ஷிர்டி சாயி சத்சரிதம்
"வீக்கம் என்னவோ இன்னும் இருக்கிறது; இன்னும் ஓர் அறுவைச் சிகிச்சை செய்யப்பட வேண்டுமென்ற பரிந்துரை இருந்தது; அதற்காகவே நான் மறுபடியும் மும்பை சென்றேன் -
"அதே டாக்டரிடம் சென்றேன். பாபாவை சங்கடத்தில் ஆழ்த்திவிட்டேனோ என்னவோ தெரியவில்லை. என்னுடைய காதைப் பரிசோதித்துப் பார்த்த டாக்டரால் வீக்கம் எங்கிருக்கிறது என்று கண்டு பிடிக்க முடியவில்லை.-
"ஆகவே டாக்டர் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய அவசியமில்லை என்று சொல்லிவிட்டார்." சன்னியாசியின் பெரிய கவலை ஒழிந்தது. எல்லாரும் பாபாவின் லீலையை கண்டு வியப்படைந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் இதே மாதிரியான காதையொன்று எனக்கு ஞாபகம் வருகிறது. அந்தக் காதையை சொல்லிவிட்டு இந்த அத்தியாயத்தை முடித்து விடுகிறேன்.
சபா மண்டபத்தின் தரைக்கு தளம் போடும் வேலை ஆரம்பிப்பதற்கு எட்டு நாள்களுக்கு முன்பு மகாஜனி காலரா நோயினால் கடுமையாக தாக்கப் பட்டார்.
அவருக்குப் பல தடவைகள் பேதியாகியது. ஆனால், இதயத்தின் ஆழத்தில் பாபாவின் மீது பாரத்தை போட்டுவிட்டு, மிகவும் நொந்து போயிருந்த நிலையிலும் இந்த மருந்தையும் வைத்தியமுறையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.
பாபா பூரணமான அந்தர்ஞானி என்று மகாஜனிக்கு தெரியும். ஆகவே, தம்முடைய நோய்பற்றி ஏதும் பாபாவுக்கு தெரிவிக்கவில்லை.
பாபா விருப்பப் பட்டபோது அவராகவே அந்த நோயை நீக்கிவிடுவார் என்னும் முழு நம்பிக்கையுடன் தம்முடைய வேதனையையும் துன்பத்தையும் பொறுத்துக் கொண்டார்.
எவ்வளவு துன்பப்பட்டாலும் சரி, தினப்படி பூஜைக்கும் ஹரதிக்கும் செல்வதற்குத் தடை ஏற்படக் கூடாது என்றே அவர் விரும்பினார்.
பேதி அடிக்கடியும் பலமுறைகளும் வரையின்றிப் போனபோது, தினப்படி ஹாரதி சேவையை இழந்துவிடக் கூடாது என்னும் நோக்கத்தில் அவர் என்ன செய்தாரென்றால், -
நீர் நிரம்பிய ஒரு தாமிரச் சொம்பை இருட்டிலும் சுலபமாக எடுக்கக் கூடிய இடத்தில மசூதியில் வைத்துக் கொண்டார்.
பாபாவின் பக்கத்தில் அமர்ந்து, பாபாவினுடைய பாதங்களை பிடித்துவிட்டு கொண்டு தம்முடைய நித்திய பழக்கப்படி ஹாரதி நேரத்தில் தவறாது அங்கிருந்தார்.
வயிறு சத்தமிட்டாலோ குழம்பினாலோ நீர்ப்பாத்திரம் அருகிலேயே இருந்தது. தனிமையான இடத்திற்கு சென்று மலம் கழித்துவிட்டு திரும்பி வந்துவிடுவார்.
இந்நிலையில், தாதா (கண்பத் கோதே பாடீல்) தரைக்கு தளம் போடுவதற்கு அனுமதி கேட்டார். பாபா அனுமதியளித்தார். பாபா அவரிடம் என்ன சொன்னாரென்று கேளுங்கள்!
"நாங்கள் இப்பொழுது லெண்டிக்குப் போய்க் கொண்டிருக்கிறோம். நாங்கள் எப்பொழுது திரும்பி வருகிறோமோ, அப்பொழுது தளம் போடும் வேலையை ஆரம்பியுங்கள்."
No comments:
Post a Comment