இவ்விரண்டு கொடிகளில் ஒன்று நிமோன் கருடையது; மற்றொன்று தாமு அண்ணாவினுடையது. இரண்டும் கோலாகலமாக ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்டு, மசூதியின் உச்சியில் கட்டப்பட்டுப் பட்டொளி வீசிப் பறக்கும்.
ஷிர்டிக்குப் பெருமையும் ஆனந்தமும் அளிக்கும் ஸ்ரீ ராம நவமி கொண்டாடும் யோசனை உருஸ் திரு விழாவிலிருந்து எப்படி உதித்தது என்னும் சுவாரசியமான விவரத்தை இப்பொழுது கேளுங்கள்.
1911 ஆம் ஆண்டில் முதன் முதலாக ஸ்ரீ ராமநவமி உற்சவம் கொண்டாடப்பட்டது. இந்த யோசனை உருஸ் திருவிழா விலிருந்து உதித்ததே. தொடர்ச்சியாகத் தடங்கல் ஏதும் இன்றி இன்றும் ஸ்ரீ ராம நவமி கொண்டாடப் படுகிறது.
இந்த யோசனை முதன் முதலில், பிரபலமான கீர்தங்கர் கிருஷ்ண ஜாகேச்வர் பீஷ்ம என்பவரால் கருத்துருவாக்கப் பட்டது. எல்லாருடைய நலனுக்காவவும் ஸ்ரீ ராம் ஜன்ம உற்சவம் கொண்டாடப் பட வேண்டும் என்று அவர் நினைத்தார்.
அதுவரை உருஸ் திருவிழா மட்டுமே ஸ்ரீ ராம ஜன்ம தினத்தன்று வருடா வருடம் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வந்தது. ஸ்ரீ ராம ஜன்மோர்சவம் அவ்வருடம் (1911 ) கொண்டாடுவது என்னும் அற்புதமான யோசனை இதிலிருந்தே எழுந்தது.
பீஷ்மா ஒருநாள் வாடாவில் தெளிந்த மனதுடன் ஓய்வெடுத்து கொண்டு இருந்தார். காகா மகாஜனி அந்நேரத்தில் பூஜைக்கு வேண்டிய சாமான்களுடன் மசூதிக்கு போகத் தயார் செய்து கொண்டிருதார்.
சாயி தரிசனம் செய்வதற்காகவும் உருஸ் பண்டிகையின் கோலாகலத்தை அனுபவிப்பதற்காகவும் காகா ஷீரடிக்கு ஒருநாள் முன்னதாகவே வந்து விடுவார்.
இதை ஒரு உசிதமான நேரமாகக் கருதி, பீஷ்மா காகாவை கேட்டார். "என்னுடைய மனதில் ஓர் அருமையான யோசனை தோன்றியிருக்கிறது. நீர் அதை நடத்திக் காட்ட உதவி செய்வீரா?
"உருஸ் பண்டிகை இங்கு வருடாவருடம் கொண்டாடப் படுகிறது. அந்த நாள் ஸ்ரீ ராம் ஜன்ம தினமாகவும் இருப்பதால், மேற்கொண்டு ஏதும் பிரயாசைப் படாமலேயே ஸ்ரீ ராம் ஜன்மோர்சவதையும் கொண்டாடுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பை அளிக்கிறது".
காகா இந்த யோசனையை விரும்பினார். "பாபாவினுடைய அனுமதியை பெற வேண்டும். எல்லாமே அவருடைய ஆக்ஞையில்தான் இருக்கிறது. ஆக்ஞை கிடைத்துவிட்டால் அதன் பிறகு தடங்கலோ தாமதமோ ஏதும் இருக்காது".
ஷிர்டிக்குப் பெருமையும் ஆனந்தமும் அளிக்கும் ஸ்ரீ ராம நவமி கொண்டாடும் யோசனை உருஸ் திரு விழாவிலிருந்து எப்படி உதித்தது என்னும் சுவாரசியமான விவரத்தை இப்பொழுது கேளுங்கள்.
1911 ஆம் ஆண்டில் முதன் முதலாக ஸ்ரீ ராமநவமி உற்சவம் கொண்டாடப்பட்டது. இந்த யோசனை உருஸ் திருவிழா விலிருந்து உதித்ததே. தொடர்ச்சியாகத் தடங்கல் ஏதும் இன்றி இன்றும் ஸ்ரீ ராம நவமி கொண்டாடப் படுகிறது.
இந்த யோசனை முதன் முதலில், பிரபலமான கீர்தங்கர் கிருஷ்ண ஜாகேச்வர் பீஷ்ம என்பவரால் கருத்துருவாக்கப் பட்டது. எல்லாருடைய நலனுக்காவவும் ஸ்ரீ ராம் ஜன்ம உற்சவம் கொண்டாடப் பட வேண்டும் என்று அவர் நினைத்தார்.
அதுவரை உருஸ் திருவிழா மட்டுமே ஸ்ரீ ராம ஜன்ம தினத்தன்று வருடா வருடம் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வந்தது. ஸ்ரீ ராம ஜன்மோர்சவம் அவ்வருடம் (1911 ) கொண்டாடுவது என்னும் அற்புதமான யோசனை இதிலிருந்தே எழுந்தது.
பீஷ்மா ஒருநாள் வாடாவில் தெளிந்த மனதுடன் ஓய்வெடுத்து கொண்டு இருந்தார். காகா மகாஜனி அந்நேரத்தில் பூஜைக்கு வேண்டிய சாமான்களுடன் மசூதிக்கு போகத் தயார் செய்து கொண்டிருதார்.
சாயி தரிசனம் செய்வதற்காகவும் உருஸ் பண்டிகையின் கோலாகலத்தை அனுபவிப்பதற்காகவும் காகா ஷீரடிக்கு ஒருநாள் முன்னதாகவே வந்து விடுவார்.
இதை ஒரு உசிதமான நேரமாகக் கருதி, பீஷ்மா காகாவை கேட்டார். "என்னுடைய மனதில் ஓர் அருமையான யோசனை தோன்றியிருக்கிறது. நீர் அதை நடத்திக் காட்ட உதவி செய்வீரா?
"உருஸ் பண்டிகை இங்கு வருடாவருடம் கொண்டாடப் படுகிறது. அந்த நாள் ஸ்ரீ ராம் ஜன்ம தினமாகவும் இருப்பதால், மேற்கொண்டு ஏதும் பிரயாசைப் படாமலேயே ஸ்ரீ ராம் ஜன்மோர்சவதையும் கொண்டாடுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பை அளிக்கிறது".
காகா இந்த யோசனையை விரும்பினார். "பாபாவினுடைய அனுமதியை பெற வேண்டும். எல்லாமே அவருடைய ஆக்ஞையில்தான் இருக்கிறது. ஆக்ஞை கிடைத்துவிட்டால் அதன் பிறகு தடங்கலோ தாமதமோ ஏதும் இருக்காது".
No comments:
Post a Comment