ஷிர்டி சாயி சத்சரிதம்
மேகமண்டலத்தில் கணநேரமே ஒளிரும் மின்னலைப் போன்று நிலையில்லாதது இம்மனித வாழ்க்கை. பூமியில் வாழும் மனிதர்கள் காலன் என்னும் சர்ப்பத்தால் விழுங்கப்பட்டிருப்பதால், கனமேனும் சுகம் காண்பது அரிது.
மாத, பிதா, சகோதரன், சகோதரி, மனைவி, மகன், மகள், மாமன் ஆகியவர்களனைவரும் நதிப்பிரவஹதில் கட்டைகள் அடித்துக் கொண்டு வருவதுபோல் குறுகிய காலத்துக்கு ஒன்று சேர்கிறார்கள்.
ஒரு கணத்தில் கட்டைகள் ஒன்று சேர்கின்றன; அடுத்த கணமே அலைகளால் சிதறியடிக்கப்படுகின்றன. ஒருமுறை பிரிவினை வந்துவிட்டால், மறுபடியும் முன்போன்றே ஒன்றுசேர்வது என்பது நடக்காத காரியம்.
ஆத்மாவுக்கு ஹிதமானத்தை இந்த ஜன்மத்தில் சாதிக்காதவன், தன்னுடைய தாயாருக்குப் பிரசவ வலியை கொடுதத்டு வியர்த்தம். ஞானிகளின் பாதங்களை சரணடையாவிடின் அவனுடைய வாழ்கையே வீண்.
ஒரு பிராணி பிறந்தவுடனே, சாவின் பாதையில் நடக்க ஆரம்பிக்கிறது. 'சாவு இன்று வராது, நாளைக்கோ அல்லது நாளை மறுநாளோ தான் வரும்' என்று நினைப்பவன் தன்னையே ஏமாற்றிக் கொள்கிறான்.
காலனைப் பற்றிய நினைவு மனதைவிட்டு மறைய வேண்டா. இந்த தேஹமானது கேவலம் காலனுக்கு உணவே. இதுதான் இவ்வுலக வாழ்வின் லக்ஷணம். ஆகவே, உஷார்!
எவர் உலக விவகாரங்களை விவேகத்தோடும் ஞானத்தோடும் அணுகுகிறாரோ , அவர் பிரயாசை இன்றியே ஆன்மீக முன்னேற்றம் அடைவார். ஆகவே, உலகியல் விவகாரங்களில் மந்தமோ சோம்பேறித் தனமோ உதவாது. மனித வாழ்வின் நான்கு புருஷார்தாங்களில் (ஆறாம் - பொருள் - இன்பம்- வீடு) ஆர்வமின்மையோ உதாசீனமோ உதவாது.
சாயியின் காதைகளைப் பிரேமையுடன் கேட்பவர்கள், வாழ்கையில் உயர்ந்த சிறேயசை (மேன்மையை) அடைவார்கள். அவர்களுக்கு சாயியின் பாதங்களின் மேல் பக்தி வளர்ந்து சந்தோஷ மென்னும் பெருநிதி அவர்களுடையதாகும்.
சாயியின்மேல் பூரணமான பிரேமை கொண்டவர்கள், இக்கதைக் கொத்தால் ஒவ்வொரு படியிலும் சாயியின் பொற்கமலப் பாதங்களை நினைவுகொள்வார்கள்.
இக்கதைகள் நிசப்தமானதைப் பற்றிய சப்தம் மிகுந்த வர்ணனை; இந்திர்யங்களுக்கு அப்பாற்பட்டதை இந்திரியங்களால் சுவைத்த அனுபவம். ஆகவே, இந்த அமிருதபானத்தை எவ்வளவு அருந்தினாலும் திருப்தி கிடைப்பது துர்லபம் (அரிது)!
ஞானிகளுடைய மகிமை சொல்லுக்கப்பாற்பட்டது; அவர்களுடைய லீலையோ கற்பனைக்கப்பாற்பட்டது; வார்த்தைகளால் முழுமையாக விளக்கும் சாமர்த்தியம் யாருக்கு உண்டு?
இக்காதைகள் எப்பொழுதெல்லாம் கத்தில் விழுகின்றனவோ, அப்பொழுதெல்லாம் சாயி கண்முன்னே தோன்றுவார். அவ்வாறு அவர் இதயத்திலும் எண்ணங்களிலும் தியானத்திலும் சிந்தனையிலும் இரவு பகலாக நிலைத்து விடுவார்.
No comments:
Post a Comment