ஷிர்டி சாயி சத் சரிதம்
"எந்தப் பெண்ணுக்கு வேறு வீட்டிற்குள் (தன்னுடைய வீடு தவிர) நுழைவது பாம்பின் தலைமேல் கால் வைப்பதுபோல் இருக்கிறதோ,
எவளுடைய வாயிலிருந்து வார்த்தைகளை பெறுவது கருமியிடம் செல்வத்தை பெறுவது போன்றதோ,
வீட்டில் செழிப்பு இல்லாது போயினும் எவளுக்கு கணவனின் சங்கம் பெரும் சந்தோஷத்தை அளிக்கிறதோ,
கணவனுடைய அனுமதியுடன் எவள் சாந்தமாகச் செயல் புரிகிறாலோ, அவளே பதிவிரதை ஆவாள்.
ஆனால், எந்தப் பிழைக்காக இந்தத் தண்டனை என்று புரிந்துகொள்வது கடினம். ஆயினும், ஆசிரியர் பிரம்பைக் கீழே வைப்பதாக இல்லை. வெறி பிடித்தவர்போல அடித்தார்.
இதையடுத்து, பீமாஜி முதற்கனவை விட விசித்திரமான கனவொன்று கண்டார். ஒரு மனிதர் அவருடைய மார்பின்மீது ஏறி உட்கார்ந்துகொண்டு பலமாக மார்பை அமுக்கினார்.
ஒரு குழவியைக் கையிலெடுத்துக் கொண்டு பீமாஜியினுடைய மார்பை அம்மியாக ஆக்கி அரைத்தார். தாங்க முடியாத வழியால், பரலோகப் பயணம் கிளம்பிவிட்டோம் என்று பீமாஜி நினைக்கும் வண்ணம், உயிரே எம்பி வாய்க்கு வந்துவிட்டதை போலிரிந்தது.
கனவு முடிந்தது. அவர் தூக்கத்தில் ஆழ்ந்தார்; தூக்கம் கொஞ்சம் சுகத்தை அளித்தது. உதயசூரியன் தோன்றினார்; பாடீல் விழித்துக் கொண்டார்.
எப்பொழுதாவது கண்டிராத வகையில் புத்துணர்ச்சி பெற்றார்! வியாதி பிடித்த உணர்வு நிர்மூலமாகியது. அம்மியும் குழவியும் பிரம்பும் சொன்ன குறிப்பு என்னெவென்று தெரிந்துகொள்வதற்கு யாருக்கு ஞாபகம் இருந்தது?
மக்கள் கனவுகளை அர்த்தமற்றனவாகவே நினைக்கின்றனர். ஆனால், சில நேரங்களில் நம்முடைய அனுபவம் எதிர்மாறாக இருக்கிறது. கனவு கண்ட அதே மங்களகரமான நேரத்தில் வியாதி ஒழிக்கப் பட்டது. பாடீலின் துன்பன் முடிவுற்றது.
பாடீலின் மனதில் சந்தோசம் பொங்கியது. தாம் புனர்ஜன்மம் எடுத்துவிட்டதாகவே நினைத்தார். பிறகு அவர் மெதுவாக சாயி தரிசனத்திற்கு கிளம்பினார்.
சந்திரனை போன்ற பாபாவின் முகத்தை பார்த்தவுடனே பாடீளுடைய மனதில் ஆனந்த சமுத்திரம் பொங்கியது. அவருடைய கண்கள் ஆனந்தமான அனுபவத்தில் செருகிக் கொண்டன. முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது.
பாபாவினுடைய பாதங்களில் தலை வைத்தபோது ஆனந்தக் கண்ணீர் மடை திறந்தார் போல வழிந்தது. பிரம்படியும் இதயமே வெடித்துவிடும் போன்று மார்பு அமுக்கப் பட்டதுமாகிய தண்டனைகளின் முடிவான விளைவு சந்தேகமில்லாமல் சுகத்தை அளிப்பதாகவே அமைந்தது.
"பாமரனாகிய என்னால் என்மீது காட்டப் பட்ட கருணைக்குப் பிரதி உபகாரமாக எதுவும் என்றுமே செய்ய இயலாது. ஆகவே, நான் என்னுடைய சிரத்தை உம்முடைய பாதங்களில் வைப்பதிலேயே திருப்தி கொள்கிறேன். -
No comments:
Post a Comment