ஷிர்டி சாயி சத் சரிதம்
சமுத்திரத்தின் உப்புநீர் மேகங்களாக மாற்றம் அடைந்து, சுத்தமான குடிக்கத் தகுந்த நீராக மாறுகிறது. அவ்வாறே குருவின் பொன்னடிகளில் மூழ்கினால் சுகம் கிடைக்கிறது.
குருவைத் தவிர வேறெவருக்கும் இம் மனிதவுடலுக்கு நற்கதியளிப்பது எப்படி என்பது தெரியாது. குரு தமது கரங்களால் தூக்குவதால் தான் ஜடம் போன்ற மனிதர்கள் மேல் எழுப்பப் படுகிறார்கள்.
மந்திரங்கள் புனிதத்தலங்கள், தேவதைகள், பிராமணர்கள், ஜோசியர்கள், வைத்தியர்கள், ஏழாவதாக குரு - இந்த ஏழுக்கும் ஒருவருடைய விசுவாசத்தைப் பொறுத்தே பலன்கள் அமையும்
நம்பிக்கையும் விசுவாசமும் எவ்வளவு ஆழமோ, அதற்கேற்றவாறே சித்திகளின் பரிமாணமும் அமையும்.
ஞானிகள், பந்தங்களால் கட்டுப்பட்ட மனிதனை முமுக்ஷவாக மாற்றுகிறார்கள். முமுக்ஷுவை முக்தனாக ஏற்றமடையச் செய்கிறார்கள். இதைச் செய்வதற்காக அவர்கள் தோன்றா நிலையிலிருந்து தோன்றிய நிலைக்கு மாறுகிறார்கள். இவை அனைத்தும் பரோபகாரம் கருதியே
வியாக்கியானங்கள் மற்றும் புராணங்கள் மூலமாக அடைய முடியாததை, ஞானிகளின் அசைவுகளும் நடத்தையும் மௌன உபதேசங்களாகும்
மன்னிக்கும் குணம், சாந்தி, தனிமை, காருண்யம், பரோரபகாரம், புலனடக்கம், அஹன்காரமின்மை ஆகிய நற்குணங்கள் நிறைந்திருக்கும் மனிதனைக் காண்பது அரிது
புத்தகத்தை படித்து அறிந்து கொள்ள முடியாததை எல்லாம் ஒரு மாமனிதரின் செயல்முறைகளைப் பார்த்து சுலபமாக அறிந்து கொள்ளலாம். கோடிக் கணக்கான வானத்து நட்சத்திரங்கள் எல்லாம் சேர்ந்து அளிக்கமுடியாத ஒளியை, சூரியன் ஒன்றே கொடுத்து விடுகிறது அன்றோ!
உதாரண குணம் ஞானிகளும் அவ்வாறே! அவர்களுடைய பலப் பல சஹசமான செயல்கள் மனிதர்களை பந்தங்களிலிருந்து விடுபடச் செய்து அவர்களுக்கு அத்தியந்த சௌக்கியத்தை அளிக்கின்றன.
சாயி மகாராஜ் இம்மாத்ரியான தலை சிறந்த ஞாநிகளுள் ஒருவர்; அளவிலா ஆன்மீகச் செல்வம் பெற்றவர்; ஸ்ரீமான். ஆத்மாவிலேயே எந்நேரமும் மூழ்கியவராயினும் அவர் ஒரு பக்கீரைப் போலவே வாழ்க்கை நடத்தினார்
அவர் எல்லாரையும் சமமாகவே பார்த்தார்; 'நான்' 'எனது' என்னும் எண்ணமே அவருக்கு இல்லை; எல்லா உயிர்களிலும் இறைவனைக் கண்டதால் அவற்றிடம் தயை காட்டினார்.
No comments:
Post a Comment