ஷிர்டி சாயி சத்சரிதம்
"எனக்கு நமஸ்காரம் செய், என்று பாபா நிச்சயமாகச் சொல்ல மாட்டார்" மாம்லதார் இவ்விதமாக உறுதிமொழி அளித்தபின், டாக்டர் ஷிர்டி செல்வதற்கு சம்மதம் தெரிவித்தார்.
தம் நண்பரின் உறுதிமொழிக்கு கட்டுப்பட்டு, சந்தேகங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு பாபாவை தரிசனம் செய்வதற்கு செல்வதென்று டாக்டர் முடிவெடுத்தார்.
அதிசயத்திலும் அதிசயம்! ஷிர்டியை அடைந்து மசூதிக்கு சென்றவுடனே முதன்முதலில் டாக்டர்தான் பாபாவுக்கு நமஸ்காரம் செய்தார்! நண்பரோ பெருவியப்படைந்தார்.
மாம்லத்தார் டாக்டரை கேட்டார், "உம்முடைய திடமான தீர்மானத்தை எப்படி மறந்தீர்? ஒரு முஸ்லீமின் பாதங்களில் எவ்வாறு பணிந்தீர்? அதுவும் என் முன்னிலையிலேயே?"
அப்பொழுது டாக்டர் தம்முடைய அற்புதமான அனுபவத்தை விவரித்தார். "நான் கண்டது நீலமேக சியாமள ரூபனான ஸ்ரீ ராமனின் உருவத்தையே! அக்கணமே நான், நிர்மலமானவரும் சுந்தரமானவரும் கோமள ரூபமுடையவருமுமான ஸ்ரீ ராமரை வணங்கினேன்.-
"பாருங்கள், ஸ்ரீ ராமர் இந்த ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவர்தான் எல்லாரிடமும் பேசிக் கொண்டிருக்கிறார்" டாக்டர் இந்த வார்த்தைகளை சொல்லிகொண்டிருந்தபோதே, ஒரு கணத்தில், ஸ்ரீ ராமருக்கு பதிலாக சாயியின் உருவத்தை பார்க்க ஆரம்பித்தார்.
இதைப் பார்த்த டாக்டர் வியப்பிலாழ்ந்து போனார்! "இதை எப்படி நான் கனவென்று சொல்ல முடியும்? இவர் எப்படி ஒரு முஸ்லீமாக இருக்க முடியும்? இல்லவே இல்லை! இவர் மகா யோகீஸ்வரனான அவதார புருஷர்."
சோகமேளா என்ற மகா ஞானி ஜாதியில் மகார (ஆதி திராவிடர்). ரோஹிதாஸ் என்ற ஞானி செருப்பு தைக்கும் தொழிலாளி. சஜன் கசாய் என்ற ஞானி பிழைப்புக்காகக் கசாப்புக்கடை நடத்தினார். ஆனால், யார் இந்த ஞானிகளின் ஜாதியைப் பற்றி சிந்திக்கின்றனர்?
உலக ஷேமதிற்காகவும் பக்தர்களை ஜனன மரணச் சுழலிருந்து விடுவிப்பதர்காக்கவுமே உருவமும் குணங்களுமற்ற தங்களுடைய நிலையை விடுத்து, ஞானிகள் இவ்வுலகிற்கு வருகிறார்கள்.
இந்த சாயி பிரத்யக்ஷமான கற்பக விருக்ஷமாகும்; நாம் விரும்பியதை தரும் தேவ லோக மரம்! இந்தக் கணத்தில் அவர் சாயியாக இருக்கிறார்; அடுத்த கணமே அவர் ஸ்ரீ ராமராக மாறிவிடுகிறார்! என்னுடைய அஹந்தையாகிய பிரமையை ஒழித்து என்னை தண்ட நமஸ்காரம் செய்ய வைத்து விட்டார்.
அடுத்த நாளே அவர், பாபா தமக்கு அருள் புரியவில்லையெனில் மசூதிக்குள் நுழைவதில்லை என்ற விரதம் எடுத்துக் கொண்டார்; ஷீரடியில் உண்ணா விரதம் மேற்கொண்டார்.
No comments:
Post a Comment