valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 16 July 2015

ஷிர்டி சாயி சத் சரிதம்

ராஜாதி ராஜச் சக்ரவர்த்தியும் சாந்திஎனும் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் தெய்வமும் ஆத்மானந்த சாம்ராஜ்யத்தின் தலைவரும் நம்முடைய ஒரே அடைக்கலமுமாகிய குருராஜரை நமஸ்காரம் செய்வோம்.

அதே பக்தி, சஹஜ சமாதி என்னும் இரண்டு சாமரங்களும் ஆத்மானுபூதி, கைமேல் அனுபவம் என்னும் இரண்டு விசிறிகளும் அவருக்கு அருகே சதா மெதுவாக வீசப்படுகின்றன.

ஆத்மாவிலேயே லயித்துப் போதல் அவர் தலைக்குமேல் இருக்கும் குடை; சாந்தியும் நல்லுணர்வுகளும் அவருடைய கட்டியன்காரர்களின் கைகளில் இருக்கும் கோல்கள். காம, குரோத, லோப, மோக, மத, மாச்சரியங்களுக்கும் மாயையுக்கும் அவர் சந்நிதியில் இம்மியளவும் இடமில்லை.

ஓ, அவருடைய தர்பாரின் கம்பீரந்தான் என்னே! நான்கு வேதங்களும் ஆறு சாத்திரங்களும் பதினெட்டு புராணங்களும் அவருடைய புகழ் பாடும் அரசவைப் புலவர்கள். சுத்த ஞானத்தின் ஒளியே அவருக்குப் பின்னால் பிரபையாக அமைகிறது. கனமான ஆத்மானந்தம் சூழலில் பரவியிருக்கிறது.

பற்றின்மை, பக்தி, சுத்த ஞானம், கேள்வி, மனனம், தியானம், நிதித்யாசனம், இறை தரிசனம் ஆகிய எட்டும் பிரதானமான மந்திரிகளாக சேவை புரிகின்றன.

சாந்தியும் புலனடக்கமும் அவர் கழுத்தில் அணியும் தெய்வீக மணிகள். அவருடைய இனிமையான பேச்சு வேதாந்தமென்னும் சமுத்திரத்தில் இருந்து அமிருதத்தை கொண்டு வருகிறது.

ஞானமெனும் ஒளி வீசும் கூர்மையான வாளால் அவர் வெட்டுவதற்காக கையை ஓங்கும்போது, மனிதப் பிறவி என்னும் மரம் பயந்து நாடு நடுங்குகிறது.

நிரஞ்சனரெ! குணங்களுக்கு அப்பாற்பட்டவரே! யோகிராயரே! ஜெய ஜெய! தீனார்களை ரகிஷிப்பதர்காகவும் பரோபகாரதிற்காகுவுமே தேவரீர் மனித உடல் தாங்கியிருக்கிறது.

கடந்த அத்தியாயத்தில், ஒரு பக்தருடைய விசுவாசத்தை உறுதிப்படுத்துவதற்காக அவருடைய விரதத்தை பூர்த்தி செய்ய வைத்து, அவருடைய ரஹசியம் தமக்கு தெரியும் என்னும் குரிய்ப்பையும் எவ்வாறு காட்டினார் என்பது விவரிக்கப்பட்டது.  


No comments:

Post a Comment