valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 13 June 2013

ஷிர்டி சாயி சத்சரிதம்

அவ்வாறு செய்யத் தவறிவிட்டு உணவு உண்டால், அதற்குப் பிராயச்சித்தமாக மனம், வாக்கு, செயல் மூன்றையும் தூய்மைப் படுத்திக் கொள்ள, சாஸ்திர விதிப்படி சாந்திராயண  விரதம் மேற்கொள்ள வேண்டும்.

சந்நியாசிகளும் பிரம்மச்சாரிகளும் சமையல் செய்யவே கூடாது. சமையல் செய்யும்படி நேர்ந்துவிட்டால், அவர்களும் நிச்சயமாகச் சாந்திராயண  விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.

அவர்களுக்கு உணவளிக்கும் கடமையை சாஸ்திரங்கள் இல்லறத்தாரிடம் ஒப்படைத்திருக்கின்றன. சந்நியாசிகள் வயிறு வளர்ப்பதற்காக எத்தொழிலையும் செய்வதில்லை .

பாபா இல்லறத்தாருக்கும் அல்லர்; வானபிரச்தரும் அல்லர். அவர் பால  பருவத்திலேயே உலகத்தைத் துறந்த பிரம்மச்சாரி. அம்மாதிரியான ஒருவருக்குப் பிச்சை எடுத்துப் பிழைப்பதே மிக்க உகந்தது.

அகில உலகங்களையும் தம்முடைய வீடாகக் கருதிய பாபா , தாமே வாசுதேவனும் விசுவம்பரனும் (உலகத்தை ஆடையாக அணிந்தவன்) என்பதையும், தாமே அழிவில்லாத பிரம்மம் என்பதையும் உறுதியாக அறிந்திருந்தார்.

உலகமே ஒரு குடும்பம் என்று நினைப்பவரே பிச்சை எடுத்துப் பிழைப்பதற்குப் பூரணமான அதிகாரம் பெற்றவர். மற்றப் பிச்சைக்காரர்கள் இதைக் கேவலமான செய்கையாகவும் பரிகாசத்திற்கு உரியதாகவும் செய்துவிடுகின்றனர்.

முதலாவதாக, வம்ச விருத்தி செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையை விட்டுவிட வேண்டும். அடுத்ததாகச் செல்வதின்மீது ஆசையையும் புகழ் மீது ஆசையையும் விட்டுவிட வேண்டும். இம்மூன்று ஆசைகளையும் அறவே விட்டுவிட்டவனே பிச்சை எடுத்துப் பிழைப்பதைப் பற்றி யோசிக்க வேண்டும்.

இல்லையெனில், "ஓடேந்திப்  பிழைப்பது மானமற்ற செயல்" என்னும் துகாராமின்  பாடு, சாரமில்லாததாகவும் அர்த்தமில்லாததாகவும்  ஆகிவிடும்.

இளையோரும் முதியோரும் சிறியவரும் பெரியவரும் சமர்த சாயி எவ்வளவு பெரிய சித்தர்  என்பதை நன்கு அறிந்திருந்தனர். உலகியல் எதிர்பார்ப்புகளிலும் ஆசைகளிலும் கட்டுப்பட்ட நாம்தான், அவருடைய புனிதமான பாதங்களில்மேல் வைக்கும் பக்தியில் உறுதியில்லாமல் இருக்கிறோம்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

1. பௌர்ணமியன்று 15 பிடி அன்னம் சாப்பிடலாம். பிறகு ஒவ்வொரு நாளும் ஒரு பிடியாகக் குறைத்துக் கொண்டு வந்து அமாவாசையன்று பட்டினி கிடக்க வேண்டும். பிறகு ஒவ்வொரு நாளும் ஒரு பிடி அன்னமாக உயர்த்திக் கொண்டே பொய், பௌர்ணமியன்று 15 பிடி சாப்பிடலாம். இம்மாதிரியாக ஒரு சுற்று வருவதே சாந்திராயண  விரதம்.

2. சாஸ்திரங்களில் விதிப்பட்ட, ஹிந்துக்கள் அனுசரிக்க வேண்டிய, வாழ்க்கை நிலைகள் நான்கு.
  1. பிரம்மச்சரியம் - இளம் வயதில் குருகுலத்தில் கல்வி கற்கும் நிலை.
  2. இல்லறம் - திருமணம் செய்துகொண்டு உலக இன்பங்களை நுகரும் நிலை.
  3. வானபிரஸ்தம் - சொத்து சுகங்களைத் துறந்து மனைவியோடு மட்டும் வனத்தில் வாழும் நிலை.
  4. சந்நியாசம் - எல்லாவற்றையும் (மனைவியையும்) துறந்த நிலை.

No comments:

Post a Comment