ஷிர்டி சாயி சத் சரிதம்
"நீ எனக்கு என்ன கொண்டுவந்தாய்?" என்று கேட்டு அவனுக்கு ஞாபகம் ஊட்டுவதற்கு பாபா முயன்றார். "ஒன்றுமில்லை" என்று அவன் பதில் சொன்னவுடன்,
"வேறு யாராவது உன்மூலம் எனக்கு ஏதாவது கொடுததுனுப்பினார்களா?" என்று கேட்டு பாபா அவனுக்கு மறைமுகமாக ஞாபகமூட்டினார். "இல்லை" என்று பையன் சொன்னவுடன் சமர்த்த சாயி அவனை நேரிடையாகவே கேட்டார்.
"மகனே! நீ கிளம்பும்போது அன்னை எனக்காக அன்புடன் இனிப்புகள் கொடுத்தனுப்பவில்லை?" இவ்வாறு கேட்ட பிறகுதான் அவனுக்கு ஞாபகம் வந்தது!
பையன் வெட்கத்தால் குன்றிப் போனான். அதை எப்படி அவனால் மறக்க முடிந்தது! வெட்கத்தால் தலை குனிந்து பாபாவின் பாதங்களை தொட்டு மன்னிப்புகேட்டு வணங்கிவிட்டு ஓடினான்.
தான் தங்கி இருந்த இடத்திற்கு ஓடிச் சென்று பால்கோவாவை எடுத்துக் கொண்டுவந்து பாபாவுக்கு சமர்ப்பணம் செய்தான். கைக்கு வந்து சேந்தவுடனே பாபா அதை வாயில் போட்டுக் கொண்டு அன்னையின் (ஸ்ரீமதி கட்) ஆசையை நிறைவேற்றினார்.
இவ்வாறு இம்மகா அனுபவரான சாயி, பக்தரின் விசுவாசத்தின் ஆழத்திற் கேற்றவாறு அவருக்கு அனுபவங்களை கொடுத்து பக்தரின் அன்பையும் பக்தியையும் கௌரவிக்கிறார்.
இந்தக் கதைகளிலிருந்து வெளிவரும் மற்றொரு முக்கியமான பாடம், எல்லா உயிர்களிலும் நாம் இறைவனை காண வேண்டுறம் என்பதே. இதுதான் சகல சாஸ்திரங்களிலும் சொல்லப் பட்டிருக்கிறது. இதுவே இங்கு நடைமுறைக்குக் கொண்டு வந்து காட்டப் பட்ட முடிவுமாகும்.
அடுத்த அத்தியாத்தை கேட்பதில், பாபா எவ்விதமாக வாழ்ந்தார். எங்கு, எந்த இடத்தில அவர் தூங்கினார் என்பன பற்றி தெரிந்து கொள்வீர்கள். கவனமாக கேளுங்கள்.
ஹேமாத் பந்த் சாயி பாதங்களில் சரணடைகிறேன். கதை கேட்பவர்கள் பயபக்தியுடன் கதைகளை ஞாபகப் படுத்திக் கொள்ள வேண்டும்; மேலும் சிந்திக்க வேண்டும்; அவ்விதம் செய்வது அவர்களுக்கு ஷேமத்தை அளிக்கும்.
எல்லாருக்கும் சேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப் பட்டு, சாயி பக்தன் ஹேமாத் பந்தால் இயற்றப் பட்ட, "ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரிதம்" என்னும் காவியத்தில் ஒன்பதாவது அத்தியாயம் முற்றும்.
ஸ்ரீ சத்குரு சாயி நாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
"நீ எனக்கு என்ன கொண்டுவந்தாய்?" என்று கேட்டு அவனுக்கு ஞாபகம் ஊட்டுவதற்கு பாபா முயன்றார். "ஒன்றுமில்லை" என்று அவன் பதில் சொன்னவுடன்,
"வேறு யாராவது உன்மூலம் எனக்கு ஏதாவது கொடுததுனுப்பினார்களா?" என்று கேட்டு பாபா அவனுக்கு மறைமுகமாக ஞாபகமூட்டினார். "இல்லை" என்று பையன் சொன்னவுடன் சமர்த்த சாயி அவனை நேரிடையாகவே கேட்டார்.
"மகனே! நீ கிளம்பும்போது அன்னை எனக்காக அன்புடன் இனிப்புகள் கொடுத்தனுப்பவில்லை?" இவ்வாறு கேட்ட பிறகுதான் அவனுக்கு ஞாபகம் வந்தது!
பையன் வெட்கத்தால் குன்றிப் போனான். அதை எப்படி அவனால் மறக்க முடிந்தது! வெட்கத்தால் தலை குனிந்து பாபாவின் பாதங்களை தொட்டு மன்னிப்புகேட்டு வணங்கிவிட்டு ஓடினான்.
தான் தங்கி இருந்த இடத்திற்கு ஓடிச் சென்று பால்கோவாவை எடுத்துக் கொண்டுவந்து பாபாவுக்கு சமர்ப்பணம் செய்தான். கைக்கு வந்து சேந்தவுடனே பாபா அதை வாயில் போட்டுக் கொண்டு அன்னையின் (ஸ்ரீமதி கட்) ஆசையை நிறைவேற்றினார்.
இவ்வாறு இம்மகா அனுபவரான சாயி, பக்தரின் விசுவாசத்தின் ஆழத்திற் கேற்றவாறு அவருக்கு அனுபவங்களை கொடுத்து பக்தரின் அன்பையும் பக்தியையும் கௌரவிக்கிறார்.
இந்தக் கதைகளிலிருந்து வெளிவரும் மற்றொரு முக்கியமான பாடம், எல்லா உயிர்களிலும் நாம் இறைவனை காண வேண்டுறம் என்பதே. இதுதான் சகல சாஸ்திரங்களிலும் சொல்லப் பட்டிருக்கிறது. இதுவே இங்கு நடைமுறைக்குக் கொண்டு வந்து காட்டப் பட்ட முடிவுமாகும்.
அடுத்த அத்தியாத்தை கேட்பதில், பாபா எவ்விதமாக வாழ்ந்தார். எங்கு, எந்த இடத்தில அவர் தூங்கினார் என்பன பற்றி தெரிந்து கொள்வீர்கள். கவனமாக கேளுங்கள்.
ஹேமாத் பந்த் சாயி பாதங்களில் சரணடைகிறேன். கதை கேட்பவர்கள் பயபக்தியுடன் கதைகளை ஞாபகப் படுத்திக் கொள்ள வேண்டும்; மேலும் சிந்திக்க வேண்டும்; அவ்விதம் செய்வது அவர்களுக்கு ஷேமத்தை அளிக்கும்.
எல்லாருக்கும் சேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப் பட்டு, சாயி பக்தன் ஹேமாத் பந்தால் இயற்றப் பட்ட, "ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரிதம்" என்னும் காவியத்தில் ஒன்பதாவது அத்தியாயம் முற்றும்.
ஸ்ரீ சத்குரு சாயி நாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
No comments:
Post a Comment