valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 26 September 2013

ஷிர்டி சாயி சத்சரிதம் 

ஒருவருடைய உலகியல் முன்னேற்றத்திற்கும் ஆன்மீக முன்னேற்றத்திற்கும் இந்த உபதேசம் நன்மையளிக்க கூடியது. உயர்ந்தவர், தாழ்ந்தவர், மகளிர் , பிற்படுத்தப்பட்டோர், அனைவருமே இந்த நேர்வழிப் பாதையில் நடக்கலாம். 

கனவில் கண்ட ராஜ்ய  வைபவங்கள் விழித்துக் கொண்டவுடனே மறைந்துவிடுவது போலவே, இவ்வுலக வாழ்க்கை ஒரு மாயத்தோற்றம் என்று பாபா கூறுவார். 

எவர் 'இவ்வுலக வாழ்வின் சுகமும் துக்கமும் மாயை' என்னும் பிரபஞ்ச தத்துவத்தை ஏற்றுக் கொண்டு வாழ்கிறாரோ, அவர் சுகதுக்க பிரமையைத் தம்முடைய வாழ்நெறியால் வென்று முக்தியடைகிறார். 

சிஷ்யர்களின் உலக பந்தங்களை கண்டு அவருடைய இதயம் கருணையால் துடித்தது. அவர்களை எப்படி தேஹாபிமானத்தை விட்டு விட வைப்பது என்பது பற்றியே பாபா இரவு பகலாக சிந்தித்தார். 

'யானும் இறைவனும் ondre' என்னும் பாவமும் அகண்டமான ஆனந்த நிலையும் உருவெடுத்து வந்து, எந்நேரமும் நிர்விகல்ப சமாதியில் திளைத்தது. அவரிடம் பற்றற்ற நிலையும்  துறவும் அடைக்கலம் புகுந்தன. 

வீணையையும் தாளத்தையும் கையிலேந்தி, பரிதாபமான தோற்றத்துடன் வீடு வீடாக அலைந்து கை நீட்டுவது என்பது பாபாவுக்கு என்றுமே தெரியாது. 

மக்களைப் பிடித்து, அவர்களுடைய காதில் பலவந்தமாக ஏதோ ஒரு மந்திரத்தை ஓதி, அவர்களை சிஷ்யர்களாக மாற்றி, பணத்திற்காக அவர்களை ஏமாற்றும் குருமார்கள் எத்தனை  எத்தனையோ !

தாங்களே அதர்ம நெறியில் வாழ்ந்துகொண்டு, சிஷ்யர்களுக்கு தருமா நெறியை போதனை செய்வர். எப்படி இந்த குருமார்கள் தங்கள் சிஷ்யர்களை சம்சாரக் கடலைத் தாண்ட வைத்து, ஜனன மரண சுழலிலிருந்து  விடுதலை பெற்றுத் தர முடியும்?

தம்முடைய தருமா நெறிப் பெருமையை விளம்பரம் செய்து கொள்ள வேண்டும், உலகத்தை அதை ஏற்றுக்கொள்ளச் செய்வதில் வெற்றி பெற வேண்டும், என்ற எண்ணமே இல்லாத தனித்தன்மை கொண்ட மூர்த்தியாக சாயி விளங்கினார். 

தேஹாபிமானதிற்கு இடமே அளிக்காமல், அதே நேரத்தில் பக்தர்களின் மீது அத்தியந்தமான பிரீத்தியை செலுத்தும் மாண்புடையவர் இந்த சாயி. 

குருமார்களில் இரண்டு வகையுண்டு. 'நியத' (இறைவனால் நியமிக்கப்பட்டவர்), 'அநி யத ' (இறைவனால் அவ்வாறு நியமிக்கப்படாதவர்) . இவ்விருவகை குருமார்களின் செயல்பாட்டு  முறைகளைக் கதை கேட்பவர்களுக்கு விளக்கம் செய்கிறேன். 

நற்பண்புகளின் வளர்ச்சிக்கு ஊக்கமளித்து மனத்தைத் தூய்மைப் படுத்தி, சிஷ்யனை மோக்ஷமார்கத்தில்  வழிநடத்துவதற்கு உண்டான வரபிரசாதத்தை மாத்திரம் உடையவர் 'அனியத ' குரு. 

ஆனால், 'நியத' குருவினுடைய சம்பந்தமோ, துவைத பாவத்தை அழித்து, 'தத்வமசி' (நீயே அதுவுமாக இருக்கிறாய்) என்னும் சாமவேத மகாவாக்கியத்தின் பொருளை நேரிடையாக உள்ளுக்குள்ளே மலரச் செய்கிறது. 

இம்மாதிரியான 'நியத' குருமார்கள் தோன்றா நிலையில் பிரபஞ்சமெங்கும் வியாபிதிருக்கின்றனர். பக்தர்களுடைய நன்மைக்காக உருவமெடுத்துக் கொண்டு அவதரிக்கின்றனர். தங்களுடைய வேலை முடிந்துவிட்டது என்று தெரியும் பொது உடலை உகுத்துவிடுகின்றனர். 





No comments:

Post a Comment