ஷிர்டி சாய் சத்சரிதம்
பிறகு பாபா திரும்பி வந்து, தம்முடைய வழக்கமான இடத்தில் உட்கார்ந்துகொண்டார். காகா மகாஜனியும் சரியான நேரத்தில் அங்கு வந்து, பாபாவினுடைய பாதங்களைப் பிடித்துவிட ஆரம்பித்தார்.
கோபற்காங்விலிருந்து குதிரைவண்டிகள் வந்தன. பம்பாயிலிருந்து சில பக்தர்களும் வந்து சேர்ந்தனர். பூஜை சாமான்களை எடுத்துக் கொண்டு பக்தர்கள் மசூதியின் படிகளில் ஏறி பாபாவுக்கு நமஸ்காரம் செய்தனர்.
இக்குழுவினருடன் அந்தேரியிலிருந்து ஒரு பாடீல் மலர்கள், அக்ஷதை இன்னும் பிற பூஜை சாமான்களை எடுத்துக் கொண்டு வந்திருந்தார். தம்முடைய முறை வருவதற்காக காத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.
திடீரென்று, கீழேயிருந்த முற்றத்தில், தேர் வழக்கமாக நிறுத்தப்படும் இடத்தில பயங்கரமாக உருட்டிக் கொண்டு, விசித்திரமான குரலில் சத்தம் போட்டார்.
"யார் அங்கே கூந்தாலியால் குத்தினான்? அவனுடைய முதுகெலும்பை உடைத்துவிடுவேன்" என்று கூவிக் கொண்டே தம்முடைய சட்காவை எடுத்துக் கொண்டு எழுந்தார். சுற்றி இருந்த அனைவரும் பீதியடைந்தனர்.
பணியாள் கூந்தாலியை கீழே போட்டுவிட்டுத் 'தப்பித்தேன், பிழைத்தேன்' என்று ஓடிவிட்டான்; எல்லாரும் ஓடிவிட்டனர். பாபா காகாவின் கையைத் திடீரென்று பிடித்தபோது அவரும் திடுக்கிட்டுப் போனார்.
"நீர் எங்கே போகிறீர்? இங்கு உட்காரும்" என்று பாபா கூறினார். இதற்குள் தாத்யாயும் லக்ஷ்மிபாயும் அங்கு வந்தனர். பாபா அவர்களைத் தம் மனம் திருப்தி அடையும் வரை கண்டபடி ஏசினார்.
முற்றத்திற்கு வெளியே இருந்தவர்களையும் பாபா வசை மாறி பொழிந்தார். திடீரென்று அங்கே கிடந்த வறுத்த வேர்க்கடலை நிரம்பிய பை ஒன்றை பாபா எடுத்தார்.
பாபா எதிர்பாராமல் கோபாவேசம் கொண்டபோது, மசூதியிலிருந்து உயிருக்கு பயந்து சிதறி ஓடியவர்களில் யாராவது ஒருவருடைய கையிலிருந்த இந்தப் பை விழுந்திருக்க வேண்டும்.
வேர்க்கடலை ஒரு சேராவது இருக்கும். பிடிப்பிடியாக எடுத்து, உள்ளங்கைகளால் தேய்த்து வாயால் ஊதித் தோலை நீக்கினார் பாபா.
ஒரு பக்கம் வசவுகளை பொழிந்துகொண்டே மறுபக்கம் வேர்க்கடலையை தேய்த்து ஊதித் தள்ளினார். சுத்தம் செய்யப் பட்ட மஹாஜனியைத் தின்ன வைத்தார்.
No comments:
Post a Comment