valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 3 January 2013

ஷிர்டி சாயி பாபா

சாந்தோர்கருக்கு அவர் விவரமான கடிதம் ஒன்று எழுதினார். சாந்தோர்கரும் உடனே கிளம்பி, பரமானந்த் என்னும் பிரசித்தி பெற்ற டாக்டரை அழைத்துக் கொண்டு ஷீரடிக்கு வந்தார்.

தீக்காயத்தின் எரிச்சலை அடக்கக்கூடிய பலவிதமான மருந்துகளை எடுத்துக் கொண்டு, டாக்டர் பரமானந்தையும் கூட அழைத்துக் கொண்டு, நானா சாஹேப் சாந்தோர்கர் ஷீரடிக்கு வந்து பாபாவின் எதிரில் நின்றார்.

பாபாவை வணங்கிவிட்டு, குசலம் விசாரித்துவிட்டு தாம் வந்த காரியம் என்ன என்பதையும் விளக்கி, தீக்காயம் ஏற்பட்ட கையைக் காட்டுமாறு கேட்டுக் கொண்டார்.

ஏற்கெனவே, தீக்காயம் பட்ட அன்றே பாகோஜி சிந்தே  பாபாவின் கைக்கு நெய் தடவி ஓர் இலையை சுற்றி அதன்மேல் இறுக்கமாகக் கட்டுப் போட்டிருந்தார்.

கட்டுகளைப் பிரித்து கையைப் பார்த்தபின், டாக்டர் பரமாந்திற்கும் காண்பிக்க வேண்டும்; முறையான மருத்துவம் ஆரம்பிக்க வேண்டும்; பாபா சீக்கிரமாக் குணமடைய வேண்டும்.

இந்த நல்லெண்ணத்துடன் நானா பாபாவைப் பலவிதமாகக் கெஞ்சி வேண்டி கொண்டார். டாக்டர் பரமானந்தும் கையின் நிலைமையை பார்க்க வேண்டும் என்பதற்காக கட்டுகளைப் பிரித்துவிட பாபாவைத் தூண்டும் வகையில் பலமுறைகள் முயன்றார்.

பாபா, "அல்லாவே நம் வைத்தியர்" என்று திரும்பத் திருப்பத் விளம்பிக் கொண்டு, "நாளைக்குப் பார்க்கலாம், நாளைக்குப் பார்க்கலாம்" என்று சொல்லி இழுத்தடித்து விட்டார். அவருடைய கையை டாக்டரிடம் காட்டவே இல்லை; இது பற்றி பாபாவுக்கு வருத்தமும் ஏதும் இல்லை.

டாக்டர் பரமானந்த் கொண்டுவந்த மருந்துகள் ஷீரடியின் காற்றை சுவாசிக்கவே இல்லை. ஆனால், இந்நிகழ்ச்சியின் மூலமாக அவர் சாயி தரிசனம் செய்து மகிழ்ச்சியடைய வேண்டுமென்று விதிக்கப் பட்டிருந்தது போலும்.

பாகோஜிக்கு மட்டுமே பாபாவுக்கு தினமும் சேவை செய்யும் உரிமை அளிக்கப் பட்டிருந்தது. ஆகவே பாகோஜி மட்டுமே தினமும் கையை உருவி விடுவார். இதன் விளைவாக சில நாள்களில் கை குணமடைந்தது. எல்லாரும் நிம்மதியடைந்து சந்தோஷப் பட்டனர்.

கை குணமடைந்த பின்னரும், தினந்தோறும் காலை வேளையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கட்டுகளைப் பிரிக்க வைத்து, உருவி விட்டபின் ,மறுபடியும் கட்டுகளைப் போட்டுக் கொள்ள வாய்த்த பாபாவின் தணியாத ஆவல் என்னாவாக இருக்க முடியும் என்று யாருக்கும் தெரியாது போயிற்று.

வலியோ புண்ணோ எதுவுமே இல்லாத உறுப்பு, தினமும் மிகுந்த அக்கறையுடன் கவனிக்கப் பட்டது. தீக்காயமோ அல்லது புண்ணோ இல்லாத இடத்தில்  தினமும் நெய் தடவி உருவப் பட்டது. இந்த சேவை பாபா மஹா  சமாதி அடையும் வரை தொடர்ந்தது.!


No comments:

Post a Comment