ஷிர்டி சாயி சத் சரிதம்
"இந்த வழியில்தான் நான் சிறிதளவாவது என்னுடையை நன்றிக்கடனை கழிக்க முடியும்; வேறு வழி ஏதுமே இல்லை. பாபா சாயி, உம்முடைய அற்புதமான வழிமுறைகள் புரிந்துகொள்ள முடியாதவை.!"
பாடீல் பாபாவின் மகிமையைப் பாடியவாறு அங்கு ஒரு மாதம் தங்கினார். நானாவினுடைய உபகாரத்தை நன்றியுணர்வுடன் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு, முயற்சிக்குப் பலன் கிடைத்த முழுதிருப்தியுடன் வீடு திரும்பினார்.
சாயியின் கருணைக்கு என்றும் நன்றிசொல்லக் கடமைப் பட்ட பாடீல், பக்தியுடனும் சிரத்தையுடனும், ஆனந்தம் நிரம்பிய மனதுடன் ஷீரடிக்கு அடிக்கடி வந்து போனார்.
சாயி நாதருக்கு, இரண்டு கைகளையும் (வணக்கம் செய்பவை) ஒரு தலையையும் (தாழ்த்தி வணங்கும் அங்கம்) ஸ்திரமான நம்பிக்கையும் வேறெதிலும் நாட்டம் கொள்ளாத சிரத்தையும் தவிர வேறென்ன வேண்டும்! பக்தனின் நேர்மையான நன்றியுணர்வே அவருக்கு போதுமானது.
ஒருவருக்கு துன்பம் நேரும்போது, சத்தியனாராயனருக்கு பூஜை செய்கிறேன் என்று வேண்டிக் கொள்கிறார். துன்பத்திலிருந்து விடுதலை அடைந்தபின் சாங்கோபமாக (சடங்கு விதிமுறைகளின்படி) பூஜையை செய்கிறார்.
அதுபோலவே, பாடீல் அக்காலத்திலிருந்து ஒவ்வொரு வியாழக் கிழ மையும் தூய்மையாக, ஸ்நானம் செய்து விட்டு சத்திய சாயி விரதத்தை முறைப்படி அனுஷ்டானம் செய்தார்.
சத்திய நாராயண பூஜையின்போது மக்கள் சத்திய நாராயணரின் கதையைப் பாராயணம் செய்வார்கள். பாடீல் அதற்கு பதிலாக தாசகனு இயற்றிய 'நவீன பக்தலீலாமிருதம் ' என்னும் நூலிலிருந்து சாயி சரித்திரத்தை பாராயணம் செய்தார்.
இக்காவியத்தின் நாற்பத்தைந்து அத்தியாங்களில் தாசகனு பல உயர்ந்த பக்தர்களின் சரித்திரத்தை (அனுபவங்கள்) விவரித்திருக்கிறார். இதில் மூன்று அத்தியாயங்களில் சாயி நாதரின் சத்திய சாயி கதை சொல்லப் பட்டிருக்கிறது.
விரதங்களிலேயே உத்தமமான விரதம், பாடீல் பாராயணம் செய்த இம்மூன்று அத்தியாயங்களை பாராயணம் செய்வதுதான். அதன் பயனாக அவர் அபரிதமான சௌக்கியத்தையும் மன அமைதியையும் பெற்றார்.
பாடீல், தம்முடன் பிறந்தவர்களை உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்து, இந்த சத்திய சாயி விரதத்தை ஆனந்தம் நிரம்பிய மனதுடன் தவறாது செய்துவந்தார்.
நைவேத்தியம் (படையல்) சத்தியநாராயண பூஜைக்குச் செய்யப்பட்ட பொருள்களுடனும் அதே விகிதத்திலும் கலந்து செய்யப் பட்டது. மங்கள உற்சவமும் அதே முறையில் கொண்டாடப்பட்டது. அதில் தொழப்பட்ட தெய்வம் நாராயணர்; இதில் தொழப்பட்ட தெய்வம் சாயி; விரதத்தில் வேறு எந்த வித்தியாசமும் இல்லை.
------------------------------------------------------------------------------------------------------------------------
தற்காலத்தில் சாயி பக்தர்கள் 'ஸ்ரீ சாயீ சத்சரிதம்' மராட்டி நூலையோ (இம்மொழி பெயர்ப்பின் மூல நூல்) அல்லது நாகேஷ் வாசுதேவ் குணாஜி எழுதிய ஆங்கில சுருக்கத்தையோ அல்லது அதனுடைய தமிழ் மொழிபெயர்ப்பையோ (திரு. சொக்கலிங்கம் சுப்பிரமணியன்) சப்தமாகப் (ஏழு நாள்களுக்குள் ஆசாரமாக படித்து முடிப்பது) பாராயணம் செய்கின்றனர்.
"இந்த வழியில்தான் நான் சிறிதளவாவது என்னுடையை நன்றிக்கடனை கழிக்க முடியும்; வேறு வழி ஏதுமே இல்லை. பாபா சாயி, உம்முடைய அற்புதமான வழிமுறைகள் புரிந்துகொள்ள முடியாதவை.!"
பாடீல் பாபாவின் மகிமையைப் பாடியவாறு அங்கு ஒரு மாதம் தங்கினார். நானாவினுடைய உபகாரத்தை நன்றியுணர்வுடன் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு, முயற்சிக்குப் பலன் கிடைத்த முழுதிருப்தியுடன் வீடு திரும்பினார்.
சாயியின் கருணைக்கு என்றும் நன்றிசொல்லக் கடமைப் பட்ட பாடீல், பக்தியுடனும் சிரத்தையுடனும், ஆனந்தம் நிரம்பிய மனதுடன் ஷீரடிக்கு அடிக்கடி வந்து போனார்.
சாயி நாதருக்கு, இரண்டு கைகளையும் (வணக்கம் செய்பவை) ஒரு தலையையும் (தாழ்த்தி வணங்கும் அங்கம்) ஸ்திரமான நம்பிக்கையும் வேறெதிலும் நாட்டம் கொள்ளாத சிரத்தையும் தவிர வேறென்ன வேண்டும்! பக்தனின் நேர்மையான நன்றியுணர்வே அவருக்கு போதுமானது.
ஒருவருக்கு துன்பம் நேரும்போது, சத்தியனாராயனருக்கு பூஜை செய்கிறேன் என்று வேண்டிக் கொள்கிறார். துன்பத்திலிருந்து விடுதலை அடைந்தபின் சாங்கோபமாக (சடங்கு விதிமுறைகளின்படி) பூஜையை செய்கிறார்.
அதுபோலவே, பாடீல் அக்காலத்திலிருந்து ஒவ்வொரு வியாழக் கிழ மையும் தூய்மையாக, ஸ்நானம் செய்து விட்டு சத்திய சாயி விரதத்தை முறைப்படி அனுஷ்டானம் செய்தார்.
சத்திய நாராயண பூஜையின்போது மக்கள் சத்திய நாராயணரின் கதையைப் பாராயணம் செய்வார்கள். பாடீல் அதற்கு பதிலாக தாசகனு இயற்றிய 'நவீன பக்தலீலாமிருதம் ' என்னும் நூலிலிருந்து சாயி சரித்திரத்தை பாராயணம் செய்தார்.
இக்காவியத்தின் நாற்பத்தைந்து அத்தியாங்களில் தாசகனு பல உயர்ந்த பக்தர்களின் சரித்திரத்தை (அனுபவங்கள்) விவரித்திருக்கிறார். இதில் மூன்று அத்தியாயங்களில் சாயி நாதரின் சத்திய சாயி கதை சொல்லப் பட்டிருக்கிறது.
விரதங்களிலேயே உத்தமமான விரதம், பாடீல் பாராயணம் செய்த இம்மூன்று அத்தியாயங்களை பாராயணம் செய்வதுதான். அதன் பயனாக அவர் அபரிதமான சௌக்கியத்தையும் மன அமைதியையும் பெற்றார்.
பாடீல், தம்முடன் பிறந்தவர்களை உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்து, இந்த சத்திய சாயி விரதத்தை ஆனந்தம் நிரம்பிய மனதுடன் தவறாது செய்துவந்தார்.
நைவேத்தியம் (படையல்) சத்தியநாராயண பூஜைக்குச் செய்யப்பட்ட பொருள்களுடனும் அதே விகிதத்திலும் கலந்து செய்யப் பட்டது. மங்கள உற்சவமும் அதே முறையில் கொண்டாடப்பட்டது. அதில் தொழப்பட்ட தெய்வம் நாராயணர்; இதில் தொழப்பட்ட தெய்வம் சாயி; விரதத்தில் வேறு எந்த வித்தியாசமும் இல்லை.
------------------------------------------------------------------------------------------------------------------------
தற்காலத்தில் சாயி பக்தர்கள் 'ஸ்ரீ சாயீ சத்சரிதம்' மராட்டி நூலையோ (இம்மொழி பெயர்ப்பின் மூல நூல்) அல்லது நாகேஷ் வாசுதேவ் குணாஜி எழுதிய ஆங்கில சுருக்கத்தையோ அல்லது அதனுடைய தமிழ் மொழிபெயர்ப்பையோ (திரு. சொக்கலிங்கம் சுப்பிரமணியன்) சப்தமாகப் (ஏழு நாள்களுக்குள் ஆசாரமாக படித்து முடிப்பது) பாராயணம் செய்கின்றனர்.
No comments:
Post a Comment