valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 9 January 2014

ஷிர்டி சாயி சத் சரிதம் 

இவ்விதமாக, சிலர் சாமரம் வீசியும் சிலர் விசிறியால் இதமாக விசிறியும் வேறு சிலர் மங்கள வாத்தியங்களை முழங்கியும் பாபாவைத் தொழுதார்கள். 

சிலர் அவருடைய கைகளையும் பாதங்களையும் அலம்பினர். சிலர் அத்தரும் சந்தனமும் பூசினர். சிலர் விசேஷமான நைவேத்தியம் படைத்து, பதின்மூன்று பொருள்கள் அடங்கிய தாம்பூலத்தை கொடுத்தனர். 

சிலர், அரைத்த சந்தனத்தை அவருடைய நெற்றியில் இரண்டு விரல்களால் சிவலிங்கத்தின் மேல் இருப்பதுபோல் கோடுகளாக இட்டனர். சிலர், அரைத்த சந்தனத்துடன் கஸ்தூரி கலந்து நெற்றியில் இட்டனர். 

ஒருமுறை தாத்யா சாஹேப் நூல்கரின் நண்பர் டாக்டர் பண்டித் பாபாவை தரிசனம் செய்வதற்காக ஷீரடிக்கு வந்தார். 

ஷீரடியில்வந்து இறங்கியவுடனே அவர் மசூதிக்கு சென்று பாபாவுக்குப் பலமுறை நமஸ்காரம் செய்துவிட்டு, சிறிது ஓய்வெடுப்பதற்காக அங்கு அமர்ந்தார். 

பாபா அவரிடம், "போம், தாதா பட்டிடம் போம், இந்த வழியாப் போம்" என்று சொல்லி, விரலால் வழிகாட்டி அவரை மூட்டை கட்டி அனுப்பிவிட்டார். 

பண்டித், தாதா பட்டின் வீட்டிற்குச் சென்றார்; மரியாதையான நல்வரவளிக்கப் பட்டார். தாதா அப்பொழுதுதான் பாபாவுக்கு பூஜை செய்வதற்காக எல்லாப் பொருள்களையும் தயார் செய்துகொண்டு கிளம்பிக் கொண்டிருந்தார். பண்டிதைத் தம்முடன் வர விருப்பப் படுகிறாரா என்றும் கேட்டார். 

பண்டித் இதற்குச் சம்மதித்து தாதாவுடன், சென்றார். தாதா பூஜையை  செய்தார். அந்நாள்வரை பாபாவினுடைய நெற்றியில் வட்டமாக சந்தனம் இடுவதற்கு எவருக்குமே  தைரியம் இருந்தததில்லை. 

பக்தர் எவராக இருப்பினும், எக்காரணத்திற்காக வந்திருந்தபோதிலும், பாபா அவரை நெற்றியில் சந்தனம் இடுவதற்கு அனுமதிக்கவில்லை. மகால்சாபதி ஒருவர் மட்டுமே கழுத்தில் சந்தனம்பூச அனுமதிக்கப் பட்டார். மற்றவர்கள், பாதங்களுக்கே சந்தனம் இட்டனர். 

டாக்டர் பண்டித்தோ குழந்தையுள்ளம் படைத்தவர். கபடமில்லாதவர். பக்திமான். அவர் தாதா வைத்திருந்த சந்தனப் பேலாவை வலிய எடுத்து, சாயியியுனைடைய தலையை ஒரு கையால் பிடித்துக் கொண்டு மற்றொரு கையால் நெற்றியில் அழகான திரிபுண்டரம் (மூன்று நீளமான பட்டைகள்) இட்டுவிட்டார். 

அவருடைய சாகசச் செயலைக் கண்டு தாதா கலவரமடைந்தார். "ஆ! என்ன சாகசம் இது! பாபா இதைச் செய்ததால் சீறமாட்டார்?" (என்று அவர் நினைத்தார்) 

No comments:

Post a Comment