valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 14 August 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

தம் பக்தர்களுடைய நல்வாழ்வுக்காக தயாசாகரமான சாயி திருவாய் மலர்ந்தருளிய சத்தியமான வார்த்தைகளை மிகுந்த வினயத்துடன் கேளுங்கள். 

"யாருடைய பாவங்கள் விலக்கப்பட்டு விட்டனவோ அந்தப் புண்ணியசாலிகளே என்னை அறிந்துகொள்கிறார்கள்; என்னை வழிபடுகிறார்கள். -

"சாயி, சாயி என்று எந்நேரமும் ஜபம் செய்து கொண்டிருப்பீர்களானால், நான் என்னுடைய அருளால் உங்களுக்கு ஏழு கடல்களையும் அளிப்பேன் (ஏழு கடல்களுக்கப்பாலும் வந்து உங்களைக் காப்பாற்றுவேன்). எவர்கள் என்னுடைய இவ்வார்த்தைகளில் விசுவாசம் வைக்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக நல்வாழ்வு பெறுவார்கள். -

"எனக்கு அஷ்டோபசார பூஜையோ சோடசோபசார பூஜையோ வேண்டா. எங்கு பாவம் இருக்கிறதோ அங்கு நான் இருக்கிறேன்."

பக்தர்களின் மீதிருந்த அன்பினால் இதையே பாபா பலமுறைகள் திரும்பத் திரும்ப சொல்லியிருக்கிறார். இப்பொழுது நாம் அவ்வன்பான வார்த்தைகளை ஞாபகப் படுத்திக் கொள்வதில்தான் மனத்தை திருப்தி செய்து கொள்ள வேண்டும். (நேரில் கேட்க முடியாது).

(இந்த அத்தியாயம் மகாசமாதிக்குப்    பிறகு எழுதப் பட்டது என்பதற்கு இந்த சுலோகத்தை அகச் சான்றாக கொள்ளலாம்.) 


No comments:

Post a Comment