valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 27 March 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

அவர் விஜயம் செய்த நோக்கம் வேறு; விதி நிர்ணயித்த விளைவு வேறு! இதன் விளைவாக, ஷிர்டி விஜயத்தால் அவருக்குத் தம் குருவினுடைய தரிசனமே கிடைத்தது! 

செவிமடுப்பவர்களே! குருவின் மகாத்மியத்தைப் பிரகாசப் படுத்தும்  சுவாரசியமான இந்தக் காதையை அவசியம் கேளுங்கள். குருபக்தர்களுக்கு  தம்முடைய பிரேமையை சாயி அளிப்பதை நிதர்சனமாக தெரிந்து கொள்ளலாம். 

ஒரு சமயம் நாசிக் என்னும் புண்ணிய ஷேத்திரதிலிருந்து , சடங்கு செல்வரும் ஆசார சிலரும் அக்கினி ஹோதிரியுமான முலே சாஸ்திரி என்பவர் பூர்வபுண்ணிய பலத்தால் ஷீரடிக்கு வந்தார். 

பூர்வ புண்ணியம் இல்லாது எவரும் ஷீரடியில் தங்க முடியாது. தங்குவதற்கு எவ்வளவு நிச்சயம் செய்துகொண்டு  வந்தாலும் சரி, எல்லா சாமர்த்தியங்களும் பாபாவின்முன் செல்லுபடியாகாது போயின. 


ஒருவர் தாரளமாக நினைக்கலாம், 'நான் ஷீரடிக்கு போய் என் விருப்பம் போல் தங்கப் போகிறேன்' என்று. ஆனால், அது அவருடைய கைகளில் இல்லை; ஏனெனில் அவர் முழுக்கவும் வேறொருவருடைய (பாபா) சக்திக்கே உட்பட்டிருக்கிறார். 

நிச்சயமாக நான் வெற்றிபெறுவேன் என்று திடமான தீர்மானத்துடன் வந்தவர்கள் அனைவரும் முயற்சியை கைவிட்டு விட்டுத் தோற்றுப் போனார்கள். சாயி சுதந்திரமான தேவர். மற்றவர்களுடைய அஹந்தை அவர்முன் செல்லுபடியாகாது. 

நமக்கு விதிக்கப்ப பட்டிருக்கும்  நாள் வரும் வரை, பாபா நம்மைப் பற்றி நினைக்க மாட்டார்; அவருடைய மகிமையும் நம் காதுகளில் விழாது. அப்படியிருக்க, தரிசனம் செய்யவேண்டுமென்ற அருள்வெளிப்பாட்டைப் பற்றி என்ன பேச முடியும்?

சமர்த்த சாயியை தரிசனம் செய்யப் போக வேண்டுமென்று எத்தனையோ மக்கள் பிரத்யேகமான ஆவல் வைத்திருந்தனர். சாயி தேகவியோகம் அடையும் வரை அந்த நல்வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கவில்லை.!

மற்றும் சிலர் ஷீரடிக்கு போவதைக் காலங்காலமாகத் தள்ளிப் போட்டுக் கொண்டே போயினர். போகலாம், போகலாம் என்று நூலை நீட்டிக் கொண்டே போகும் குணமே அவர்களைப் போகமுடியாமல் செய்து விட்டது. சாயியும் மகா சமாதி அடைந்து விட்டார். 

நாளைக்கு போகலாம், நாளைக்குப் போகலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போனவர்கள் சாயியைப் பேட்டி காணும் நல்வாய்ப்பை இழந்தனர்; இவ்விதமாக பச்சாதபமே மிஞ்சியது. கடைசியில், தரிசனம் செய்யும் பாக்கியத்தை கோட்டை விட்டனர். 

இம்மக்களுடைய நிறைவேறாத ஆவல், மரியாதையுடனும் விசுவாசத்துடனும் இக்காதைகளைக் கேட்டால், பால் குடிக்க விரும்பியவர்கள் மோராவது குடித்த அளவுக்கு நிறைவேறும். 


No comments:

Post a Comment