அவருடைய கவனத்தை வேறு திசையில் திருப்பி, அவர் கேட்ட கேள்வியை தாம் மறந்துவிட்டது போல, அவருக்குத் தோன்றும்படி செய்தார்.

பிறகு பாபா என்ன செய்தாரென்றால், ஒரு பையனைத் தம்மிடம் அழைத்து, "போ, சீக்கிரமாக போய் நந்துவுக்கு இந்தச் செய்தியைச் சொல்.-

No comments:

Post a Comment