valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 28 November 2013

ஷிர்டி சாயி சத் சரிதம்

இறைவனை வணங்காதவர்களையும் நாமத்தைச் சொல்லாதவர்களையும் நம்பிக்கையும், பக்தியும் இல்லாதவர்களையும் பஜனை பாடாதவர்களையும் இறைநாட்ட முடையவர்களாக செய்வதற்கே ஞானிகள் இப்பூவலகில் அவதாரம் செய்கிறார்கள். 

கங்கை, பாகீரதி, கோதாவரி, கிருஷ்ணா, வடபெண்ணை, காவிரி, நர்மதை ஆகிய புண்ணிய நதிகள் சாதுக்களுடைய பாதங்களைத் தொடவேண்டுமென்று ஆவல் கொண்டு, அவர்கள் ஸ்நானம் செய்வதற்கு வருவார்களா என்று எதிர்பார்த்து கொண்டிருக்கின்றன. 

இப்புண்ணிய நதிகள் உலகத்து மக்களுடைய பாவங்களைஎல்லாம் அடித்துச் சென்றாலும், தங்களுடைய பாவங்களை நிவிர்த்தி செய்து கொள்ள சாதுக்களின் பாதங்களையே நாடுகின்றன. 

பல ஜன்மங்களில் எய்த பாக்கியங்களாலேயே நாம் சாயியின் புனிதமான பொன்னடிகளை கண்டுபிடித்திருக்கிறோம். ஜனன மரண சுழல் நிறுத்தப் பட்டு விட்டது. பிறவிபயம் அறவே ஒழிக்கப் பட்டுவிட்டது. 

நன்மக்களான வாசகர்களே! சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு ஏற்கெனவே கேட்ட கதைகளை அசை போடுவோம். மேற்கொண்டு பிரவசனம் பிறகு தொடரும். 

ஹேமாட் சாயியிடம் சரணடைகிறேன். நான் அவருடைய பாத ரக்ஷைகளே. மேலும் மேலும் அவருடைய காதைகளைச் சொல்லி கொண்டே போவேன்; அதுவே, எனக்கு மேலும் மேலும் சுகத்தை அளிக்கும். 

ஆஹா! என்ன கவர்ச்சியான உருவம் சாயி மஹாராஜுக்கு! மசூதியின் விளிம்பில் நின்றுகொண்டு, பக்தர்களுடைய நல்வாழ்வையே மனதிற்கொண்டு அவர்களுக்கு உதீ பிரசாதம் விநியோகிப்பார். 

எவர் 'இந்த உலகமே ஒரு மாயை' என்றரிந்தவரோ, எவர் பிரம்மானந்தத்திலிடைவிடாது  லயிப்பவரோ, எவர் முழுமையாக விகசித்த (மலர்ந்த) மலர் போன்ற மனம் படைத்தவரோ, அவர் முன்னே நான் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறேன். 

எவர் ஞானமென்னும் மையைக் கண்களில் தடவி பிரம்ம ஞானத்தை வழங்குகிறாரோ, அந்த மகிமை வாய்ந்த சாயியை நான் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறேன். 

அடுத்த அத்தியாயம் இதைவிட மேன்மையாக இருக்கும். செவிகளின் வழியே உங்களுடைய இதயத்தில் புகுந்து எல்லா மலங்களையும் போக்கி, இதயத்தைப் புனிதமாகச் செய்துவிடும். 

எல்லாருக்கும் சேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும்  சான்றோர்களாலும் உணர்வூட்டப் பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப் பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், ' சமர்த்த ஸ்ரீ சாயியின் மகிமை' என்னும் பத்தாவது அத்தியாயம் முற்றும். 



                       ஸ்ரீ சத்குரு சாயி நாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

                                        சுபம் உண்டாகட்டும். 


No comments:

Post a Comment