ஷிர்டி சாயி சத் சரிதம்
ஒப்புயர்வற்ற பிரேமையுடையவராக இருந்ததால்,
பாபா சாஹேப் தமது இல்லத்தில் தினமும் காலை, மதியம், மாலை வழிபாட்டுக்காக
பாபாவினுடைய படத்தை ஒரு சந்தனமண்டபத்தில் ஸ்தாபனம் செய்திருந்தார்.
அவருக்குப் புத்திரனும் பக்திமான்; சாயிக்கு நிவேதனம் செய்யாமல் சாப்பாட்டை தொட மாட்டான். ஆகவே, தர்கட் மகாபுண்ணியசாலி.
ஒவ்வொரு
நாளும் காலை வேளையில் ஸ்நானம் செய்துவிட்டு, உடலாலும் பேச்சாலும்
உள்ளத்தாலும் ஒன்றி, சாயிக்குப் பூஜை செய்துவிட்டுக் கடைசியாக நிவேதனம்
செய்வான்.
இந்த நித்திய பூஜையைத் தவறாதும் சலிக்காமலும் செய்து
கொண்டு வந்தபோது, அவனுடைய முயற்சிகள் அனைத்தும் உன்னதமான பலன்களை அளித்தன;
உயர்ந்த அனுபவமும் பெற்றான்.
சிறந்த சாயி பக்தையான அவன் அன்னை,
ஷீரடிக்கு போக விரும்பினார். பயணத்தின்போது அன்னையுடன் மகனும்
செல்லவேண்டும் என்று தந்தை நினைத்தார்.
அன்னை ஷிர்டிக்குச் சென்று சாயி தரிசனம் செய்து, அங்கே சில நாள்கள் தங்கி பாபாவுக்குப் பாதசேவை செய்ய வேண்டுமென்று விரும்பினார்.
தந்தையினுடைய
விருப்பம் அவ்வாறு இருந்தபோதிலும், மகனுக்கு ஷிர்டி போவதில் இஷ்டமில்லை.
அவனுடைய கவலையெல்லாம், தான் வீட்டில் இல்லாதபோது, யார் தினமும் தினமும்
தவறாமல் பாபாவுக்குப் பூஜை செய்வார் என்பதே.
தகப்பனார் ஒரு பிரார்த்தனா (சிலைகள், சடங்குகள் ஏதும் இல்லாமல் பிரார்த்தனை மட்டும் செய்யும் சங்கத்தை சேர்ந்தவர்) சமாஜி. அவரைப் பூஜை செய்ய வைத்துத் தொந்தரவு செய்வது நியாயமா? அதுவே மகனுடைய சந்தேகம்.
எனினும்,
தன மனத்துள்ளே மறைந்திருந்த ஆசையை அறிந்திருந்த மகன், ஷிர்டி போவதற்குத்
தயாராக இருந்தான். அவன் தகப்பனாரை அன்புடன் என்ன வேண்டிக் கொண்டான்
என்பதைக் கேளுங்கள்.
சாயிக்கு நிவேதனம் செய்யாமல் யாருமே இந்த
வீட்டில் சாப்பிட மாட்டார்கள் என்று உறுதிமொழி அளிக்கப் படாவிட்டால், நான்
நிச்சயமாக ஷீரடிக்கு போக முடியாது.
தந்தைக்கு ஏற்கனவே மகனுடைய
நித்திய விரதம் தெரிந்திருந்தது. "நீ போய் வா. நான் தினமும் நிவேதனம்
செய்கிறேன்; நீ இதை முழுமையாக நம்பலாம்" என்று அவர் கூறினார்.-
"சாயிக்கு
நைவேத்தியம் படைக்காமல் நாங்கள் யாருமே உணவருந்த மாட்டோம். என்னுடைய
வார்த்தைகளை நம்பு, சந்தேகம் வேண்டா ; குழப்பம் ஏதுமின்றி நீ சென்று வா".
இவ்வாறு உறுதிமொழி பெற்றுக் கொண்டு பையன் ஷீரடிக்கு சென்றான். அடுத்த நாள் காலையில் தர்கட் அவர்களே பூஜை செய்தார்.
அன்று பூஜையை ஆரம்பிக்கும் முன்பே, பாபா சாஹேப் தர்கட் சாயியின் படத்திற்கு நமஸ்காரம் செய்துவிட்டுப் பிரார்த்தனை செய்தார், -
No comments:
Post a Comment