ஷிர்டி சாயி சத்சரிதம்
பாடீல் இது விஷயத்தில் முன்னோடியாக விளங்கினார். கிராமத்தில் அது ஒரு வழக்கமாகிவிட்டது. ஒருவர் பின் ஒருவராக மக்கள் அனைவரும் சத்திய சாயி விரதத்தை அனுஷ்டிக்க ஆரம்பித்தனர்.
ஞானிகளின் கிருபை இவ்வாறே! உரிய காலத்தில் பிராப்தம் நேரும்போது, தரிசனத்தாலேயே பக்தர்களுடைய இன்னல்கள் அழிந்து போகின்றன. யமனும் திருப்பியனுப்பபடுகிறான்.
அடுத்த காதலி, சந்ததி இல்லையே என்று ஒருவர் பட்ட கவலையும் எல்லா ஞானிகளும் ஏகாந்தமாக இருக்கும் அற்புதத்தையும் விவரிக்கும்.
நாந்தேட் நகரத்தில் வாசித்த, பார்சி மதத்தைச் சேர்ந்த பணக்காரர் ஒருவர் பாபாவின் ஆசீர்வதத்தால் புத்திரபாக்கியம் பெற்றார்.
நாந்தேடில் வாசித்த மௌலிசாஹெப் என்ற ஞானியும் பாபாவும் ஒன்றே என்பது நிரூபிக்கப்பட்டது. பார்சி கனவான் ஆனந்தம் பொங்க வீடு திரும்பினார்.
இக்காதை உள்ளத்தை தொடும். கேட்பவர்களே! அமைதியுடன் இக்காதையை கேளுங்கள். சாயி எங்கும் நிறைந்தவர் என்பதும் அவருடைய வாத்சல்யமும் (தாயன்பும்) உங்களுக்கு நன்கு விளங்கும்.
ஹேமாட் பந்த் சாயியின் பொற்கமல பாதங்களில் பரிபூரணமாக சரணடைகிறேன். ஞானிகளையும் கதை கேட்பவர்களையும் வணங்குகிறேன். அடுத்த அத்தியாத்தின் விவரணத்தை பயபக்தியுடன் கேளுங்கள்.
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, "ஸ்ரீ சமர்த்த சாயி சத்சரிதம்" என்னும் காவியத்தில், 'பீமாஜி க்ஷயரோக நிவாரணம்" என்னும் பதின்மூன்றாவது அத்தியாயம் முற்றும்.
ஸ்ரீசத் குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
No comments:
Post a Comment