ஷிர்டி சாயி சத்சரிதம்
ஜோகாயி, ஜாகாயி, மாரியாயி, சனி, சங்கர், அம்பாபாயி, மாருதி, கண்டோபா, மஹால்சாபதி - இந்தத் தெய்வங்களெல்லாம் ஷீரடியில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்தில் இருந்தன.
ஆனால், ஆபத்துக் காலத்தில் கிராம மக்களுக்கு இந்த தேவதைகள் எந்த உதவியும் செய்யவில்லை. அவர்களுடைய நடமாடும் தெய்வமான சாயியே ஆபத்து நேரத்தில் அவர்களை மீட்பதற்காக ஓடி வந்தார்.
அவருக்கு கோழியோ ஆடோ பலியிடத் தேவை இல்லை. பணமும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. நேர்மையான அன்புக்காகவும் விசுவாசத்திற்காக்கவுமே அவர் பசி கொண்டார். அதன்பிறகு, அவர்களுடைய சங்கடங்கள் அனைத்தும் தொலைந்துபோயின.
மக்கள் எவ்வளவு அதிர்ந்து போயிருந்தார்கள் என்பதை அறிந்தபோது மஹராஜினுடைய இதயம் கருணையால் உருகியது. தம்முடைய ஆசனத்தை விட்டு எழுந்து, மசூதியின் வாசல் விளிம்பிற்கு வந்து நின்று கொண்டார்.
வானம் இடித்தது; மின்னல்கள் பளபளத்தன. இதன் நடுவே சாயி மகாராஜ் பலம் கொண்ட மட்டும் தம்முடைய குரலை உச்சஸ்வரதிற்கு உயர்த்தி கர்ஜித்தார்.
சாதுக்களும் ஞானிகளுக்கும் தங்களுடைய உயிரைக் காட்டிலும் பக்தர்ளுடைய உயிரே பெரிது. அவர்களுடைய விருப்பப் படியேதான் தேவர்களும் நடந்து கொள்கின்றனர். அவர்களுக்காக தேவர்களும் பூமிக்கு இறங்கி வருகின்றனர்.
பக்தர்கள் உதவி நாடி வேண்டும்போது, தேவர்களும் பக்தர்களுடைய ஈடுபாட்டை ஞாபகப் படுத்திக்கொண்டு அவர்களுக்காகப் பரிந்து ஓடிவந்து காப்பாற்ற வேண்டும்.
கர்ஜனைக்கு மேல் கர்ஜனை பயங்கரமாக வானைப் பிளந்தது. இச்சத்தம் அங்கிருந்தவரை எல்லாம் செவிடாக்கியது. மசூதியே நடுங்கி ஆடுவதைப் போலத் தோன்றியது.
உச்சஸ்வரத்தில் பாபாவினுடைய குரல் மழைப் பள்ளத்தாக்கின் எதிரொலியைப் போல் மசூதிகளின் மூலமாகவும் கோயில்களின் முழங்கியது. உடனே மேகங்கள் இடிப்பதை நிறுத்தின. மழையும் அடங்கியது.
பாபாவினுடைய கர்ஜனை சபா மண்டபத்தையே உலுக்கியது. பக்தர்கள் திகைத்துபோய், எங்கு இருந்தனரோ அங்கேயே அசைவற்று நின்றனர்.
பாபாவினுடைய செயல் முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை அல்லவோ! மழை குறைந்தது; சூறாவளிக் காற்று நின்றது; மேகமூட்டம் பார்வையை மறைத்த நீராவிப் படலமும் கலைந்தன.
படிப் படியாக மழை குறைந்தது. ஊதல் காற்று அடங்கியது; அந்த நேரத்தில் வானத்தின் கருமை மறைந்து, நக்ஷத்திர கூட்டங்கள் தெரிய ஆரம்பித்தன.
சிறிது நேரத்தில் மழை முழுவதுமாக நின்றுவிட்டது. காற்று மாதமாகியது. வானத்தில் நிலா தோன்றியது. சகலரும் ஆனந்தமடைந்தனர்.
இந்திரனுக்கு கருணை பிறந்தது போலும். மேலும் , ஒரு ஞானியினுடைய ஆணைக்கு மதிப்புக் கொடுக்க வேண்டுமென்றோ? ஆகவே, மேகங்கள் பலதிசைகளில் சிதைந்து டின. புயலுக்குப் பின் அமைதி நிலவியது.
No comments:
Post a Comment