ஷிர்டி சாயி சத் சரிதம்
அதுபோலவே, குளிர்ந்த நீரிலோ வெந்நீரிலோ குளிக்கும்போதும் வீட்டைப் பெருக்கிச் சாணமிட்டு மெழுகும்பொதும் உயிரினங்கள் மடிந்து போகின்றன. 'சுத்தம் செய்தல்' கிருஹஸ்தர்கள் செய்யும் ஐந்தாவது பாவம் ஆகிறது.
பஞ்ச பாவங்களிலிருந்து விடுபடுவதற்காக, கிருஹஸ்தர்கள் பஞ்ச மஹா யக்ஞங்களைச் செய்ய வேண்டும். பஞ்சசூனா பாவங்களிலிருந்து விடுபட்டால் கிருஹஸ்தர்கள் மனத்தூய்மையையும் அடைவர்.
தூய மனத்தின் பலத்தால்தான் புனிதமான ஞானம் கிடைக்கும். புனித ஞானம் அடைந்தவர்களில், சில பாக்கியசாலிகளுக்கு நிலையான முக்தியும் கிடைக்கும்.
பாபா பிச்சை எடுத்துப் பிழைத்த விவரங்களைச் சொன்னதால் இந்த அத்தியாயம் பெரியதாகிவிட்டது. ஆயினும், இப்பொழுது இது சம்பந்தமாக நடந்த உண்மை நிகழ்ச்சி ஒன்றை கேளுங்கள் . அதன் பிறகு, இந்த அத்தியாயத்தை முடித்து விடுவோம்.
பாபாவுக்கு நீங்கள் எதை அனுப்பினாலும், யார் மூலம் அனுப்பினாலும், அது மனம் கனிந்த அன்போடு அனுப்பப்பட்டால், அச்சிறிய நைவேத்தியத்தை கொண்டு சென்றவர் மரத்ன்ஹு விட்டாலும், பாபா தவறாது அதைக் கேட்டு வாங்கிக் கொள்வார்.
அது சோழ ரொட்டியோ, பாஜியோ, பால்கோவாவோ எவ்வளவு எளிய தின்பண்டமாக இருந்தாலும் சரி, பக்தி பாவத்துடன் அளிக்கப் பட்டதை பார்த்தபோது, பாபாவினுடைய இதயத்தில் அன்பு பொங்கி வழிந்தது.
இது அம்மாதிரியாக அன்பு செய்த பக்தர் ஒருவரின் கதை. இதைக் கேட்டு நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். எந்த பக்தராவது தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை மறந்துவிட்டால், சாயியே அவரைக் கடமையின் பாதையில் வழிநடத்தினார்.
பாபாவினுடைய போதனை முறை இனிமையானது. மென்மையானது. அதைக் கேட்டு, கடமையை மறந்து போன பக்தர் தாமே விழிப்படைந்து விடுவார். அதைத் தாங்களே அனுபவித்தவர்கள் மகா பாக்கியசாலிகள். அவர்களுடைய ஆனந்தத்தை விவரிக்க இயலாது .
விச்ராந்தியின் இருப்பிடமான சாயியை அடைக்கலமாக அடைந்த ராமச்சந்திரன் என்ற பெயர் கொண்ட சாயி பக்தர் ஒருவர் இருந்தார். தந்தையின் பெயர் ஆத்மாராம்; குடும்பப் பெயர் தர்கட் . (ஆகவே அவருடைய முழுப் பெயர் ராமச்சந்திர ஆத்மாராம் தர்கட் )
ஆயினும், அவர் பாபா சாஹேப் தர்கட் என்றே அழைக்கப் பட்டார். அவர் சம்பத்தப் பட்ட காதையைதான் இப்போது சொல்லப் போகிறேன்; வேறு காரணம் ஏதுமில்லை.
சாயி பிரேமையால் இதயம் பொங்க , தர்கத் அவருடைய அனுபவங்களை அவரே விவரிதப் போது கேட்பதற்கு எவ்வளவு சுகமாக இருந்தது.
ஒவ்வொரு நிகழ்ச்சியாக, ஒன்றை விட மற்றொன்று புதிய அனுபவமாக, பக்தி பாவத்துடனும் அங்க அசைவுகளுடனும் படிபடியாக அவர் விவரித்தபோது எவ்வளவு உயர்ந்த பக்தியை அது வெளிப்படுத்தியது!
அதுபோலவே, குளிர்ந்த நீரிலோ வெந்நீரிலோ குளிக்கும்போதும் வீட்டைப் பெருக்கிச் சாணமிட்டு மெழுகும்பொதும் உயிரினங்கள் மடிந்து போகின்றன. 'சுத்தம் செய்தல்' கிருஹஸ்தர்கள் செய்யும் ஐந்தாவது பாவம் ஆகிறது.
பஞ்ச பாவங்களிலிருந்து விடுபடுவதற்காக, கிருஹஸ்தர்கள் பஞ்ச மஹா யக்ஞங்களைச் செய்ய வேண்டும். பஞ்சசூனா பாவங்களிலிருந்து விடுபட்டால் கிருஹஸ்தர்கள் மனத்தூய்மையையும் அடைவர்.
தூய மனத்தின் பலத்தால்தான் புனிதமான ஞானம் கிடைக்கும். புனித ஞானம் அடைந்தவர்களில், சில பாக்கியசாலிகளுக்கு நிலையான முக்தியும் கிடைக்கும்.
பாபா பிச்சை எடுத்துப் பிழைத்த விவரங்களைச் சொன்னதால் இந்த அத்தியாயம் பெரியதாகிவிட்டது. ஆயினும், இப்பொழுது இது சம்பந்தமாக நடந்த உண்மை நிகழ்ச்சி ஒன்றை கேளுங்கள் . அதன் பிறகு, இந்த அத்தியாயத்தை முடித்து விடுவோம்.
பாபாவுக்கு நீங்கள் எதை அனுப்பினாலும், யார் மூலம் அனுப்பினாலும், அது மனம் கனிந்த அன்போடு அனுப்பப்பட்டால், அச்சிறிய நைவேத்தியத்தை கொண்டு சென்றவர் மரத்ன்ஹு விட்டாலும், பாபா தவறாது அதைக் கேட்டு வாங்கிக் கொள்வார்.
அது சோழ ரொட்டியோ, பாஜியோ, பால்கோவாவோ எவ்வளவு எளிய தின்பண்டமாக இருந்தாலும் சரி, பக்தி பாவத்துடன் அளிக்கப் பட்டதை பார்த்தபோது, பாபாவினுடைய இதயத்தில் அன்பு பொங்கி வழிந்தது.
இது அம்மாதிரியாக அன்பு செய்த பக்தர் ஒருவரின் கதை. இதைக் கேட்டு நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். எந்த பக்தராவது தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை மறந்துவிட்டால், சாயியே அவரைக் கடமையின் பாதையில் வழிநடத்தினார்.
பாபாவினுடைய போதனை முறை இனிமையானது. மென்மையானது. அதைக் கேட்டு, கடமையை மறந்து போன பக்தர் தாமே விழிப்படைந்து விடுவார். அதைத் தாங்களே அனுபவித்தவர்கள் மகா பாக்கியசாலிகள். அவர்களுடைய ஆனந்தத்தை விவரிக்க இயலாது .
விச்ராந்தியின் இருப்பிடமான சாயியை அடைக்கலமாக அடைந்த ராமச்சந்திரன் என்ற பெயர் கொண்ட சாயி பக்தர் ஒருவர் இருந்தார். தந்தையின் பெயர் ஆத்மாராம்; குடும்பப் பெயர் தர்கட் . (ஆகவே அவருடைய முழுப் பெயர் ராமச்சந்திர ஆத்மாராம் தர்கட் )
ஆயினும், அவர் பாபா சாஹேப் தர்கட் என்றே அழைக்கப் பட்டார். அவர் சம்பத்தப் பட்ட காதையைதான் இப்போது சொல்லப் போகிறேன்; வேறு காரணம் ஏதுமில்லை.
சாயி பிரேமையால் இதயம் பொங்க , தர்கத் அவருடைய அனுபவங்களை அவரே விவரிதப் போது கேட்பதற்கு எவ்வளவு சுகமாக இருந்தது.
ஒவ்வொரு நிகழ்ச்சியாக, ஒன்றை விட மற்றொன்று புதிய அனுபவமாக, பக்தி பாவத்துடனும் அங்க அசைவுகளுடனும் படிபடியாக அவர் விவரித்தபோது எவ்வளவு உயர்ந்த பக்தியை அது வெளிப்படுத்தியது!
No comments:
Post a Comment