valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 13 August 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

"பிரம்மத்தை அறியவேண்டுமென்று உம்முடைய தேடல் அத்தகையதே. ஒரு பைசாவும் ஈயாத கஞ்சனாகிய நீர், உம்முடைய ஆசையை நிறைவேற்றி வைக்கக் கூடியவர் எவரையும் காணமாட்டீர்."

ஆயினும், பிரம்மத்தை அறியவேண்டுமென்ற பேராவல் கொண்ட இம்மனிதர், போகவர ஒரு குதிரை வண்டியை அமர்த்திக்கொண்டு ஷீரடிக்கு கிளம்பிவிட்டார். இவ்விதமாக சாயியின் பாதங்களுக்கு வந்து சேர்ந்தார்.

சாயியை தரிசனம் செய்துவிட்டு அவருடைய பாதங்களுக்கு நமஸ்காரம் செய்தார். கதை கேட்பவர்களே, சாயி அவருக்குச் சொன்ன மதுரமான வார்த்தைகளைக் கேளுங்கள்.

சாயியின் கதைகள் என்னும் கற்பக விருக்ஷதிற்குக் கவனமான கேள்வி என்னும் தண்ணீரைப் பாய்ச்சினால், அது நன்றாக வேர்விட்டு, கேட்பவர்களுடைய பயபக்தி வளர்ந்து பலப்பல விதமான பழங்களை உற்பத்தி செய்யும்.

இம் மரத்தின் எல்லாப் பாகங்களும் இனிமையாக இருக்கும்; சுகந்தமான புஷ்பங்கள் மலரும்; மதுரமான பழங்களின் பாரத்தால் மரமே தழையும்; அனுபவிப்பவர்களின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.

அப்பொழுது அவர் சொன்னார், "பாபா, தயவு செய்து எனக்கு பிரம்மத்தை (முழு முதற் பொருளைக் ) காட்டுங்கள். இந்த ஒரே ஆவலுடன் நான் வந்திருக்கேன். ஷிர்டி பாபா தாமதமேதுமின்றி உடனே பிரம்மத்தை காட்டுகிறார் என்று சொல்கிறார்கள். -

"இதற்காகவே நான் நெடுந்தூரம் வந்திருக்கிறேன்; பயணம் செய்ததால் களைத்துவிட்டேன். ஆயினும் இப்பொழுது எனக்கு பிரம்மம் கிடைத்துவிட்டால், என்னுடைய முயற்சிகளுக்கு பலன் கிடைத்தவனாவேன்".

பாபா கூறினார், "கவலைப்படாதீர், நான் உமக்கு நேரத்தோடு உடனே பிரம்மத்தை காட்டுகிறேன். இங்கே கடன்வியாபாரமே என்றும் கிடையாது. உம்முடையதைப் போன்ற வேண்டுதலுடன் வருபவர்கள் அரிதினும் அரிது!-

"செல்வத்தையோ, சம்பத்தையோ, வியாதி நிவாரணத்தையோ, ஆபத்து விலக்கையோ, புகழையோ, கௌரவத்தையோ, ராஜிய பதவியையோதான்  மக்கள் கேட்கிறார்கள்; அனவரதமும் சுகத்தையே நாடுகிறார்கள்.-

"கேவலம் உலக சுகங்களை நாடியே மக்கள் ஷிர்டிக்கு ஓடி வருகின்றனர்; வெறும் பக்கீராகிய என்னை வழிபடுகின்றனர். யாரும் பிரம்மம் வேண்டுமென்ற கேட்பதில்லை.-

"இம்மாதிரியான மக்கள் (சுகம் நாடுபவர்) உம்மை போன்றவர்கள் மிகக் குறைவு. பிரம்ம ஞானம் கேட்டு யாரும் வரமாட்டார்களா என்று நான் ஏங்குகிறேன்; அவர்களை சந்திப்பது எனக்குப் பண்டிகையும் திருவிழாவுமாகும். -

"பிரம்மத்திற்கு பயந்தே சூரியனும் சந்திரனும் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பாதைகளில் செல்கிறார்கள். உதயமாவதும் அஸ்தமனவாதும் ஒளி தருவதும் ஓய்வதும் குறிப்பிட்ட நேரங்களில் நடக்கிறது.- 

No comments:

Post a Comment