ஷிர்டி சாயி சத் சரிதம்
ஒருமுறை முஹர்ரம் பண்டிகை நெருங்கியபோது சில முஸ்லீம்கள் ஒரு தாபூதைக் (பாவாடையைக்) கட்டிக் கொண்டு கிராமத்தினுள் ஊர்வலமாக எடுத்து செல்லவேண்டுமென்று விரும்பினர்.
பாபாவின் அனுமதி கிடைத்த பிறகு ஒரு பாடை கட்டப்பட்டு நான்கு நாள்கள் வைக்கப் பட்டிருந்தது. ஐந்தாவது நாள், மனத்தில் சுகமும் இன்றி துக்கமும் இன்றி அது காலி செய்யப் பட்டது.
முஸ்லீம் என்று நினைத்தால் அவருக்குக் காத்து குத்தப் பட்டிருந்தது. ஹிந்து என்று நினைத்தால் அவருக்கு சுன்னத் செய்யப் பட்டிருந்தது. அவதார புருஷரான சாயி ஹிந்துவும் அல்லர்; முஸ்லீமும் அல்லர்.
ஹிந்துவென்று சொன்னால், அவர் சதா மசூதியிலேயே வாழ்ந்தார். முஸ்லீம் என்று சொன்னால், இரவு பகலாக மசூதியில் அக்கினி எரிந்து கொண்டிருக்கிறது.
இந்த மசூதியில் எந்திரத்தில் மாவு அரைக்கப்பட்டது. சங்கும் மணிகளும் முழங்கின. அக்கினியில் ஹவிஸ் (படையல்) இடப்பட்டது. இச் சூழலில் அவரை முஸ்லீம் என்று எவ்வாறு சொல்ல முடியும்? (மேற்கண்டவை இஸ்லாமிய மதத்தினருக்கு சம்மதம் இல்லாதவை)
மசூதியில் சதா பஜனை நடந்தது. அன்னதானமும் நடந்தது. ஹிந்துக்கள் அவருக்குப் பாத பூஜை செய்தனர்; அவர் எப்படி முஸ்லீம் ஆக முடியும்?
முஸ்லீமாக இருப்பின் உயர்குல பிராமணர்கள் எப்படி அவரை வணங்கினர்? அக்கினி ஹோத்திரம் செய்யும் வேதம் ஓதிய பிராமணர்கள், மடி, ஆசார நியதிகளை தூக்கி எறிந்துவிட்டு, எப்படி அவருக்கு நமஸ்காரம் செய்தனர்?
இவ்விதமாக மக்கள் வியந்து போனார்கள். இது எவ்வாறு நடக்க முடியும் என்று நேரில் கண்டு கொள்ள வந்தவர்களும் மேற்சொன்னவாறே நடந்து கொண்டார்கள்! தரிசனம் செய்தவுடனே ஊமையராகிப் போனார்கள்!
சதாசர்வ காலமும் ஹரியைச் சரணடைந்தவரை ஹிந்துவேன்றோ முஸ்லீமேன்றோ எவ்வாறு சொல்ல முடியும்? அவர் பிற்படுத்தப் பட்டவராக இருக்கலாம்; அல்லது ஜாதியே எதுவும் இல்லாதவராகவும் இருக்கலாம். ஜாதி இவர் விஷயத்தில் அணுவளவு கூடப் பிரமாணம் ஆகாது.
தேஹாபிமானம் இல்லாத சித்தருக்கு ஹிந்துவோ, முஸ்லீமோ, கீழ் ஜாதியோ, மேல் ஜாதியோ, எந்த வித்தியாசமும் இல்லை. ஜாதிப் பாகுபாடு என்னும் எண்ணமே அவருக்கு இல்லை.
பக்கீர்களுடன் அமர்ந்து உணவு உண்ணும்போது அவர் மாமிசம் சாப்பிடுவார்; சமயம் நேர்ந்தபோது மீனும் சாப்பிடுவார். சோற்றை நாய் தீண்ட நேர்ந்து விட்டாலும் சரி, வெறுப்படைந்து முகம் கோண மாட்டார்.
No comments:
Post a Comment